மேலும் அறிய

திருப்பத்தூர்: தூக்கில் தொங்கிய நிலையில் 7 மாத கர்ப்பிணி.. கொலையா, தற்கொலையா? என விசாரணை!

ஏழு மாத கர்ப்பிணியின் சடலம் தூக்குமாட்டிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது  .இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெண்ணின் உறவினர்கள் அவரது கணவரை கடுமையாக தாக்கி அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஜெயமாதா நகர் பகுதியை சேர்ந்தவர் திலீபன் (28). பெயிண்டர் வேலை செய்து வரும் இவருக்கும் இதே பகுதியை  சேர்ந்த காவியா (21) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று ,  இவர்களுக்கு ஒன்றரை வயதில் சன்சிகா என்ற பெண் குழந்தை உள்ளார் . 

குடிப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள திலீபன் , வேலைக்கு செல்லாமல் தினமும் மனைவி மற்றும் அவர்களது உறவினர்களிடம் குடிக்க பணம்கேட்டு காவியாவை சித்ரவதை செய்து வந்துள்ளார் .


திருப்பத்தூர்: தூக்கில் தொங்கிய நிலையில் 7 மாத கர்ப்பிணி.. கொலையா, தற்கொலையா? என விசாரணை!

தற்போது ஏழு மாதம் கர்ப்பிணியாக இருக்கும் நிலையிலும் காவியாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார் அவரது கணவர் திலீபன்  . இதனை அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் தலையிட்டு இருவருக்கும் சமாதானம் செய்துவந்துள்ளனர் .

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு  மது போதையில் இருந்த திலீபன் தனது மனைவி காவியாவுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டு உள்ளார் .

ஐ.ஓ.பி ஏ.டி.எம் கொள்ளையில், வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என காவல்துறையினர் விசாரணை..!

ஒருகட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் வலுக்கவே , திலீபன் தனது குழந்தை சன்சிகாவை பக்கத்துக்கு வீட்டில் விட்டுவிட்டு மீண்டும்  மனைவி காவியாவை தாக்கியுள்ளார் .

பின்னர் இரவு 11 .30 மணி அளவில் , வீட்டில் இருந்து வெளியே வந்த திலீபன் , தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக பக்கத்து வீட்டுக்காரர்களிடம்  தெரிவித்துள்ளார் .

அதிர்ச்சி அடைந்த அவர்கள் காவியா இறந்த தகவலை உறுதிப்படுத்திக்கொண்டு   , உடனடியாக  காவியாவின் தந்தை  ராஜகுமார்க்கு தெரிவித்துள்ளனர் . மிகுந்த கோபத்துடன் அங்கு வந்த காவியாவின் தந்தை மற்றும் உறவினர்கள் , அங்கிருந்து  தப்பிக்க முயன்ற திலீபனை சரமாரியாக தாக்கினர் . இதில் படுகாயமடைந்த திலீபன் ஜோலார்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் .

மேலும் காவியாவின் தந்தை ராஜகுமார் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை போலீசார் காவியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர் .  காவியாவின் குழந்தையை மீட்டு காவியாவின் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். 

தொடர்ந்து இதுகுறித்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட ஜோலார்பேட்டை போலீசார் , திலீபன் குடித்துவிட்டு மனைவி காவியாவை  சித்ரவதை செய்து வந்ததை உறுதி படுத்திக்கொண்டனர் . மேலும் திருமணம் நடந்து  3 வருடங்களே ஆகும் நிலையில் இந்த வழக்கை  வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர் .

கோவை: 'அடிக்கடி செல்போன் பேசாதே' - கிரிக்கெட் பேட்டால் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர்


திருப்பத்தூர்: தூக்கில் தொங்கிய நிலையில் 7 மாத கர்ப்பிணி.. கொலையா, தற்கொலையா? என விசாரணை!

காவியாவின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் திலீபன் மீது ஜோலார்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ள நிலையில் , குற்றவாளி திலீபன் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்துவருவதால்  போலீஸ் மற்றும் வருவாய் அலுவலர்கள் அடங்கிய தனிக்குழு இன்று திலீபனிடம் மருத்துவமனையில் விசாரணை நடத்தவுள்ளனர். 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Pak. Cries for Peace: உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aarti

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
Demonetisation: 500 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும்.. முதலமைச்சர் வைத்த கோரிக்கை - மீண்டும் மீண்டுமா?
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
இப்படியெல்லாம் செஞ்சா விசா ரத்தாயிடும்.?! இந்திய மாணவர்களை நூதனமாக மிரட்டும் அமெரிக்க அரசு
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Southwest Monsoon: பொத்துகிட்டு ஊத்துதடி வானம்.. வழக்கத்தை விட அதிகமாக பெய்யப்போகும் தென்மேற்கு பருவமழை!
Pak. Cries for Peace: உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
உனக்கு ஒண்ணுன்னா வலிக்குதா.? பேச்சுவார்த்தைக்காக கதறும் பாகிஸ்தான்; கெத்து காட்டும் இந்தியா
Crime: மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
மூதாட்டிகளை குறி வைத்துக் கொள்ளை... துப்பாக்கியால் சுட்டுபிடிக்கப்பட்ட கொள்ளையனின் தாய், மனைவி
AB PM-JAY Scheme: 70 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை; ஆயுஷ்மான் அட்டை பெறுவது எப்படி.?
70 வயதிற்கு மேற்பட்டோருக்கு ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை; ஆயுஷ்மான் அட்டை பெறுவது எப்படி.?
199 ரூபாய்க்கு இன்டர்நெட் கனெக்சன்..! அடுத்த மாசத்திலிருந்து.. கனெக்ஷன் பெறுவது எப்படி ?
199 ரூபாய்க்கு இன்டர்நெட் கனெக்சன்..! அடுத்த மாசத்திலிருந்து.. கனெக்ஷன் பெறுவது எப்படி ?
பொறியியல், ஆர்ட்ஸ் படிப்புகளுக்கு மவுசு அதிகரிப்பு; குவியும் விண்ணப்பங்கள்!- எவ்ளோ தெரியுமா?
பொறியியல், ஆர்ட்ஸ் படிப்புகளுக்கு மவுசு அதிகரிப்பு; குவியும் விண்ணப்பங்கள்!- எவ்ளோ தெரியுமா?
Embed widget