மேலும் அறிய

"சாமி சிலைகளோடு வந்த சொகுசு கார்.." - பறக்கும் படை அதிகாரிகளிடம் சிக்கிய 2 ஐம்பொன் சிலைகள்; பின்னணி என்ன?

மயிலாடுதுறை அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ஐம்பொன் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவிற்கு உட்பட்ட சங்கரன்பந்தல் பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட இரண்டு ஐம்பொன் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்பந்தலில் அதிரடி சோதனை

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டார கல்வி அலுவலர் புனிதவதி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், இன்று தரங்கம்பாடி தாலுக்கா சங்கரன்பந்தல் கிராமத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்றை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது, காரின் உட்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பழங்கால ஐம்பொன் சிலைகள் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட நடராஜர் - சிவகாமசுந்தரி சிலைகள்

கண்டறியப்பட்ட சிலைகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், அவை சுமார் ஒரு அடி உயரம் கொண்ட நடராஜர் சிலை மற்றும் சிவகாமசுந்தரி அம்மன் சிலை என்பது தெரியவந்தது. இந்த சிலைகள் ஐம்பொன்னால் ஆனவை என்பதும், கலைநயத்துடன் செதுக்கப்பட்டிருந்ததும் முதற்கட்ட ஆய்வில் உறுதியானது.

தேர்தல் நேரத்தில் பெருமளவிலான பணம், நகைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலைகள் சிக்கியிருப்பது குறித்து அதிகாரிகள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

திண்டுக்கல் நபரிடம் விசாரணை

காரில் சிலைகளை எடுத்து வந்த நபர் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம், செந்துரையைச் சேர்ந்த மாதேஸ்வரன் என்பது தெரியவந்தது. அவரிடம் சிலைகள் குறித்து அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது மாதேஸ்வரன் கூறியதாவது:

"இந்த சிலைகள் என்னுடைய முன்னோர்கள் காலத்திலிருந்து எங்களிடம் இருக்கும் குடும்ப சிலைகள். நான் இந்த சிலைகளை எப்போதும் எனது கையிலேயே எடுத்துச் சென்று அன்றாடம் வழிபாடு செய்வது வழக்கம். இதற்காகத்தான் காரில் எடுத்து வந்தேன்," எனத் தெரிவித்தார்.

இருப்பினும், தங்கம், வெள்ளி அல்லது சிலைகள் போன்ற மதிப்புமிக்க பொருட்களை கொண்டு செல்லும் போது அவற்றுக்கான உரிய ஆவணங்கள் மற்றும் சான்றுகள் வைத்திருக்க வேண்டும் என்பது தேர்தல் விதியாகும். ஆனால், மாதேஸ்வரனிடம் அந்த நேரத்தில் ஆவணங்கள் ஏதும் இல்லாததால், சிலைகளை பறிமுதல் செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பு

கைப்பற்றப்பட்ட நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி சிலைகள் பலத்த பாதுகாப்புடன் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கு வட்டாட்சியர் முன்னிலையில் சிலைகள் ஒப்படைக்கப்பட்டு, கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கும் தகவல் அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

உரிமையாளர் விளக்கம்: "ஆவணங்கள் உள்ளன"

