மேலும் அறிய

தொடரும் பெரியகுளம் அதிர்ச்சி... மேலும் 500 ஏக்கர் அரசு நிலம் அபகரித்தது கண்டுபிடிப்பு!

ஏற்கனவே 100 ஏக்கருக்கு மேலாக அரசு நிலங்களை தனியாருக்கு பட்டா போட்ட சம்பவத்தை தொடர்ந்து, தற்போது 500 ஏக்கர் நிலம் தனியார் வசம் கையகப்படுத்தியது தெரியவந்துள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 500 க்கும் மேற்பட்ட ஏக்கர் அரசு நிலத்தை தனிநபருக்கு பட்டா வழங்கியுள்ளதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறபட்ட ஆவணங்களில் முறை கேடு நடந்திருப்பது கண்டுபிடிப்பு. தனியார் வசம் உள்ள அரசு நிலத்தை மீட்க வேண்டும் என பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலத்தில் சமூக ஆர்வளர்கள் கோரிக்கை மணு அளித்துள்ளனர்.


தொடரும் பெரியகுளம் அதிர்ச்சி... மேலும் 500 ஏக்கர் அரசு நிலம் அபகரித்தது கண்டுபிடிப்பு!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிக்கு மேல்  உள்ள 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் கடந்த 2000 ஆண்டிற்கு முன்பு வரை உள்ள அரசு ஆவணங்களில் அரசு தரிசு நிலங்களாக பதிவேட்டி உள்ளது. இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த நிலங்கள் அனைத்தும் JC என்ற தனியார் நிறுவனத்தின் உரிமையாளர்கள் பெயர்களுக்கு பட்டா வழங்கி உள்ளதாக தற்பொழுது கணிணி மயமாக்கப்பட்ட பதிவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


தொடரும் பெரியகுளம் அதிர்ச்சி... மேலும் 500 ஏக்கர் அரசு நிலம் அபகரித்தது கண்டுபிடிப்பு!

இது குறித்து நெற்றிக்கண் நுகர்வோர் சங்கத்தை சேர்ந்த சமூக ஆர்வளர்கள் அரசப்பன் மற்றும் கண்ணன், பாண்டி  ஆகிய மூவரும் சேர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு ஆவணங்களை பெற்று  ஆய்வு செய்த போது, மஞ்சளார் அணைக்கு மேல் உள்ள நிலங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் 2000 ஆண்டிற்கு முன்புவரை உள்ள அரசின் A மற்றும் B பதிவேடுகளில் அரசு நிலங்கள் என குறிபிட்டுள்ள நிலையில் தற்பொழுது கணிணி மயமாக்கப்பட்ட பின்பு அரசு ஆவணங்களில் அரசு நிலத்தை பட்டா வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இன்று நெற்றிக்கண் நுகர்வோர் சங்கத்தினர் பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஷப்பிடம் தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் பெறபட்ட ஆவணங்களை கொண்டு அரசு நிலம் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் தனியாருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து அரசு நிலத்தை மீட்க வேண்டும் எனவும் அரசு நிலத்தை பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தேனி மாவட்டத்தில் இது போன்று 1000த்திற்கும் மேற்பட்ட ஏக்கர் அரசு  நிலங்களை ஆக்கிரமித்து பட்டா பெற்றவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். 


தொடரும் பெரியகுளம் அதிர்ச்சி... மேலும் 500 ஏக்கர் அரசு நிலம் அபகரித்தது கண்டுபிடிப்பு!

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியகுளத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் அன்னபிரகாஸ் என்பவர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின் உள்ள சுமார் 100 ஏக்கருக்கும் மேலான அரசுக்கு சொந்தமான நிலங்களை முறைகேடாக வருவாய் துறை அலுவலர்கள் உதவியுடன் பட்டா போட்டதில் 4 தாசில்தார்கள் உட்பட 6 பேர் வருவாய் துறை சேர்ந்தவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தற்போது மேலும் பெரியகுளம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் அரசு நிலங்கள் தனி நபர்களுக்கு பட்டா வழங்கி உள்ளது பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

அரசு நிலங்களை முறைகேடாக பட்டா போட்ட அதிமுக பிரமுகர் தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

ABP Nadu Exclusive: ஓபிஎஸ்., கோட்டையில் நீக்கப்பட்ட அதிமுக ஒன்றிய செயலாளர்... தேனியை கூறு போட்டது அம்பலம்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
New Year 2026 Celebrations: புத்தாண்டு கொண்டாட்டம், உள்ளூர் தொடங்கி உலகம் வரை.. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் வீடியோ
New Year 2026 Celebrations: புத்தாண்டு கொண்டாட்டம், உள்ளூர் தொடங்கி உலகம் வரை.. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் வீடியோ
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
New Year 2026 Celebrations: புத்தாண்டு கொண்டாட்டம், உள்ளூர் தொடங்கி உலகம் வரை.. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் வீடியோ
New Year 2026 Celebrations: புத்தாண்டு கொண்டாட்டம், உள்ளூர் தொடங்கி உலகம் வரை.. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் வீடியோ
PONGAL GIFT TOKEN: வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
வீட்டிற்கே வருது பொங்கல் பரிசு டோக்கன்.! எப்போது? யாருக்கெல்லாம் கிடைக்கும்? வெளியான சூப்பர் அப்டேட்
New Year 2026: புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
புத்தாண்டு பிறந்த முதல் நாடு; நமக்கு முன்பே புத்தாண்டு கொண்டாடும் நாடுகள் எவை.?
Edappadi Palanisamy: “உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
“உயிர் பயத்திலேயே தமிழக மக்கள் வாழ வேண்டுமா.?“ - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி
Sara Tendulkar Video: அந்த அன்பு தெய்வத்தின் மகளா இவள்.! கோவாவில் கையில் பீர் பாட்டிலுடன் வலம் வந்த சாரா டெண்டுல்கர்
அந்த அன்பு தெய்வத்தின் மகளா இவள்.! கோவாவில் கையில் பீர் பாட்டிலுடன் வலம் வந்த சாரா டெண்டுல்கர்
Russia Putin Ukraine War: “உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
“உக்ரைன் போரில் வெற்றி பெறுவோம்“; ஆண்டின் கடைசி உரையில் கூறிய புதின்; அப்போ ட்ரம்ப்போட முயற்சி.?!
Gold Rate Dec.31st: புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
புத்தாண்டில் இன்ப அதிர்ச்சி; ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் விலை குறைந்த தங்கம்; தற்போதைய விலை என்ன.?
Embed widget