மேலும் அறிய

ரவுடியை கொல்ல திட்டமிட்ட குட்டி ரவுடிகள்.. தட்டி தூக்கிய செங்கல்பட்டு போலீஸ்..!

சென்னையை சேர்ந்த ரவுடி ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு இருந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்

தமிழ்நாட்டில் பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோன்று குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக காவல்துறையினும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அடிக்கடி திடீர் சோதனைகளையும் செய்து வருகின்றனர். அதேபோல்,  செங்கல்பட்டு நகர் பகுதியில் காவல்துறையினர் அடிக்கடி தொடர் சோதனையில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

ரவுடியை கொல்ல திட்டமிட்ட குட்டி ரவுடிகள்.. தட்டி தூக்கிய செங்கல்பட்டு போலீஸ்..!
 
அந்த வகையில் செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட ராட்டின கிணறு என்ற பகுதியில், காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது இரண்டு இரு சக்கர வாகனங்களில் சந்தேகத்துக்கிடமான வகையில் ஐந்து பேர் வந்துள்ளனர். காவல்துறையினர் இரு சக்கர வாகனத்தில் வந்த 5 பேர் குறித்து விசாரணை செய்ததில், முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், காவல்துறையினருக்கும் 5 மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐந்து பேரையும் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர்.
 
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், செங்கல்பட்டு கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்த ஆகாஷ், வேதாச்சலம் நகரை சேர்ந்த பொற்கனல், சென்னை கே.கே.நகரை சேர்ந்த மணிஷ்குமார், ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பதும் தெரியவந்தது. இதில் ஆகாஷ் மற்றும் மகேஷ் குமார் ஆகிய இருவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மகேஷ் குமார் சென்னையில் நடந்த ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

ரவுடியை கொல்ல திட்டமிட்ட குட்டி ரவுடிகள்.. தட்டி தூக்கிய செங்கல்பட்டு போலீஸ்..!
 
வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த 5 பேரும் ஏன் செங்கல்பட்டு பகுதியில் சுற்றி திரிந்தார்கள் என்று காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்படவே, 5 பேரிடம் தீவிர விசாரணையை காவல்துறையினர் நடத்தி வந்தனர். மேலும் அவர்களுடைய செல்போனை கைப்பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக சென்னை கே.கே. நகர் பகுதியில் சேர்ந்த ரவுடி ஒருவரை கொலை செய்வதற்காக இந்த ஐந்து பேரும் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் 5 பேரிடம் வாக்குமூலம் பெற்று, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு: ரத்த வெள்ளத்தில் மிதந்த தமிழக மீனவர்... ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி தரையில் புரண்டு கதறல்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
பள்ளிவாசல் அருகே மதுக்கடையா? கொதித்தெழுந்த பெருந்தோட்டம் கிராம மக்கள்!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Embed widget