மேலும் அறிய

ரவுடியை கொல்ல திட்டமிட்ட குட்டி ரவுடிகள்.. தட்டி தூக்கிய செங்கல்பட்டு போலீஸ்..!

சென்னையை சேர்ந்த ரவுடி ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு இருந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்

தமிழ்நாட்டில் பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோன்று குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக காவல்துறையினும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அடிக்கடி திடீர் சோதனைகளையும் செய்து வருகின்றனர். அதேபோல்,  செங்கல்பட்டு நகர் பகுதியில் காவல்துறையினர் அடிக்கடி தொடர் சோதனையில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

ரவுடியை கொல்ல திட்டமிட்ட குட்டி ரவுடிகள்.. தட்டி தூக்கிய செங்கல்பட்டு போலீஸ்..!
 
அந்த வகையில் செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட ராட்டின கிணறு என்ற பகுதியில், காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது இரண்டு இரு சக்கர வாகனங்களில் சந்தேகத்துக்கிடமான வகையில் ஐந்து பேர் வந்துள்ளனர். காவல்துறையினர் இரு சக்கர வாகனத்தில் வந்த 5 பேர் குறித்து விசாரணை செய்ததில், முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், காவல்துறையினருக்கும் 5 மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐந்து பேரையும் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர்.
 
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், செங்கல்பட்டு கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்த ஆகாஷ், வேதாச்சலம் நகரை சேர்ந்த பொற்கனல், சென்னை கே.கே.நகரை சேர்ந்த மணிஷ்குமார், ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பதும் தெரியவந்தது. இதில் ஆகாஷ் மற்றும் மகேஷ் குமார் ஆகிய இருவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மகேஷ் குமார் சென்னையில் நடந்த ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

ரவுடியை கொல்ல திட்டமிட்ட குட்டி ரவுடிகள்.. தட்டி தூக்கிய செங்கல்பட்டு போலீஸ்..!
 
வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த 5 பேரும் ஏன் செங்கல்பட்டு பகுதியில் சுற்றி திரிந்தார்கள் என்று காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்படவே, 5 பேரிடம் தீவிர விசாரணையை காவல்துறையினர் நடத்தி வந்தனர். மேலும் அவர்களுடைய செல்போனை கைப்பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக சென்னை கே.கே. நகர் பகுதியில் சேர்ந்த ரவுடி ஒருவரை கொலை செய்வதற்காக இந்த ஐந்து பேரும் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் 5 பேரிடம் வாக்குமூலம் பெற்று, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
"ரஷ்யா- உக்ரைன் போரை நாங்க முடிச்சு வக்குறோம்! என்ன சொல்றீங்க?" புதினிடம் கேட்ட பிரதமர் மோடி
மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு
மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததில் பெருமை அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததில் பெருமை அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajakannappan Scam : ”ரூ. 411 கோடி அரசு நிலம்” சுருட்டிய அமைச்சர் மகன்கள்? RADAR-ல் ராஜகண்ணப்பன்!Sanitation Worker Crying :10 வயதில் மதுவால் சீரழிந்த மகன்கள்..வீடு அருகே TASMAC கடை! கதறி அழும் தாய்Irfan baby Delivery issue|”இர்ஃபானை மன்னிக்க  முடியாது” கொதித்தெழுந்த அமைச்சர் மா.சு..சர்ச்சை வீடியோMamallapuram | பைப்பால் அடித்த பெண்கள்! ”No Parking-னு சொன்னது குத்தமா?”ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
Cyclone Dana:டானா புயல் எதிரொலி; 28 ரயில்கள் சேவை ரத்து - முழு விவரம்!
"ரஷ்யா- உக்ரைன் போரை நாங்க முடிச்சு வக்குறோம்! என்ன சொல்றீங்க?" புதினிடம் கேட்ட பிரதமர் மோடி
மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு
மதுரையில் அதிர்ச்சி... கணவர் கண் முன்னே மனைவியிடம் செயின் பறிப்பு
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததில் பெருமை அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்ததில் பெருமை அடைகிறேன்: முதல்வர் ஸ்டாலின்
Diwali Bonus: கூட்டுறவு‌ சங்க ஊழியர்களுக்கு 20%‌ தீபாவளி போனஸ்‌- தமிழக அரசு ஆணை
Diwali Bonus: கூட்டுறவு‌ சங்க ஊழியர்களுக்கு 20%‌ தீபாவளி போனஸ்‌- தமிழக அரசு ஆணை
Kamaraj University Convocation: மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பையும் புறக்கணித்த அமைச்சர் கோவி செழியன்; அவரே சொன்ன காரணம்!
Kamaraj University Convocation: மதுரை காமராஜர் பல்கலை. பட்டமளிப்பையும் புறக்கணித்த அமைச்சர் கோவி செழியன்; அவரே சொன்ன காரணம்!
BSNL New Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் சின்னம்; இந்தியா பெயர் பாரத் என மாற்றம்
BSNL New Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் சின்னம்; இந்தியா பெயர் பாரத் என மாற்றம்
Ajith :  அஜித் குமாரின் கார் ரேஸிங் அணியின் லோகோ அறிவிப்பு...துபாயில் நடைபெறும் மிஷலின் 24H ரேஸில் கலந்துகொள்ளப் போவதாக தகவல்
Ajith : அஜித் குமாரின் கார் ரேஸிங் அணியின் லோகோ அறிவிப்பு...துபாயில் நடைபெறும் மிஷலின் 24H ரேஸில் கலந்துகொள்ளப் போவதாக தகவல்
Embed widget