![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
புதுச்சேரியில் பரபரப்பு - எம்- சாண்ட் ஏற்றி வந்த லாரியில் ஆண் சடலம்
: வில்லியனூர் பகுதிக்கு எம்- சாண்ட் ஏற்றி வந்த லாரியில் ஆண் சடலம். கொலையா என போலீசார் விசாரணை.
![புதுச்சேரியில் பரபரப்பு - எம்- சாண்ட் ஏற்றி வந்த லாரியில் ஆண் சடலம் Puducherry: A man's body was found in a truck carrying M-Sand to villiyanur area TNN புதுச்சேரியில் பரபரப்பு - எம்- சாண்ட் ஏற்றி வந்த லாரியில் ஆண் சடலம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/20/52c3910250e8fcb7933d67cca028f9081674232238766194_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வானூரில் இருந்து புதுவை சுல்தான்பேட்டைக்கு லாரியில் வந்த எம்- சாண்டில் ஆண் சடலம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி வில்லியனூர் பரசுராமபுரம் பகுதியை சேர்ந்தவர் அனந்தகிருஷ்ணன். இவர் ஜல்லி, மணல் வைத்து புளுமெட்டல் தொழில் செய்து வருகிறார். இவரிடம் பெருமுக்கல் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்ற ஓட்டுனர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சக்திவேல் டிப்பர் லாரியை எடுத்துக்கொண்டு தொள்ளமூர் சென்று எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்து வில்லியனூர், சுல்தான்பேட்டை, வளர்பிறை நகர் பகுதியில் கொட்டியுள்ளார்.
அப்போது திடீரென டிப்பர் லாரியில் இருந்து இறந்த நிலையில் 45 வயது மதிக்க தக்க ஆண் சடலம் கீழே வந்து விழுந்துள்ளது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் வில்லியனூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே காவல் ஆய்வாளர் வேலய்யன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு, காவலர் சங்கர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு இதுசம்பந்தமாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)