மேலும் அறிய

ரவுடியை கொல்ல திட்டமிட்ட குட்டி ரவுடிகள்.. தட்டி தூக்கிய செங்கல்பட்டு போலீஸ்..!

சென்னையை சேர்ந்த ரவுடி ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு இருந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்

தமிழ்நாட்டில் பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோன்று குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக காவல்துறையினும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அடிக்கடி திடீர் சோதனைகளையும் செய்து வருகின்றனர். அதேபோல்,  செங்கல்பட்டு நகர் பகுதியில் காவல்துறையினர் அடிக்கடி தொடர் சோதனையில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

ரவுடியை கொல்ல திட்டமிட்ட குட்டி ரவுடிகள்.. தட்டி தூக்கிய செங்கல்பட்டு போலீஸ்..!
 
அந்த வகையில் செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட ராட்டின கிணறு என்ற பகுதியில், காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது இரண்டு இரு சக்கர வாகனங்களில் சந்தேகத்துக்கிடமான வகையில் ஐந்து பேர் வந்துள்ளனர். காவல்துறையினர் இரு சக்கர வாகனத்தில் வந்த 5 பேர் குறித்து விசாரணை செய்ததில், முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், காவல்துறையினருக்கும் 5 மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐந்து பேரையும் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர்.
 
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், செங்கல்பட்டு கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்த ஆகாஷ், வேதாச்சலம் நகரை சேர்ந்த பொற்கனல், சென்னை கே.கே.நகரை சேர்ந்த மணிஷ்குமார், ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பதும் தெரியவந்தது. இதில் ஆகாஷ் மற்றும் மகேஷ் குமார் ஆகிய இருவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மகேஷ் குமார் சென்னையில் நடந்த ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

ரவுடியை கொல்ல திட்டமிட்ட குட்டி ரவுடிகள்.. தட்டி தூக்கிய செங்கல்பட்டு போலீஸ்..!
 
வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த 5 பேரும் ஏன் செங்கல்பட்டு பகுதியில் சுற்றி திரிந்தார்கள் என்று காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்படவே, 5 பேரிடம் தீவிர விசாரணையை காவல்துறையினர் நடத்தி வந்தனர். மேலும் அவர்களுடைய செல்போனை கைப்பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக சென்னை கே.கே. நகர் பகுதியில் சேர்ந்த ரவுடி ஒருவரை கொலை செய்வதற்காக இந்த ஐந்து பேரும் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் 5 பேரிடம் வாக்குமூலம் பெற்று, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
Embed widget