மேலும் அறிய

ரூ.360 கோடி மோசடி.. அதிக வட்டிக்கு ஆசைப்பட்ட 1,500 பேர்... சென்னை தனியார் நிறுவனத்தை சல்லடையாய் சலிக்கும் காவல்துறை!

கூடுதல் வட்டி தருவதாக கூறி ஆயிரத்து 500 பேரிடமிருந்து பணம் பெற்று, ரூ.360 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் தனியார் நிறுவன இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டி தருவதாக கூறி, மோசடி செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அந்த வகையில் மோசடியில் ஈடுபட்ட ஐஎப்எஸ் ஆருத்ரா உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் சமீபத்தில் தமிழகத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும், கூடுதல் வட்டி தருவதாக கூறும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என காவல்துறையினரும் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் தான், சென்னையை சேர்ந்த மேலும் ஒரு நிறுவனத்தின் மோசடி அம்பலமாகியுள்ளது.

கீழ்ப்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற பெயரில் செயல்படும்  தனியார் நிறுவனம் , வாடிக்கையாளர்களின் முதலீட்டிற்கு ஒவ்வொரு மாதமும் 15 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது. அதாவது ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதத்திற்கு ரூ.15,000 வட்டியாக கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியா உள்ளிட்ட நாடுகளில் எண்ணெய் கிணறு வைத்திருப்பதாகவும், வாடிக்கையாளர்களின் பணம் அந்த தொழிலில் முதலீடு செய்யப்பட்டு கூடுதல் வட்டி தரப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்ததை, நம்பி ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட நிறுவனம் முறையாக வட்டி தரவில்லை என கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் ஹிஜாவு அசோசியேட்ஸ் நிறுவனத்தை அணுகியபோது முறையான பதில் கிடைக்காததால், சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது உறுதியானது. இதையடுத்து ஹிஜாவு அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் 21 பேர் மீது நம்பிக்கை மோசடி, மோசடி செய்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்நிறுவனத்தில் சுமார் 1,500 பேர் ரூ.360 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரம் முதலீடு செய்துள்ளதாகவும்,  அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான பெரியர் நகரை சேர்ந்த நேரு என்பவரைக் கைது செய்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹிஜாவு அசோசியேட்ஸ் எனும் தாய் நிறுவனம் மட்டுமின்றி அதை சார்ந்த, எஸ்.ஜி. அக்ரோ புராடக்ட்ஸ், அருவி  அக்ரோ புராடக்ட்ஸ், சாய் லட்சுமி எண்டர்பிரைசஸ்,  ராம் அக்ரோ புராடக்ட்ஸ் மற்றும் ஆர்.எம்.கே. புரோஸ் எனும் கிளை நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்களும்,  hijaueowdsp@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்தவர்கள் மட்டுமின்றி மேலும் நூற்றுக்கணக்கானோர் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனவும், பொதுமக்கள் நேரடியாக வந்து புகார் அளிக்கலாம் எனவும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Old pension scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி
Pongal Gift 2026: 8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
8ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு.! ரொக்கப்பணம் இருக்கா.? இல்லையா.? அரசின் முடிவு என்ன.?
Nissan Kait SUV: இதோ, நாங்களும் வர்றோம்.! க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக நிசான் கெய்ட்; First Look
இதோ, நாங்களும் வர்றோம்.! க்ரெட்டா, சியாராவிற்கு போட்டியாக நிசான் கெய்ட்; First Look
Embed widget