மேலும் அறிய

ரூ.360 கோடி மோசடி.. அதிக வட்டிக்கு ஆசைப்பட்ட 1,500 பேர்... சென்னை தனியார் நிறுவனத்தை சல்லடையாய் சலிக்கும் காவல்துறை!

கூடுதல் வட்டி தருவதாக கூறி ஆயிரத்து 500 பேரிடமிருந்து பணம் பெற்று, ரூ.360 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் தனியார் நிறுவன இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டி தருவதாக கூறி, மோசடி செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அந்த வகையில் மோசடியில் ஈடுபட்ட ஐஎப்எஸ் ஆருத்ரா உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் சமீபத்தில் தமிழகத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும், கூடுதல் வட்டி தருவதாக கூறும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என காவல்துறையினரும் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் தான், சென்னையை சேர்ந்த மேலும் ஒரு நிறுவனத்தின் மோசடி அம்பலமாகியுள்ளது.

கீழ்ப்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற பெயரில் செயல்படும்  தனியார் நிறுவனம் , வாடிக்கையாளர்களின் முதலீட்டிற்கு ஒவ்வொரு மாதமும் 15 சதவிகிதம் வட்டி கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது. அதாவது ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதத்திற்கு ரூ.15,000 வட்டியாக கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியா உள்ளிட்ட நாடுகளில் எண்ணெய் கிணறு வைத்திருப்பதாகவும், வாடிக்கையாளர்களின் பணம் அந்த தொழிலில் முதலீடு செய்யப்பட்டு கூடுதல் வட்டி தரப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்ததை, நம்பி ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட நிறுவனம் முறையாக வட்டி தரவில்லை என கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் ஹிஜாவு அசோசியேட்ஸ் நிறுவனத்தை அணுகியபோது முறையான பதில் கிடைக்காததால், சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் செய்தனர். அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த நிறுவனம் பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது உறுதியானது. இதையடுத்து ஹிஜாவு அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் 21 பேர் மீது நம்பிக்கை மோசடி, மோசடி செய்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்நிறுவனத்தில் சுமார் 1,500 பேர் ரூ.360 கோடியே 91 லட்சத்து 5 ஆயிரம் முதலீடு செய்துள்ளதாகவும்,  அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான பெரியர் நகரை சேர்ந்த நேரு என்பவரைக் கைது செய்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹிஜாவு அசோசியேட்ஸ் எனும் தாய் நிறுவனம் மட்டுமின்றி அதை சார்ந்த, எஸ்.ஜி. அக்ரோ புராடக்ட்ஸ், அருவி  அக்ரோ புராடக்ட்ஸ், சாய் லட்சுமி எண்டர்பிரைசஸ்,  ராம் அக்ரோ புராடக்ட்ஸ் மற்றும் ஆர்.எம்.கே. புரோஸ் எனும் கிளை நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்களும்,  hijaueowdsp@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்தவர்கள் மட்டுமின்றி மேலும் நூற்றுக்கணக்கானோர் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனவும், பொதுமக்கள் நேரடியாக வந்து புகார் அளிக்கலாம் எனவும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
நடத்தையில் சந்தேகம் ; பாத்ரூமில் கணவனை தள்ளி விட்டு கத்தியால் குத்தி தீர்த்துக் கட்டிய மனைவி
நடத்தையில் சந்தேகம் ; பாத்ரூமில் கணவனை தள்ளி விட்டு கத்தியால் குத்தி தீர்த்துக் கட்டிய மனைவி
பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி - வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி - வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
யார் இந்த 'கோல்டு கோகிலா'? மறைமலைநகரையே உலுக்கிய போதை சாம்ராஜ்யம்... போலீசாரின் ஸ்கெட்ச்!
யார் இந்த 'கோல்டு கோகிலா'? மறைமலைநகரையே உலுக்கிய போதை சாம்ராஜ்யம்... போலீசாரின் ஸ்கெட்ச்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Embed widget