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாதேஸ்வரன், "நான் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சென்று எனது சிலைகளுடன் சிறப்பு வழிபாடு நடத்தினேன். வழிபாட்டை முடித்துக் கொண்டு பொறையார் வழியாக சங்கரன்பந்தல் நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான் அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சிலைகள் முறையான ஆவணங்களுடன் கூடியவை. சிலைகளுக்கான அனைத்து சான்றுகளும் என்னிடம் உள்ளன. அவற்றை சமர்ப்பித்து விரைவில் எனது சிலைகளை மீட்டுச் செல்வேன்," என்று உறுதியுடன் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் கூறுகையில், "பொதுமக்கள் 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கப் பணமோ அல்லது இதர மதிப்புமிக்க பொருட்களையோ கொண்டு செல்லும் போது அதற்குரிய முறையான ரசீதுகள் அல்லது ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் அவை பறிமுதல் செய்யப்பட்டு உரிய விசாரணைக்கு உட்படுத்தப்படும்," என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள சிலைகள் குறித்து வருவாய்த்துறை மற்றும் தேர்தல் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே சிலைகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படுமா அல்லது மேல் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரியவரும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Prakash Raj: முதலமைச்சர் ஆசை கேட்குதா? - விஜயை வெளுத்து வாங்கிய பிரகாஷ்ராஜ்!
Prakash Raj: முதலமைச்சர் ஆசை கேட்குதா? - விஜயை வெளுத்து வாங்கிய பிரகாஷ்ராஜ்!
தேசிய ஜனநாயக கூட்டணி தஞ்சை வேட்பாளருக்கு லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) ஆதரவு
தேசிய ஜனநாயக கூட்டணி தஞ்சை வேட்பாளருக்கு லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) ஆதரவு
Anbumani Ramadoss: பாமக ஒரு நெருப்பு.. நேரடியாக தொடக்கூட முடியாது.. அன்புமணி ஆவேசம்!
Anbumani Ramadoss: பாமக ஒரு நெருப்பு.. நேரடியாக தொடக்கூட முடியாது.. அன்புமணி ஆவேசம்!
KA Sengottaiyan: ஜெயலலிதாவுக்குப் பின் முதலமைச்சர்.. வாய்ப்பை தட்டிப் பறித்த இபிஎஸ்.. செங்கோட்டையன் சொன்ன கதை!
KA Sengottaiyan: ஜெயலலிதாவுக்குப் பின் முதலமைச்சர்.. வாய்ப்பை தட்டிப் பறித்த இபிஎஸ்.. செங்கோட்டையன் சொன்ன கதை!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation: 60 பேரை தேடும் பாஜக..! இன்று மாலை வாக்கெடுப்பு - மக்களவையில் பலத்தை காட்டிடுமா? கணக்குகள் என்ன?
Delimitation: 60 பேரை தேடும் பாஜக..! இன்று மாலை வாக்கெடுப்பு - மக்களவையில் பலத்தை காட்டிடுமா? கணக்குகள் என்ன?
Delimitation: தெற்குக்கு 195, வடக்குக்கு 600+ தொகுதிகள் - மோடி,அமித் ஷா கணக்கில் எங்கே நியாயம்? யாருக்கு ஆபத்து?
Delimitation: தெற்குக்கு 195, வடக்குக்கு 600+ தொகுதிகள் - மோடி,அமித் ஷா கணக்கில் எங்கே நியாயம்? யாருக்கு ஆபத்து?
USA Isarael IRAN War: போர் நிறுத்தம் ஓகே ஆகிடுச்சு..! விட்டுக்கொடுத்த ஈரான்? இனி கொலை இல்லை, ட்ரம்பை நம்பலமா?
USA Isarael IRAN War: போர் நிறுத்தம் ஓகே ஆகிடுச்சு..! விட்டுக்கொடுத்த ஈரான்? இனி கொலை இல்லை, ட்ரம்பை நம்பலமா?
Delimitation: ஸ்டாலின் vs மத்திய அரசு: தொகுதி மறுசீரமைப்பை தமிழ்நாடு காத்திரமாக எதிர்ப்பது ஏன்? ஓர் எளிய விளக்கம்
Delimitation: ஸ்டாலின் vs மத்திய அரசு: தொகுதி மறுசீரமைப்பை தமிழ்நாடு காத்திரமாக எதிர்ப்பது ஏன்? ஓர் எளிய விளக்கம்
Mitsubishi Pajero: கம்பேக்கிற்கு ரெடி..! முற்றிலும் புதிய வடிவில் பஜேரோ - எந்த ரோட்லயும் தாராளமா ஓடும் எஸ்யுவி
Mitsubishi Pajero: கம்பேக்கிற்கு ரெடி..! முற்றிலும் புதிய வடிவில் பஜேரோ - எந்த ரோட்லயும் தாராளமா ஓடும் எஸ்யுவி
TVK Manifesto 2026: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் காப்பீடு, இலவச மின்சாரம்; தவெக தேர்தல் அறிக்கை டாப் 10 அம்சங்கள்!
TVK Manifesto 2026: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் காப்பீடு, இலவச மின்சாரம்; தவெக தேர்தல் அறிக்கை டாப் 10 அம்சங்கள்!
TN Election 2026: தேர்தல் திருவிழா... சொந்த ஊர் செல்லத் தயாரா? ஏப்ரல் 21 முதல் 10,600+ சிறப்பு பேருந்துகள் தயார்
TN Election 2026: தேர்தல் திருவிழா... சொந்த ஊர் செல்லத் தயாரா? ஏப்ரல் 21 முதல் 10,600+ சிறப்பு பேருந்துகள் தயார்
TVK Vijay: சென்னையைக் குறிவைக்கும் விஜய்! – கும்மிடிப்பூண்டி பிரச்சாரம் ரத்து; 20ஆம் தேதி மெகா பிளான்
சென்னையைக் குறிவைக்கும் விஜய்! – கும்மிடிப்பூண்டி பிரச்சாரம் ரத்து; 20ஆம் தேதி மெகா பிளான்
Embed widget