மேலும் அறிய

PUBG Madhan: பிட்காயின் முதலீடு.... ஷேர் மார்க்கெட் முதலீடு... போலீசாரை அதிர வைத்த மதனின் வங்கி விபரம்!

மதன் தனது யூடியூப் சேனல் மூலம் சம்பாதித்த பணத்தை பங்கு வர்த்தகத்திலும், பிட்காயின் எனப்படும் கிரிப்டோகரென்ஸியிலும் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆபாச வார்த்தைகள் மூலம் ஆன்லைன் ஸ்ட்ரிமிங் பப்ஜி விளையாடி பணம் சேர்த்து வந்த யூடியூப்பர் மதன் மீது புகார் குவிந்து வருகிறது. அவர் மீது வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை தேடி வருகின்றனர். அவரது சொந்த ஊர் சேலம் என்பதும், தற்போது சென்னை பெருங்களத்தூரில் தங்கி வருவதும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரது தந்தை மாணிக்கம் மற்றும் மனைவி கிருத்திகா ஆகியோருடன் நடத்திய விசாரணையில், மதனின் யூடியூப் சேனல்களுக்கு கிருத்திகா நிர்வாக அதிகாரியாக இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கிருத்திகாவை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். 


PUBG Madhan: பிட்காயின் முதலீடு.... ஷேர் மார்க்கெட் முதலீடு... போலீசாரை அதிர வைத்த மதனின் வங்கி விபரம்!

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல்துறை ஆணையர், ‛‛மதனை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும்... விரைவில் மதன் கைது செய்யப்படுவார் ,’’ என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், மதனின் வங்கி கணக்குகள் மற்றும் முதலீடுகளை  மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மாதம் 7 லட்சம் ரூபாய்க்கு மேல் யூடியூப் மூலம் வருமானம் பார்த்து வந்த மதன், அதிக அளவில் பணம் ஈட்டியுள்ளது தெரியவந்துள்ளது. யூடியூபர் பப்ஜி மதன் தனது யூடியூப் சேனல் மூலம் சம்பாதித்த பணத்தை பங்கு வர்த்தகத்திலும், பிட்காயின் எனப்படும் கிரிப்டோகரென்ஸியிலும் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே அது குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது. 


PUBG Madhan: பிட்காயின் முதலீடு.... ஷேர் மார்க்கெட் முதலீடு... போலீசாரை அதிர வைத்த மதனின் வங்கி விபரம்!

அதுமட்டுமின்றி யூடியூபர் மதனின் பப்ஜி ஆன்லைன் விளையாட்டில் பங்கேற்றவர்கள் பெரும்பாலானோர் தொழிலதிபர்களின் மகன்கள் மற்றும் வெளி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் சிறுமிகள் சிலரும் இதில் பங்கேற்றுள்ளனர். மதன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரங்கள் இருப்பதால், அதற்கான ஆதாரங்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சேகரித்து வருகின்றனர். ஏற்கனவே மதனின் மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் அவரது தந்தையிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டாவது நாளாக இன்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதனின் முழு நடவடிக்கைகளையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். 


PUBG Madhan: பிட்காயின் முதலீடு.... ஷேர் மார்க்கெட் முதலீடு... போலீசாரை அதிர வைத்த மதனின் வங்கி விபரம்!

முன் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், விரைவில் மதன் சரணடைய வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போலீஸ் வழக்கு பதிவு செய்த பிறகும், பெண்களுடன் தான் பேசிய பேச்சுகளை மதன் யூடியூப்பில் வெளியிட்டு வந்தார். எனவே பல பெண்களை அவர் ஏமாற்றியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். அதிலும் பணம் படைத்த குடும்பத்தை சேர்ந்த பெண்கள் அவரிடம் சிக்கியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். எனவே அவர் வீடியோவில் பேசும் பெண்களின் விபரங்களையும் சேகரித்து வருகின்றனர். மதனின் தந்தையிடம் நடந்து வரும் விசாரணையில் அடிப்படையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றிய விபரங்களையும் போலீசாா் சேகரித்து வருகின்றனர்.

எரிச்சலடைந்த நீதிபதி

மதன் முன்ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, விசாரித்த நீதிபதி ‛மதனின் பேச்சை காது கொடுத்து கேட்க முடியவில்லை என்றும்; முடிந்தால் அந்த பேச்சுகளை இன்று முழுவதும் கேட்டு விட்டு நாளை காலை முன்ஜாமின் கேட்க வருமாறு,’ நீதிபதி தண்டபானி, மனுதாரரின் வழக்கறிஞரிடம் எரிச்சலுடன் கூறினார். 

PUBG Madan: ‛பப்ஜி முதல் கப்சிப் வரை’ மதன் மன்மதனாகி மாட்டிய கதை!

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Holiday Special Bus : 2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
2 நாள் தொடர் விடுமுறை.! வெளியூருக்கு செல்ல போறீங்களா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.?
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
Kia Offers: அதிரடி தள்ளுபடிகளை அள்ளிக் கொடுத்த கியா; எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு விலை குறைப்பு?
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
போலி டிக்கெட்டை கண்டுபிடித்த கார்த்திக்.. நம்பரை ப்ளாக் செய்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget