மேலும் அறிய

Crime: லைவ் நிகழ்ச்சியில் ஷாக்! துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட தொகுப்பாளர்...என்ன நடந்தது?

லைவ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime: லைவ் நிகழ்ச்சியில்  தொகுப்பாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிலிப்பைன்ஸ் நாட்டில் செயல்பட்டு வரும் கலம்பா கோல்டு எஃப்எம்மில் நிகழ்ச்சியில் பணியாற்றி வருபவர் ஜுவான் ஜுமலோன் (57). இவர் ஜானி வாக்கர் என்ற பெயரில் அறியப்படும் ஜுவான் ஜுமலோன், அவருடைய இல்லத்திலேயே வாணொலி நிலையம் அமைத்து செயல்படுத்தி வந்துள்ளார். ​​இவர் பிலிப்பைன்ஸின் தெற்கு தீவான் மின்டானாவோவில் உள்ள தனது வீட்டில் உள்ள ஸ்டுடியோவில் இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் ஆயுதங்களுடன் புகுந்துள்ளார்.  அப்போது, ஜுவான் ஜுமலோன் லைவ் நிகழ்ச்சி ஒன்று நடத்திக் கொண்டிருந்தார். அங்கு ஏராளமான மக்களும் இருந்துள்ளனர். அப்போது, ஸ்டுடியோக்குள் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் தொகுப்பாளர் ஜுவான் ஜுமலோனை சுட்டு உள்ளார். ​​

துப்பாக்கி சத்தத்தை கேட்ட அங்கிருந்த மக்கள் அங்குமிங்கும் ஒடினர். பின்னர், நிகழ்ச்சி  மேடையில் தொகுப்பாளர் ஜுவான் ஜுமலோன் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இது குறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜுவான் ஜுமலோனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து, ஜுவான் ஜுமலோனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்தனர். 

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "தொகுப்பாளர் ஜுவான் ஜுமலோனை தலையில் இரண்டு முறை துப்பாக்கியால் மர்ம நபர் சுட்டுள்ளார். சுட்டபின் ஸ்டுடியோவில் இருந்து வெளியேறும் முன் ஜுவான் ஜுமலோனின் தங்க செயினை பறித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலை காரணம் என்னவென்றும் விசாரித்து வருகிறோம். ஜுவான் ஜுமலோன் உயிரிழந்ததற்கு முன், அவருக்கு எந்த ஒரு மிரட்டலும் வரவில்லை” என்றனர். 

இந்த தாக்குதலுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினான்ட் மார்கஸ் ஜூனியர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டடரில் பதிவிட்டிருப்பதாவது, "பத்திரிகையாளர் கொலை வெட்கக்கேடானது. குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள்  ஜனநாயகத்தில் அனுமதிக்கப்படாது. மேலும் பத்திரிகை சுதந்திரத்தை அச்சுறுத்துபவர்கள் அவர்களின்  முழு விளைவுகளையும் சந்திக்க நேரிடும்" என்று குறிப்பிட்டிருந்தார். அதிபர் மார்கஸ் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பதவியேற்றத்தில் இருந்து கொலை செய்யப்பட்ட நான்காவது பத்திரிகையாளராக ஜுவான் ஜுமலோன் உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க

Crime: கர்நாடக பெண் அரசு அதிகாரியை கொலை செய்தது ஏன்? - குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget