மேலும் அறிய

போதை பொருட்கள் விற்பனை; மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 கடைகளுக்கு சீல்

அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா வகையிலான ஹான்ஸ், கூலிப் போன்ற போதை பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி  30 கடைகளுக்கு சீல் வைத்து இருவரை கைது செய்துள்ளனர். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், குத்தாலத்தில் பள்ளி மாணவர்கள் கஞ்சா உபயோகிப்பதாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீதும் சட்டத்திற்கு புறம்பாக கடைகளில் குட்கா விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா உத்தரவிட்டார். 


போதை பொருட்கள் விற்பனை; மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 கடைகளுக்கு சீல்

இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையில் நகராட்சி உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் மயிலாடுதுறை நகரில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தி, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 2 பேரை கைது செய்ததுடன், 3 கடைகளுக்கு சீல் வைத்து, 75 ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 60 பேர் அடங்கிய காவலர்கள் சாதாரண உடையில் சென்று குட்கா விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து சோதனை நடத்தினர். இதில் மயிலாடுதுறை நகரம், நீடுர், மாப்படுகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 22 கடைகளில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். 


போதை பொருட்கள் விற்பனை; மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 கடைகளுக்கு சீல்

தொடர்ந்து நகராட்சி துறை அதிகாரிகள் முன்னிலையில் கடைகளுக்கு சீல் வைத்தனர். இதேபோல், குத்தாலத்தில் ஏ.ஆர் டிஎஸ்பி ரவிச்சந்திரன், குத்தாலம் காவல் ஆய்வாளர் அமுதராணி தலைமையில் காவல்துறையினர் கஞ்சா குற்றச்சாட்டுக்கு உள்ளான பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் பிற பகுதிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு 4 கடைகளில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து சீல் வைத்துள்ளனர். இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தாலூக்காவிலும் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை  விற்பனை செய்த நான்கு கடைகளுக்கு சீல் வைத்து புகையிலை பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர். 


போதை பொருட்கள் விற்பனை; மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 கடைகளுக்கு சீல்

சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் பழனிசாமி மற்றும் காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார் சீர்காழியில் உள்ள 30க்கும் மேற்பட்ட கடைகளை சோதனை செய்தனர், அதில் புத்தூர், கொள்ளிட முக்குட்டு,  ரயில்வே ரோடு, செங்கமேடு அகிய நான்கு கடைகளில் புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.


போதை பொருட்கள் விற்பனை; மயிலாடுதுறை மாவட்டத்தில் 30 கடைகளுக்கு சீல்

இதனை அடுத்து கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர்.  சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் முன்னிலையில் நான்கு கடைகளுக்கு சீல் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெறும் என்றும்,  வணிகர்கள் சங்கங்கள் தங்கள் உறுப்பினர்களுக்கு உரிய அறிவுகளை வழங்கி இது போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Super 12 T20 World Cup Squads : டி20 உலககோப்பையில் களமிறங்கப்போது யார்..? யார்..? தெரியுமா..? அனைத்து அணிகளின் முழு விவரம் உள்ளே..!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget