மேலும் அறிய

மாணவி தற்கொலை விவகாரம் : ’பஸ்சில் செல்லும்போது இடிப்பதுபோல் நினைத்துக்கொள்’ : வழக்கறிஞர் தந்த அதிர்ச்சி தகவல்

"தொடர்ந்து 6 மாதமாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். மாணவி பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் அளித்தபோது, பஸ்சில் செல்லும்போது இடிப்பார்களே, அது போல நினைத்துக்கொள் என கூறியுள்ளார்."

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 11 ம் வகுப்பு வரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள  தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியில் படிக்க விரும்பவில்லை எனக்கூறி, மாற்றுச் சான்றிதழ் பகுதியை வேறொரு பள்ளிக்கு மாறினார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்டக் கொண்டு, மின் விசிறியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்த போது பெற்றோர்கள் கதவு பூட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்கதாதால், சந்தேகமடைந்த பெற்றோர்கள் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றனர். அப்போது மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில் மாணவி பிணமாக தொங்கிக் கொண்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து உக்கடம் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் செய்து வருகின்றனர். மாணவியின் உடல் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே ‘யாரையும் சும்மா விடக்கூடாது’ என 3 பேர்களை குறிப்பிட்டு மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மாணவி தற்கொலை விவகாரம் : ’பஸ்சில் செல்லும்போது இடிப்பதுபோல் நினைத்துக்கொள்’ : வழக்கறிஞர் தந்த அதிர்ச்சி தகவல்

மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ”மாணவி அந்த பள்ளியை பிடிக்கவில்லை என இரண்டு மாதங்களுக்கு முன்பு வேறொரு பள்ளிக்கு மாறினார். பள்ளி மாற்றத்திற்கான காரணம் குறித்து கேட்ட போது, முறையாக பதிலளிக்கவில்லை. கடந்த 6 மாதமாக அடிக்கடி வீட்டில் அழுவாள். காரணம் கேட்டாலும் சொல்ல மாட்டாள். 

மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் போன் எண்ணை வாங்கி சாட் செய்து வந்துள்ளார். ஆசிரியர் என்ற முறையில் மாணவியும் பேசி வந்துள்ளார். பள்ளியில் தாமதம் ஏற்பட்டால் தனது வண்டியில் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டுள்ளார். கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் பள்ளி ஆடிட்டோரியத்திற்கு வரவழைத்த மிதுன் சக்கரவர்த்தி, பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. வெளியே தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டு விடும் என மறைத்து விட்டனர். அப்பள்ளி தலைமையாசிரியர் பெற்றோரிடமும் சொல்ல வேண்டாம் என சொல்லியுள்ளார். உளவியல் ஆலோசணையும் பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது. மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி தற்கொலை செய்து கொண்டார்” என அவர் தெரிவித்தார்.

இது குறித்து பள்ளி தலைமையாசிரியை கூறுகையில், ”கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் குடும்பத்தோடு மதுரைக்கு இடம் பெயர இருப்பதால், மாணவியின் குடும்பத்தினர் மாற்றுச்சான்றிதழ் கேட்டனர். இரு நாட்களில் அவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்து விட்டோம். அதற்கு பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை” என்றார். அதேசமயம் ஆசிரியர் மிதுன் குறித்து பேச மறுத்த அவர்,  ”பள்ளி தாளாளரிடம் பேசாமல் எதுவும் பேச முடியாது” என்றார்.


மாணவி தற்கொலை விவகாரம் : ’பஸ்சில் செல்லும்போது இடிப்பதுபோல் நினைத்துக்கொள்’ : வழக்கறிஞர் தந்த அதிர்ச்சி தகவல்

இந்நிலையில் கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மாணவி தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி புகைப்படத்தை செருப்பால் அடித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மாணவி புகார் அளித்தும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத தனியார் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள பல்வேறு அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 


மாணவி தற்கொலை விவகாரம் : ’பஸ்சில் செல்லும்போது இடிப்பதுபோல் நினைத்துக்கொள்’ : வழக்கறிஞர் தந்த அதிர்ச்சி தகவல்

அப்போது தபெதிக அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் லலிதா கூறும் போது, ”ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தொடர்ந்து 6 மாதமாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். மாணவி பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் அளித்தபோது, பஸ்சில் செல்லும் போது இடிப்பார்களே, அதுபோல நினைத்துக் கொள் என கூறியுள்ளார். இச்சம்பவம் பள்ளி நிர்வாகம் மூடி மறைத்துள்ளது. மாணவி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். பெற்றோருக்கு தெரியாமல் பள்ளி நிர்வாகம் மாணவிக்கு தனியாக கவுன்சிலிங் கொடுத்துள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மற்ற மாணவிகளிடமும் விசாரணை நடத்த வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

