மேலும் அறிய

நாயை ஸ்கூட்டரில் கட்டி தரதரவென இழுத்துச்சென்று கொன்ற கொடூர பெண்கள் : பாய்ந்தது வன்கொடுமைச் சட்டம்!

கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு வீட்டு விலங்குகள், குறிப்பாக நாய்களுக்கு எதிரான கொடுமைகள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகின்றது.

ஜி.நாகராஜன் தனது நூலில் மனிதர்களைப் பற்றிப் பொதுவான ஒரு கருத்தைக் குறிப்பிட்டிருப்பார். அது.. 'மனிதன், மகத்தான சல்லிப்பயல்!' என்பது.

அதுவும் தன்னால் அதிகாரம் செலுத்த முடியும் என்ற நிலையில் அவன் நிற்கும்போது தனது சல்லித்தனத்தை மகத்தாகவே வெளிப்படுத்துவான். அது சாதி ரீதியாகவோ, இன ரீதியாகவோ, பாலின ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ பீறிக்கொண்டு வெளிப்படும். அந்த வக்கிரம் சில நேரங்களில் தன்னைவிட ஓரறிவு குறைவாகவே கொண்ட விலங்குகளின் மீதும் பாய்ந்துவிடுகிறது.

அப்படியொரு சல்லித்தனமான செயலைச் செய்திருக்கின்றனர் இரண்டு பெண்கள். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்த சகோதரிகள் தான் இந்தக் கொடூர சம்பவத்தை அரங்கேற்றியவர்கள். தாங்கள் வளர்த்த நாய் வீட்டிலிருந்த குழந்தை ஒன்றை தாக்கிவிட அதற்காக அந்த நாயை ஸ்கூட்டரில் கட்டி தெருவெங்கு தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். உள்ளூர்வாசிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சற்றும் இரக்கமின்றி அந்தச் செயலை அவர்கள் செய்துள்ளனர். பக்ராநங்கல் அணைப் பகுதியில் நாயை அவிழ்த்துவிட்டு வருவதே அவர்களின் திட்டமாம். ஆனால் வழி நெடுக சாலையில் இழுத்துவரப்பட்ட நாய் உடல் முழுவதும் தோல் கிழிந்து ரத்தம் கொட்டிய நிலையில் காயம் காரணமாக அந்த நாய் உயிரிழந்துவிட்டது. 4 நாட்கள் உயிருக்குப் போராடி உயிரிழந்தது அந்த வாயில்லா ஜீவன். சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் ஜாமீனில் வெளிவந்துவிட்டனர். அவர்கள் மீது விலங்குகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சம்பவம் குறித்து காவல் அதிகாரி குர்ப்ரீத் பிந்தர் கூறுகையில், அந்த இரண்டு பெண்களும் அந்த நாயை வீட்டில் வளர்த்துவந்துள்ளனர். வீட்டிலுள்ள குழந்தையை அந்த நாய் தாக்கிவிடவே இவ்வாறு செய்ததாகத் தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. காவல்துறையிலிருந்து தப்பிக்க வண்டியின் நிறத்தை பெண்கள் மாற்றியதாகக் கூறப்படுகிறது. நாங்கள் வாகனத்தைக் கைப்பற்றிவிட்டோம். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

அதிர்ச்சித் தகவல்..

கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு வீட்டு விலங்குகள், குறிப்பாக நாய்களுக்கு எதிரான கொடுமைகள் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகின்றது. தெருநாய்கள் அதிகமுள்ள மும்பையில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி இது உறுதியாகியுள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தால் வேலை பறிபோய்விட்ட வெறுப்பு, செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால்தான் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகள் கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இப்போது அதிகரித்திருக்கின்றன,என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்பு செய்திகள்

" பெண் வங்கி மேலாளரை ஏமாற்றிய காவலர் " ஜெயிலுக்கு போறேன் , கல்யாணம் பண்ண மாட்டேன் - காவலர்
தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம் - கொலையா ? தற்கொலையா ?
தண்டவாளத்தில் ஆடையின்றி கிடந்த பெண் சடலம் - கொலையா ? தற்கொலையா ?
லஞ்ச ஒழிப்புத்துறையில் வெளிப்படைத்தன்மைக்கு 'இடமாற்றம் தான்' தீர்வு - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் !
லஞ்ச ஒழிப்புத்துறையில் வெளிப்படைத்தன்மைக்கு 'இடமாற்றம் தான்' தீர்வு - சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் !
மயக்க மருந்து கொடுத்து ஜிம் பெண் உரிமையாளர் பலாத்காரம் !! வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது
மயக்க மருந்து கொடுத்து ஜிம் பெண் உரிமையாளர் பலாத்காரம் !! வீடியோ எடுத்து மிரட்டிய தம்பதி கைது

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mayor Priya: மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
மீண்டும் வாய்விட்ட மேயர் ப்ரியா? வீடியோ வைரல் ”அளவா பொய் சொல்லுங்க மேடம்” நெட்டிசன்ஸ் அட்டாக்
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
RBI Plans Plastic Notes: கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
Embed widget