மேலும் அறிய

சென்னையில் உடல் வலி மாத்திரைகள் சட்ட விரோதமாக விற்பனை.. மடக்கி பிடித்த போலீசார்

ஜாம்பஜார் பகுதியில் உடல் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த நபர் கைது. 45 உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஒரு எலக்ட்ரானிக் டேப் பறிமுதல்.

துரத்தி சென்று பிடித்த காவல் துறையினர்

சென்னை D-4 ஜாம் பஜார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் , காவல் குழுவினர் ஜாம்பஜார் புலிபோன் பஜார் தெருவில் கண்காணித்தபோது , அங்கு நின்றிருந்த 2 நபர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பியோடவே, காவல் குழுவினர் துரத்திச் சென்று ஒருவரை பிடித்து விசாரணை செய்து சோதனை செய்தபோது , அவர் உடல் வலி நிவாரண மாத்திரைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து D-4 ஜாம்பஜார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, சட்ட விரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை செய்த திருவல்லிக்கேனி பக்கீர் சாகிப் தெரு பகுதியை சேர்ந்த கரிமுல்லா ( வயது 27 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து Tydol மற்றும் Nitrazepam ஆகிய உடல்வலி நிவாரண மாத்திரைகள் 45 எண்ணிக்கைகள் மற்றும் ஒரு Samsung Galaxy எலக்ட்ரானிக் Tab ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் கரிமுல்லா மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு , 2 போதைப் பொருள் வழக்குகள், திருட்டு உட்பட சுமார் 6 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட கரிமுல்லா விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் , மேற்படி வழக்கில் தப்பியோடிய மற்றொரு நபரை காவல் குழுவினர் தேடி வருகின்றனர்.

சாலையில் நடந்து சென்ற நபரை தாக்கி பணம் பறித்த கும்பல்

சென்னை ஆதம்பாக்கம் 5வது தெரு, பெரியார் நகரில் வசித்து வரும் அருண்குமார் ( வயது 23 ) என்பவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். அருண்குமார் கடந்த 02.05.2025 அன்று மாலை பால் பாக்கெட் வாங்கி கொண்டு ஆதம்பாக்கம் , நேதாஜி ரோடு மற்றும் பெரியார் நகர் 4வது தெரு சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது , எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் அருண்குமாரை வழிமறித்து அவதூறாக பேசி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அருண்குமார் பணம் தர மறுக்கவே , ஆத்திரமடைந்த 3 நபர்களும் சேர்ந்து  கல்லால் தாக்கி விட்டு அவரிடமிருந்து ரூ.5 ஆயிரத்தை பறித்துக் கொண்டு கத்தியைக் காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்றனர். இரத்தக் காயமடைந்த அருண்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் , இச்சம்பவம் குறித்து S-8 ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து வழக்கில் சம்பந்தப்பட்ட வேளச்சேரி பவானி நகர் 9 வது தெரு பகுதியை சேர்ந்த தனுஷ் ( வயது 19 ) என்பவரை கைது செய்தனர்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய இளஞ்சிறாரிடம் போலீசார் விசாரணை செய்தனர். இவர்களிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 கத்தி மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் கைது செய்யப்பட்ட தனுஷ் S-8 ஆதம்பாக்கம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் , இவர் மீது ஏற்கனவே திருட்டு, வழிப்பறி என சுமார் 14 குற்ற வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.

விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட தனுஷ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். இளஞ்சிறார் சிறார் நீதிகுழுமத்தில் ஆஜர் செய்யப்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள மற்றொரு எதிரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
ரயில் நிலைய பிளாட் பாரத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் !! போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
தொப்புள் கொடியோடு சாலையோரம் வீசப்பட்ட குழந்தை; வாணியம்பாடியில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்
தொப்புள் கொடியோடு சாலையோரம் வீசப்பட்ட குழந்தை; வாணியம்பாடியில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்...
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்..." கிராம மக்கள் விடுத்த அதிரடி கெடு! 
மணல்மேடு வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கதி!
மணல்மேடு வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கதி!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget