மேலும் அறிய

மாணவி தற்கொலை விவகாரம் : ’பஸ்சில் செல்லும்போது இடிப்பதுபோல் நினைத்துக்கொள்’ : வழக்கறிஞர் தந்த அதிர்ச்சி தகவல்

"தொடர்ந்து 6 மாதமாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். மாணவி பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் அளித்தபோது, பஸ்சில் செல்லும்போது இடிப்பார்களே, அது போல நினைத்துக்கொள் என கூறியுள்ளார்."

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 11 ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள  தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி, மாற்றுச் சான்றிதழ் பகுதியை வேறொரு பள்ளிக்கு மாறினார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்டக் கொண்டு, மின் விசிறியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்த போது பெற்றோர்கள் கதவு பூட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்கதாதால், சந்தேகமடைந்த பெற்றோர்கள் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றனர். அப்போது மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் மாணவி பிணமாக தொங்கிக் கொண்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து உக்கடம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் செய்து வருகின்றனர். மாணவியின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே ‘யாரையும் சும்மா விடக்கூடாது’ என 3 பேர்களை குறிப்பிட்டு மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மாணவி தற்கொலை விவகாரம் : ’பஸ்சில் செல்லும்போது இடிப்பதுபோல் நினைத்துக்கொள்’ : வழக்கறிஞர் தந்த அதிர்ச்சி தகவல்

மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ”மாணவி அந்த பள்ளியை பிடிக்கவில்லை என இரண்டு மாதங்களுக்கு முன்பு வேறொரு பள்ளிக்கு மாறினார். பள்ளி மாற்றத்திற்கான காரணம் குறித்து கேட்ட போது, முறையாக பதிலளிக்கவில்லை. கடந்த 6 மாதமாக அடிக்கடி வீட்டில் அழுவாள். காரணம் கேட்டாலும் சொல்ல மாட்டாள். 

மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் போன் எண்ணை வாங்கி சாட் செய்து வந்துள்ளார். ஆசிரியர் என்ற முறையில் மாணவியும் பேசி வந்துள்ளார். பள்ளியில் தாமதம் ஏற்பட்டால் தனது வண்டியில் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டுள்ளார். கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பள்ளி ஆடிட்டோரியத்திற்கு வரவழைத்த மிதுன் சக்கரவர்த்தி, பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. வெளியே தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டு விடும் என மறைத்து விட்டனர். அப்பள்ளி தலைமையாசிரியர் பெற்றோரிடமும் சொல்ல வேண்டாம் என சொல்லியுள்ளார். உளவியல் ஆலோசணையும் பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது. மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி தற்கொலை செய்து கொண்டார்” என அவர் தெரிவித்தார்.

இது குறித்து பள்ளி தலைமையாசிரியை கூறுகையில், ”கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் குடும்பத்தோடு மதுரைக்கு இடம் பெயர இருப்பதால், மாணவியின் குடும்பத்தினர் மாற்றுச்சான்றிதழ் கேட்டனர். இரு நாட்களில் அவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்து விட்டோம். அதற்கு பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை” என்றார். அதேசமயம் ஆசிரியர் மிதுன் குறித்து பேச மறுத்த அவர்,  ”பள்ளி தாளாளரிடம் பேசாமல் எதுவும் பேச முடியாது” என்றார்.


மாணவி தற்கொலை விவகாரம் : ’பஸ்சில் செல்லும்போது இடிப்பதுபோல் நினைத்துக்கொள்’ : வழக்கறிஞர் தந்த அதிர்ச்சி தகவல்

இந்நிலையில் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மாணவி தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி புகைப்படத்தை செருப்பால் அடித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மாணவி புகார் அளித்தும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள பல்வேறு அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 


மாணவி தற்கொலை விவகாரம் : ’பஸ்சில் செல்லும்போது இடிப்பதுபோல் நினைத்துக்கொள்’ : வழக்கறிஞர் தந்த அதிர்ச்சி தகவல்

அப்போது தபெதிக அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் லலிதா கூறும் போது, ”ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தொடர்ந்து 6 மாதமாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். மாணவி பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் அளித்தபோது, பஸ்சில் செல்லும் போது இடிப்பார்களே, அதுபோல நினைத்துக் கொள் என கூறியுள்ளார். இச்சம்பவம் பள்ளி நிர்வாகம் மூடி மறைத்துள்ளது. மாணவி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். பெற்றோருக்கு தெரியாமல் பள்ளி நிர்வாகம் மாணவிக்கு தனியாக கவுன்சிலிங் கொடுத்துள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மற்ற மாணவிகளிடமும் விசாரணை நடத்த வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்: இரு பிரிவினரிடையே மீண்டும் மோதல்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்: இரு பிரிவினரிடையே மீண்டும் மோதல்!
திருமணம் மீறிய உறவு !! திருமணம் செய்ய வற்புறுத்திய கள்ளக் காதலி !! முகம் சிதைத்து கொடூர கொலை
திருமணம் மீறிய உறவு !! திருமணம் செய்ய வற்புறுத்திய கள்ளக் காதலி !! முகம் சிதைத்து கொடூர கொலை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
Annamalai: உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
JEE Advanced 2026 Results: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்க்‌ஷீட் பெறுவது எப்படி? கட் ஆஃப் எவ்ளோ?
JEE Advanced 2026 Results: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்க்‌ஷீட் பெறுவது எப்படி? கட் ஆஃப் எவ்ளோ?
ஷிவராஜ்குமார் நடிக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த்..புதிய பட ப்ரோமோ
ஷிவராஜ்குமார் நடிக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த்..புதிய பட ப்ரோமோ
CV Shanmugam Next Plan : சி.வி.சண்முகத்தின் ராஜினாமா முடிவை மாற்றிய அந்த ஒரு போன் கால்.! திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
சி.வி.சண்முகத்தின் ராஜினாமா முடிவை மாற்றிய அந்த ஒரு போன் கால்.! திடீர் ட்விஸ்ட்- நடந்தது என்ன.?
Mamata Banerjee: ஆப்சென்டான 60 எம்.எல்.ஏக்கள், அதிர்ந்து போன மம்தா பானர்ஜி..! பாஜக வேலையை காட்டியதா?
ஆப்சென்டான 60 எம்.எல்.ஏக்கள், அதிர்ந்து போன மம்தா பானர்ஜி..! பாஜக வேலையை காட்டியதா?
CM Vijay: திருச்சி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கெடுக்க திமுக சதி? - விஜயை விளாசும் நெட்டிசன்கள்!
CM Vijay: திருச்சி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை கெடுக்க திமுக சதி? - விஜயை விளாசும் நெட்டிசன்கள்!
TN DGP: புதிய டிஜிபி இதுவரை பொறுப்பேற்காதது ஏன்? மகேஷ் குமார் அகர்வால் எங்கே? சிஎம் விஜய் டிக் அடித்தது ஏன்?
புதிய டிஜிபி இதுவரை பொறுப்பேற்காதது ஏன்? மகேஷ் குமார் அகர்வால் எங்கே? சிஎம் விஜய் டிக் அடித்தது ஏன்?
Embed widget