மேலும் அறிய

அறுபடையில் அறுவடை செய்ய புறப்பட்ட போலி ஐஏஎஸ்.... திருச்செந்தூரில் விஐபி தரிசனம்... பழனியில் சிக்கினார்!

Fake IAS Officer: முருகனின் ஆறுபடை வீடுகளில் தனது போலி ஐஏஎஸ் மவுசை வைத்து சிறப்பு தரிசனம் செய்த முடிவு செய்திருந்த குமாரை, டமாரென பிடித்திருக்கிறது போலீஸ்.

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு கருப்பு நிற ஸ்கார்பியோ கார் ஒன்று, சைரன் ஒலிக்க... பாம்...பாம்.. பாம்... என வலம் வருகிறது. பழனி மலையடிவாரத்தில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிக்கு நேராக வந்த அந்த காரில் டிப்டாப் ஆபிசர் ஒருவர் இறங்குகிறார். நேராக தங்கும் விடுதி வரவேற்பறைக்கு சென்ற அந்த அதிகாரி, ‛ஐ ஆம் ஐஏஎஸ் ஆபிசர்... எனக்கு ஒரு ரூம் தாங்க...’ என்கிறார். வரவேற்பறை ஊழியர்களும், பதட்டமாகி , ‛வாங்க சார்... உட்காருங்க சார்...’ என சீரியஸ் ஆகிறார்கள். 


அறுபடையில் அறுவடை செய்ய புறப்பட்ட போலி ஐஏஎஸ்.... திருச்செந்தூரில் விஐபி தரிசனம்... பழனியில் சிக்கினார்!

‛எந்த ரூம் நல்லா இருக்கும்... நல்ல ஏசி வர்ற ரூம் தாங்க...’ என கெடுபிடியை உயர்த்துகிறார் அந்த அதிகாரி. ‛எல்லா ரூமும் நல்லா இருக்கும்... உங்களுக்கு சூப்பர் ரூம் தர்றோம் சார்...’ என விடுதி பொறுப்பாளர்கள் வாஞ்சையோடு கூறுகிறார்கள். சரி போகலாமா... என அந்த அதிகாரி கூற, ‛சார்... வாடகை...’ என தலையை சொறிந்துள்ளனர். ‛என்னது காசா... என்னிடமேவா... நான் யார் தெரியுமா... ஒரு ஐஏஎஸ் அதிகாரியிடம் காசு கேட்குறீங்களா...’ என கொந்தளித்துள்ளார் அதிகாரி.

‛சார்... உங்க ஐடி கார்டையாவது காட்டுங்க சார்...’ என விடுதி மேலாளர் கேட்க, ’என்ன தைரியம் இருந்தால் என்னோட ஐடி கார்டை கேட்ப்ப..’ அதிகாரி கடுப்பாகிறார். சந்தேகம் அடைந்த மேலாளர், ‛சார்... இங்குள்ள வருவாய் துறை அதிகாரிகள் யாரையாவது பரிந்துரை பண்ணச் சொல்லுங்க... நான் ரூம் தர்றேன்...’ என்றுள்ளார். கோபத்தின் உச்சிக்கு சென்ற அதிகாரி, செய்வதறியாது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். சந்தேகம் அடைந்த தங்கும் விடுதி மேலாளர், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 


அறுபடையில் அறுவடை செய்ய புறப்பட்ட போலி ஐஏஎஸ்.... திருச்செந்தூரில் விஐபி தரிசனம்... பழனியில் சிக்கினார்!

இதற்கிடையில் போலீஸ் வரும் தகவல் அந்த ஆபிசருக்கு தெரியவருகிறது. உடனே அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சிக்கிறார். அவரை விடுதி ஊழியர்கள் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அவரை பழனி அடிவாரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சம்மந்தப்பட்ட நபர் பெயர் குமார் என்பதும், மயிலாடுதுறையில் வசித்து வருவதும் தெரியவந்தது. தனது காரில் தமிழக அரசு பதிவு போல போலியாக நம்பர் பிளேட் எழுதி, காரில் சைரன் வைத்து நடமாடும் ஐஏஎஸ் அதிகாரியாக பிழைப்பு நடத்தி வந்தது தெரியவந்தது. 


அறுபடையில் அறுவடை செய்ய புறப்பட்ட போலி ஐஏஎஸ்.... திருச்செந்தூரில் விஐபி தரிசனம்... பழனியில் சிக்கினார்!

பல இடங்களில் தன்னை ஐஏஎஸ்., அதிகாரி எனக்கூறி பல்வேறு சலுகைகளை அனுபவித்து வந்ததும் தெரியவந்தது. கடைசியாக திருச்செந்தூர் முருகன் கோயில் சென்று, அங்கு ஐஏஎஸ் அதிகாரி போர்வையில், சிறப்பு தரிசனம் செய்து வந்ததும் , அதே பார்மட்டில் பழனியில் சிறப்பு தரிசனம் செய்ய முயற்சித்த போது, பிடிபட்டதும் தெரியவந்தது. முருகனின் ஆறுபடை வீடுகளில் தனது போலி ஐஏஎஸ் மவுசை வைத்து சிறப்பு தரிசனம் செய்த முடிவு செய்திருந்த குமாரை, டமாரென பிடித்திருக்கிறது போலீஸ். டுபாக்கூர் ஐஏஎஸ் அதிகாரி குமார், இதற்கு முன் எங்கெல்லாம் கைவரிசை காட்டினார் என்பது குறித்து போலீசார் ஆழமாக விசாரணை நடத்தி வரகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

WhatsApp New Update: வாட்ஸ்அப்பில் சூப்பரான அப்டேட் வருது... என்னன்னு தெரியுமா.?
வாட்ஸ்அப்பில் சூப்பரான அப்டேட் வருது... என்னன்னு தெரியுமா.?
இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை  - எந்த ரூட் தெரியுமா?
இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை - எந்த ரூட் தெரியுமா?
நாப்கின் கேட்ட பள்ளிச் சிறுமி; வெளியே போகச்சொன்ன ஆசிரியர்- விசாரணைக்கு உத்தரவு
நாப்கின் கேட்ட பள்ளிச் சிறுமி; வெளியே போகச்சொன்ன ஆசிரியர்- விசாரணைக்கு உத்தரவு
EPS Condemn: 'SIR'களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் பல 'SIR'கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் - EPS
'SIR'களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் பல 'SIR'கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் - EPS
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs Nainar Nagendran | ”மோதி பாக்கலாம் வா”அ.மலை Vs நயினார்! தமிழக பாஜக தலைவர் யார்? | BJPSaif Ali Khan Attacker | ’’கல்யாணம் நின்னு போச்சு..’’போலீசால் கதறும் நபர் சைஃப் அலிகான் விவகாரம் | Akash KanojiaNitish Kumar Son Nishant Political Entry | மகனின் திடீர் அரசியல் ஆசைநிதிஷ் போடும் கணக்கு நெருக்கடியில் பாஜகDurai Murugan  | கண்டுகொள்ளாத திமுக தலைமை?வருத்தத்தில் துரைமுருகன்! மகன் கதிர் ஆனந்தின் எதிர்காலம்? | Kathir Anand

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
WhatsApp New Update: வாட்ஸ்அப்பில் சூப்பரான அப்டேட் வருது... என்னன்னு தெரியுமா.?
வாட்ஸ்அப்பில் சூப்பரான அப்டேட் வருது... என்னன்னு தெரியுமா.?
இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை  - எந்த ரூட் தெரியுமா?
இனி டிராபிக்கே வராது! சென்னையில் இருந்து வெளியே போக புது சாலை - எந்த ரூட் தெரியுமா?
நாப்கின் கேட்ட பள்ளிச் சிறுமி; வெளியே போகச்சொன்ன ஆசிரியர்- விசாரணைக்கு உத்தரவு
நாப்கின் கேட்ட பள்ளிச் சிறுமி; வெளியே போகச்சொன்ன ஆசிரியர்- விசாரணைக்கு உத்தரவு
EPS Condemn: 'SIR'களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் பல 'SIR'கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் - EPS
'SIR'களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் பல 'SIR'கள் பாலியல் குற்றங்களை நிகழ்த்துகின்றனர் - EPS
விலகியது வடகிழக்கு பருவமழை! தமிழகத்தில் மழை இருக்கா இல்லையா? வானிலை என்ன சொல்லுது?
விலகியது வடகிழக்கு பருவமழை! தமிழகத்தில் மழை இருக்கா இல்லையா? வானிலை என்ன சொல்லுது?
Simbu is MASS: சிம்பு சார், மனசால நீங்க மாஸ்... புகழ்ந்து தள்ளிய பிரதீப் ரங்கநாதன்...
சிம்பு சார், மனசால நீங்க மாஸ்... புகழ்ந்து தள்ளிய பிரதீப் ரங்கநாதன்...
Trisha in TVK.?: 10 வருஷத்துல நான் CM...முன்பே சொன்ன த்ரிஷா... தவெக மூலம் நிறைவேறும் ஆசை.?
10 வருஷத்துல நான் CM...முன்பே சொன்ன த்ரிஷா... தவெக மூலம் நிறைவேறும் ஆசை.?
Saif Ali Khan Case: வேலை போச்சு..கல்யாணம் போச்சு...சைஃப் வழக்கில் கைதாகி விடுதலையானவர் குமுறல்....
வேலை போச்சு..கல்யாணம் போச்சு...சைஃப் வழக்கில் கைதாகி விடுதலையானவர் குமுறல்...
Embed widget