மேலும் அறிய

போதை பொருட்கள் விற்பனை; மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 கடைகளுக்கு சீல்

அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா வகையிலான ஹான்ஸ், கூலிப் போன்ற போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி  30 கடைகளுக்கு சீல் வைத்து இருவரை கைது செய்துள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், குத்தாலத்தில் பள்ளி மாணவர்கள் கஞ்சா உபயோகிப்பதாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீதும் சட்டத்திற்கு புறம்பாக கடைகளில் குட்கா விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா உத்தரவிட்டார். 


போதை பொருட்கள் விற்பனை; மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 கடைகளுக்கு சீல்

இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையில் நகராட்சி உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் மயிலாடுதுறை நகரில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தி, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேரை கைது செய்ததுடன், 3 கடைகளுக்கு சீல் வைத்து, 75 ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 60 பேர் அடங்கிய காவலர்கள் சாதாரண உடையில் சென்று குட்கா விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து சோதனை நடத்தினர். இதில் மயிலாடுதுறை நகரம், நீடுர், மாப்படுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 22 கடைகளில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். 


போதை பொருட்கள் விற்பனை; மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 கடைகளுக்கு சீல்

தொடர்ந்து நகராட்சி துறை அதிகாரிகள் முன்னிலையில் கடைகளுக்கு சீல் வைத்தனர். இதேபோல், குத்தாலத்தில் ஏ.ஆர் டிஎஸ்பி ரவிச்சந்திரன், குத்தாலம் காவல் ஆய்வாளர் அமுதராணி தலைமையில் காவல்துறையினர் கஞ்சா குற்றச்சாட்டுக்கு உள்ளான பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் பிற பகுதிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு 4 கடைகளில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து சீல் வைத்துள்ளனர். இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தாலூக்காவிலும் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை  விற்பனை செய்த நான்கு கடைகளுக்கு சீல் வைத்து புகையிலை பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர். 


போதை பொருட்கள் விற்பனை; மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 கடைகளுக்கு சீல்

சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் பழனிசாமி மற்றும் காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார் சீர்காழியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கடைகளை சோதனை செய்தனர், அதில் புத்தூர், கொள்ளிட முக்குட்டு,  ரயில்வே ரோடு, செங்கமேடு அகிய நான்கு கடைகளில் புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.


போதை பொருட்கள் விற்பனை; மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 கடைகளுக்கு சீல்

இதனை அடுத்து கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.  சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் முன்னிலையில் நான்கு கடைகளுக்கு சீல் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெறும் என்றும்,  வணிகர்கள் சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு உரிய அறிவுகளை வழங்கி இது போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Super 12 T20 World Cup Squads : டி20 உலககோப்பையில் களமிறங்கப்போது யார்..? யார்..? தெரியுமா..? அனைத்து அணிகளின் முழு விவரம் உள்ளே..!

 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தீராத உடல்நல பிரச்னை.. பில்லி சூனியம் வைத்ததாக மருமகளை வெட்டிக் கொன்ற மாமனார்!
தீராத உடல்நல பிரச்னை.. பில்லி சூனியம் வைத்ததாக மருமகளை வெட்டிக் கொன்ற மாமனார்!
கதறும் 70 வயது மூதாட்டி.. கண்டுகொள்ளாத காவல்துறை? சீர்காழியில் வெளிச்சத்திற்கு வந்த பகீர் சம்பவம்!
கதறும் 70 வயது மூதாட்டி.. கண்டுகொள்ளாத காவல்துறை? சீர்காழியில் வெளிச்சத்திற்கு வந்த பகீர் சம்பவம்!
பழைய குழம்பு வைத்ததால் ஆத்திரம் !! மனைவியை கொன்று தூக்கில் தொங்க விட்ட கணவனால் பரபரப்பு
பழைய குழம்பு வைத்ததால் ஆத்திரம் !! மனைவியை கொன்று தூக்கில் தொங்க விட்ட கணவனால் பரபரப்பு
காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் கொடூரம் !! மகள் - மருமகனை அரிவாளால் வெட்டிய தந்தை
காதல் திருமணம் செய்த 3 மாதத்தில் கொடூரம் !! மகள் - மருமகனை அரிவாளால் வெட்டிய தந்தை

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?
Tamil Nadu By Election : விஜய்க்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள்.! தாராபுரத்தில் CPI.. மதுராந்தகத்தில் CPM போட்டி
விஜய்க்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட் .! தாராபுரத்தில் CPI.. மதுராந்தகத்தில் CPM போட்டி
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
A Raja DMK : “வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
“வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
Pension : ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ்.! செப்.14 முதல் பணம் டெபாசிட்.? தமிழக அரசு அறிவிப்பு
ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ்.! செப்.14 முதல் பணம் டெபாசிட்.? தமிழக அரசு அறிவிப்பு
Rameswaram New Road : ராமேஸ்வரத்திற்குள் செல்ல 100 அடி அகலத்தில் புதிய மாற்று சாலை.! 36 கோடியில்- எந்த வழியில் செல்லுது தெரியுமா.?
ராமேஸ்வரம் செல்ல இனி புதிய வழி.! 100 அடி அகலத்தில் மாற்றுச்சாலை- பிரம்மாண்ட திட்டம்- எந்த வழியில்.?
தெற்கு ரயில்வே தொழில் பழகுநர் அறிவிக்கை: தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை மறுப்பு - அன்புமணி கண்டனம்!
தெற்கு ரயில்வே தொழில் பழகுநர் அறிவிக்கை: தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை மறுப்பு - அன்புமணி கண்டனம்!
Power Cuts Electricity Purchase : மின்வெட்டுக்கு குட்பை.! 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்- செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மின்வெட்டுக்கு குட்பை.! 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்- செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget