மேலும் அறிய

கோவை: 'அடிக்கடி செல்போன் பேசாதே' - கிரிக்கெட் பேட்டால் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர்

கவிதா அடிக்கடி அதிக நேரம் வேறு ஒருவருடன் செல்போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதனை குமார் கண்டித்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது

கோவையில் செல்போனில் அடிக்கடி பேசிய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொலை செய்த கணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவை காந்தி மாநகர் மூன்றாவது வீதியை சேர்ந்தவர் கவிதா. 32 வயதான இவர் அப்பகுதியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்துள்ளார். இவர் முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து, மகனுடன் வாழ்ந்து வந்தார். அப்போது இலங்கை அகதியான குமார் என்கிற லவேந்திரனை (49)  12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். குமார் பழைய கட்டிடங்களை உடைக்கும் வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு யோசுவா என்ற மகன் உள்ளார்.


கோவை: 'அடிக்கடி செல்போன் பேசாதே' - கிரிக்கெட் பேட்டால் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர்

இந்நிலையில் கவிதா அடிக்கடி அதிக நேரம் வேறு ஒருவருடன் செல்போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளார். இதனை குமார் கண்டித்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே செல்போன் அடிக்கடி பேசக்கூடாது என குமார் சத்தம் போட்டதால் கோபித்துக் கொண்டு, கவிதா நண்பர் வீட்டிற்கு சென்றதாகவும், மீண்டும் கவிதா வந்தால் ‘முடித்துக் கட்டி விடுவேன். அப்ப தான் எனக்கு நிம்மதி’ என மற்றவர்களிடம் குமார் கூறியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் வீட்டிற்கு வந்த கவிதாவிற்கும், குமாருக்கும் இடையே நேற்றிரவு செல்போனில் அடிக்கடி பேசுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மகன் விளையாட வைத்திருந்த கிரிக்கெட் பேட்டினால் கவிதாவை குமார் ஆத்திரத்தில் சரமாரியாக அடித்துள்ளார்.


கோவை: 'அடிக்கடி செல்போன் பேசாதே' - கிரிக்கெட் பேட்டால் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவர்

கவிதாவின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டின் அருகே வசிக்கும் அவரது சித்தி மகன் செளந்தரராஜன் கவிதாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டிற்கு சென்ற செளந்திரராஜன் கிரிக்கெட் பேட்டினால் தாக்கிக் கொண்டிருந்த குமாரை தடுத்து நிறுத்தியுள்ளார். பின்னர் வீட்டினுள் பார்த்த போது பேட்டினால் தாக்கியதில் கவிதா தலை உடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். மேலும் ஏற்கனவே அவர் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. அப்போது உடனடியாக அங்கிருந்து குமார் தப்பியோடியுள்ளார். இந்த கொலை குறித்து செளந்தரராஜன், சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவிதாவின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடி தலைமறைவாக இருந்த குமாரை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் ஆலாந்துறை அருகே உள்ள பூலுவப்பட்டி பகுதியில் உள்ள அகாதி முகாமில் இருந்த குமாரை, சரவணம்பட்டி காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவருக்கு நாக்கு ரொம்ப நீளம்.. இந்தியாவிலேயே முதலிடம்னா பாருங்க..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
Embed widget