லிவிங் டூ கெதர் முதல் சிறை வரை.. பழிவாங்கத் துடித்த காதலனுக்கு கார் டிரைவர் வைத்த 'செக்'!
லிவிங் டூ கெதர் முதல் சிறை வரை.. பழிவாங்கத் துடித்த காதலனுக்கு கார் டிரைவர் வைத்த 'செக்'!
மயிலாடுதுறையில் பயங்கரம்: காங்கிரஸ் நிர்வாகிகள் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல்! கொடிகள் காலணிகளால் மிதித்து அவமதிப்பு...!
மயிலாடுதுறையில் பயங்கரம்: காங்கிரஸ் நிர்வாகிகள் மீது திமுகவினர் கொலைவெறி தாக்குதல்! கொடிகள் காலணிகளால் மிதித்து அவமதிப்பு...!
"அம்மா, அப்பா மிஸ் யூ " எழுதி வைத்த கடிதம் - இளம்பெண்ணுக்கு கலைந்த கிரிக்கெட் கனவு
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க அரசு தரப்பு வலியுறுத்தல் - நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க அரசு தரப்பு வலியுறுத்தல் - நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Kanimozhi | ”காங். பக்கத்துல உட்காரணுமா! சீட்டை மாத்தி கொடுங்க” ஓம் பிர்லாவுக்கு கனிமொழி கடிதம்
’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: திருமா இன்று ஆதரவு கொடுப்பாரா? விஜய் முதலமைச்சர் ஆவாரா? உச்சகட்ட பரபரப்பில் தமிழ்நாடு..!
TVK Vijay: திருமா இன்று ஆதரவு கொடுப்பாரா? விஜய் முதலமைச்சர் ஆவாரா? உச்சகட்ட பரபரப்பில் தமிழ்நாடு..!
Raja Sunbramani: தமிழ்நாடே பெருமை..! புதிய முப்படை தலைமை தளபதியாக ராஜா சுப்ரமணி நியமனம் - யார் இவர்?
Raja Sunbramani: தமிழ்நாடே பெருமை..! புதிய முப்படை தலைமை தளபதியாக ராஜா சுப்ரமணி நியமனம் - யார் இவர்?
Thirumavalavan: தவெக-விற்கு ஆதரவா? இல்லையா? நாளை முடிவை அறிவிக்கும் திருமா- தமிழ்நாடே எதிர்பார்ப்பு!
Thirumavalavan: தவெக-விற்கு ஆதரவா? இல்லையா? நாளை முடிவை அறிவிக்கும் திருமா- தமிழ்நாடே எதிர்பார்ப்பு!
திமுக கணக்கு தப்பியது; தவெகவுடன் இணைந்தது ஒழுக்கக்கேடு: காங்கிரஸை வறுத்து எடுத்த மணிசங்கர் ஐயர்
திமுக கணக்கு தப்பியது; தவெகவுடன் இணைந்தது ஒழுக்கக்கேடு: காங்கிரஸை வறுத்து எடுத்த மணிசங்கர் ஐயர்
Tata Nexon: ரூ.10 லட்சத்துக்கும் கம்மி..! நாட்டின் முதல் பனோரமிக் சன்ரூஃப் கார் - நெக்ஸானில் டாடாவின் சம்பவம்
Tata Nexon: ரூ.10 லட்சத்துக்கும் கம்மி..! நாட்டின் முதல் பனோரமிக் சன்ரூஃப் கார் - நெக்ஸானில் டாடாவின் சம்பவம்
TVK Government Formation: திமுக, அதிமுக இல்லாத புது ஆட்சி! முதலமைச்சர் ஆகும் விஜய் - தவெக தொண்டர்கள் குஷி
TVK Government Formation: திமுக, அதிமுக இல்லாத புது ஆட்சி! முதலமைச்சர் ஆகும் விஜய் - தவெக தொண்டர்கள் குஷி
Thirumavalavan: திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா திருமாவளவன்? கிங் மேக்கராகிய விசிக!
Thirumavalavan: திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறாரா திருமாவளவன்? கிங் மேக்கராகிய விசிக!
TVK Vijay: தவெக-வுக்கு 'நோ' சொன்ன ஐயுஎம்எல் - விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த காதர் மொகிதீன்! ஆட்சியமைப்பதில் சிக்கல்?
TVK Vijay: தவெக-வுக்கு 'நோ' சொன்ன ஐயுஎம்எல் - விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த காதர் மொகிதீன்! ஆட்சியமைப்பதில் சிக்கல்?
Embed widget