மேலும் அறிய

Crime: பாம்பை விட்டு கடிக்க வைத்து மனைவி, குழந்தையை கொன்ற கொடூர கணவன் - ஒடிசாவில் பயங்கரம்! பகீர் காரணம்!

மனைவி, மகளை பாம்பை விட்டு கடிக்க வைத்து கணவர் கொலை செய்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime: மனைவி, மகளை பாம்பை விட்டு கடிக்க வைத்து  கணவர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்த கணவன்

ஒடிசாவின் கன்ஜாராம் மாவட்டம் அத்திபாரா கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பத்ரா (25). இவரது மனைவி பன்சாந்தி பத்ரா. இவர்களுக்கு கடந்த 2020ஆம் அண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கணவர் கணேஷ் பத்ரா,  திருமணம் ஆனதில் இருந்தே வரதட்சணை கேட்டு மனைவியை டார்சர் செய்து வந்துள்ளதாக தெரிகிறது. நாள்தோறும் வரதட்சணை கேட்டு மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. கணவன் கணேஷின் கொடுமை தாங்காமல், வரதட்சணை கேட்டு தன் கணவன் கொடுமைப்படுத்துவதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதனை அடுத்து, கணேஷை போலீசார் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி உள்ளனர்.  இதன் பிறகு, மூன்று மாதங்களாக கணவன் கணேஷ் மனைவியிடம் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுக்காமல் இருந்திருக்கிறார்.   இதனையடுத்து, கடந்த அக்டோபர் 7ஆம் தேதி கணேஷின் மனைவி பன்சாந்தி மற்றும் அவரது குழந்தை ஆகியோர் நுரை தள்ளியப்படி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்து அவரது கணவன் கணேஷ் கதறி அழுந்துள்ளார்.

இதனை  அறிந்த அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இரண்டு பேரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு  மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து, தாய் மற்றும் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பன்சாந்தி மற்றும் அவரது குழந்தை ஆகியோர் நாகபாம்பு கடித்து விஷம் ஏறி இறந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. 

பணத்திற்காக கணவன் செய்த கொடூரம்

ஆனால், ஒரே நேரத்தில் எப்படி இரண்டு பேரும் பாம்பு கடித்து இறந்து இருப்பார்கள் என போலீசார் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால், போலீசார் அக்கம் பக்கத்தில்  இருப்பவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில நாட்களாகவே, கணேஷ் பல்வேறு பாம்பாட்டிகளை சந்தித்து விஷம் நிறைந்த நாகபாம்பு கேட்டிருக்கிறார். கோயிலுக்கு விட வேண்டும் என்று சொல்லி பாம்பை கேட்டிருக்கிறார்.

அதன்படி, அந்த பாம்பை வாங்கி வந்து அக்டோபர் 7ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் வீட்டில் பாம்பை விட்டுள்ளார். அந்த பாம்பு மகளையும், மனைவியையும் கடித்துள்ளது. காலையில் ஒன்றும் தெரியாதது போல் நடித்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், ஒடிசா அரசு விபத்து, பாம்பு கடி உள்ளிட்ட இயற்கை மரணங்களுக்கு ரூ.4 லட்சம் தருகிறது. அதன்படி, நான்கு லட்சத்திற்காக கணேஷ் பத்ரா, மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்திருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மனைவி மகளை பாம்பை விட்டு கடிக்க வைத்து கொலை செய்த கொடூர கணவரை போலீசார் கைது செய்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Sheikh Hasina: வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
TN Weather Red Alert: டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
Sengottaiyan: செங்கோட்டையனுக்கு தவெக-வில் என்ன பதவி? விஜய் பரபரப்பு அறிவிப்பு
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
சபரிமலையில் தொடரும் சோகம் 9 நாட்களில் 9 பக்தர்கள் உயிரிழப்பு ! மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க காரணம் என்ன? சுகாதாரத்துறை எச்சரிக்கை!
Sheikh Hasina: வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
வெந்த புண்ணில் பாய்ந்த வேல்; ஊழல் வழக்கு; வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டுகள் சிறை
TN Weather Red Alert: டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
டிட்வா புயலால் சென்னையில் வெளுக்கப் போகும் மழை; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - முழு விவரம்
காஞ்சிபுரம் பெண்களே! ரூ.10 லட்சம் கடன் & 25% மானியம்! TWEES திட்டம்: உடனே விண்ணப்பிங்க!
காஞ்சிபுரம் பெண்களே! ரூ.10 லட்சம் கடன் & 25% மானியம்! TWEES திட்டம்: உடனே விண்ணப்பிங்க!
Cyclone Ditwah: வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
White House Gun Shoot: வெள்ளை மாளிகை துப்பாக்கிச்சூடு; ஆப்கானியர்களின் குடியேற்ற கோரிக்கைகளை நிறுத்தி வைத்த அமெரிக்கா
வெள்ளை மாளிகை துப்பாக்கிச்சூடு; ஆப்கானியர்களின் குடியேற்ற கோரிக்கைகளை நிறுத்தி வைத்த அமெரிக்கா
TN RED ALERT: ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Embed widget