மேலும் அறிய

ரூ.360 கோடி மோசடி.. அதிக வட்டிக்கு ஆசைப்பட்ட 1,500 பேர்... சென்னை தனியார் நிறுவனத்தை சல்லடையாய் சலிக்கும் காவல்துறை!

கூடுதல் வட்டி தருவதாக கூறி ஆயிரத்து 500 பேரிடமிருந்து பணம் பெற்று, ரூ.360 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் தனியார் நிறுவன இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டி தருவதாக கூறி, மோசடி செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அந்த வகையில் மோசடியில் ஈடுபட்ட ஐஎப்எஸ் ஆருத்ரா உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் சமீபத்தில் தமிழகத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும், கூடுதல் வட்டி தருவதாக கூறும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என காவல்துறையினரும் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் தான், சென்னையை சேர்ந்த மேலும் ஒரு நிறுவனத்தின் மோசடி அம்பலமாகியுள்ளது.

கீழ்ப்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற பெயரில் செயல்படும்  தனியார் நிறுவனம் , வாடிக்கையாளர்களின் முதலீட்டிற்கு ஒவ்வொரு மாதமும் 15 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது. அதாவது ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதத்திற்கு ரூ.15,000 வட்டியாக கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியா உள்ளிட்ட நாடுகளில் எண்ணெய் கிணறு வைத்திருப்பதாகவும், வாடிக்கையாளர்களின் பணம் அந்த தொழிலில் முதலீடு செய்யப்பட்டு கூடுதல் வட்டி தரப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்ததை, நம்பி ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட நிறுவனம் முறையாக வட்டி தரவில்லை என கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் ஹிஜாவு அசோசியேட்ஸ் நிறுவனத்தை அணுகியபோது முறையான பதில் கிடைக்காததால், சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது உறுதியானது. இதையடுத்து ஹிஜாவு அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் 21 பேர் மீது நம்பிக்கை மோசடி, மோசடி செய்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்நிறுவனத்தில் சுமார் 1,500 பேர் ரூ.360 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரம் முதலீடு செய்துள்ளதாகவும்,  அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான பெரியர் நகரை சேர்ந்த நேரு என்பவரைக் கைது செய்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹிஜாவு அசோசியேட்ஸ் எனும் தாய் நிறுவனம் மட்டுமின்றி அதை சார்ந்த, எஸ்.ஜி. அக்ரோ புராடக்ட்ஸ், அருவி  அக்ரோ புராடக்ட்ஸ், சாய் லட்சுமி எண்டர்பிரைசஸ்,  ராம் அக்ரோ புராடக்ட்ஸ் மற்றும் ஆர்.எம்.கே. புரோஸ் எனும் கிளை நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்களும்,  hijaueowdsp@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்தவர்கள் மட்டுமின்றி மேலும் நூற்றுக்கணக்கானோர் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனவும், பொதுமக்கள் நேரடியாக வந்து புகார் அளிக்கலாம் எனவும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

காதல் திருமணத்தின் சோக முடிவு! கந்திலி அருகே இளம்பெண் தற்கொலை செய்யக் காரணம் என்ன?
காதல் திருமணத்தின் சோக முடிவு! கந்திலி அருகே இளம்பெண் தற்கொலை செய்யக் காரணம் என்ன?
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
பதின்ம வயதுப் பெண்களே உஷார்! ரத்த சோகையை சரிசெய்வது எப்படி? மருத்துவர் எச்சரிக்கை
பதின்ம வயதுப் பெண்களே உஷார்! ரத்த சோகையை சரிசெய்வது எப்படி? மருத்துவர் எச்சரிக்கை
ஒரே சார்ஜில் 104 கி.மீட்டர் மைலேஜ்.. சீனியர் சிட்டிசன் கெத்து காட்ட Kinetic Green Zulu இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோ கம்மியா?
ஒரே சார்ஜில் 104 கி.மீட்டர் மைலேஜ்.. சீனியர் சிட்டிசன் கெத்து காட்ட Kinetic Green Zulu இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோ கம்மியா?
Embed widget