மேலும் அறிய

Shocking Video: படுக்கையில் ஏன் சிறுநீர் கழித்தாய்? வயதான தாயை ஈவு இரக்கமின்றி கொடூரமாக தாக்கிய மகன்...பகீர் வீடியோ!

படுக்கையில் சிறுநீர் கழித்த தாயை, அவரது மகன் கொடூரமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தாயை கொடூரமாக தாக்கிய மகன்:

பஞ்சாப் மாநிலம் ரோபர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா ராணி (73). இவரது கணவர் சமீபத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவருக்கு மகன், மகள் உள்ளார். எனவே, இவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இவரது மகன் அங்கூர் வர்மா. இவர் வழக்கறிஞராக உள்ளார். இவரது மனைவி சுதா. இந்த தம்பதிக்கு சிறு வயதில் ஒரு மகன் உள்ளார். எனவே,  அங்கூர் வர்மாவின் தாய் ஆஷா ராணி  உடல் நிலை சரியில்லாமல் படுத்தப்படியே இருப்பார். இந்நிலையில், தான் தனது மகன், மருமகள் மற்றும் அவரது பேரனால் மூதாட்டி ஆஷா ராணி கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.   இந்த வீடியோ காட்சிகள் மூதாட்டி ஆஷா ராணியின் அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. 

பதற வைக்கும் வீடியோ:

அந்த வீடியோவில், படுக்கையில் மூதாட்டி சிறுநீர் கழித்திருந்தார். இதனை பார்த்த அவரது பேரன், அவரது பெற்றோருடன் தெரிவிக்கிறார். இதனை அடுத்து, மூதாட்டியின் மகன் அங்கூர் வர்மா, அவரது தாயின் படுக்கையை தொட்டு பார்த்து ஆத்திரமடைந்தார். பின்னர், கழிவறையில் இருந்த மூதாட்டியை, அவரது மகன் தரதரவென இழுத்து வந்துள்ளார்.  பின்னர், அவரது படுக்கையில் போட்டு அவரை ஈவு இரக்கமின்றி அடித்திருக்கிறார். இதனை அங்கூர் வர்மாவின் மகன், மனைவி பார்த்துக் கொண்டு, மூதாட்டியை திட்டி கொண்டு இருக்கின்றனர். பின்னர், மூதாட்டியை, அவரது மகனான அங்கூர் வர்மா படுக்கையிலே அவரை சரமாரியாக அடித்துள்ளார்.

அவரது முதுகு, கன்னத்தில் இரக்கமின்றி அடித்திருக்கிறார்.  பின்னர், தலையிலும் அடித்துள்ளார். சிறுநீர் ஏன் கழித்தாய் என்று பலமுறை கேட்டு துன்புறுத்தியிருக்கிறார்.  மூதாட்டி தெரியாமல் செய்தேன் என்று கூறிய பின்னும், தொடர்ந்து தாக்கி கொண்டுள்ளார். ஒரு கட்டத்தில், மூதாட்டியின் முடியை பிடித்து மனசாட்சியை இல்லாமல் கொடூரமாக அடித்துள்ளார். பின்னர், அவரது மனைவியும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. மூதாட்டியை அவரது மகன் கொடூரமாக அடித்து விட்டு அவரை அதே படுக்கையில் படுக்க வைத்து சென்றுள்ளது போன்று வீடியோவில் பதிவாகி உள்ளது. 

வழக்குப்பதிவு:

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டி அவரது மகளிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகள் தீப்ஷிகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில்  அங்கூர் ஷர்மா மற்றும் அவரது மனைவி மீது 24 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.  இதனை அடுத்து, அவரது வீட்டிற்கு சென்று, மூதாட்டி ஆஷா ராணியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். படுக்கையில் சிறுநீர் கழித்த தாயை, அவரது மகன் கொடூரமாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

" நான் ஒருத்தர கொலை பண்ணிட்டேன் " நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Thoothukudi Lock-up Death : 'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
CM Vijay: நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட 3 மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட 3 மெகா ஹிட் படங்கள்!
Embed widget