மேலும் அறிய

Crime: அடுத்தடுத்த இரண்டு கொலைகள்..! 3வது கொலைக்கு முன் மாட்டிக்கொண்ட கும்பல்..! நெல்லையில் நடந்தது என்ன?

திரைப்படத்தில் வருவது போன்றே சர்வ சாதாரணமாக ஒரே நாளில் இரண்டு கொலைகளை செய்து மூன்றாவது கொலை செய்ய சென்ற சம்பவம் நெல்லை மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி அருகே உள்ள பற்பநாதபுரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் ஐயப்பன் என்ற சுரேஷ். இவர் செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் அவர் செங்கல் சூளையில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  6 பேர் கும்பல் இந்த கொலையை செய்ததாக கூறப்பட்ட நிலையில் காவல்துறையினர் அது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த நிலையில் அதே நாளில் தூத்துக்குடி அருகே கருப்பசாமி என்பவரை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. மேலும் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்ட பாளையங்கோட்டையை சேர்ந்த கார்த்திக் பாண்டியன், முத்துவேல் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்  அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

அதில் கார்த்திக் பாண்டியனின் புல்லட்டை எடுத்துச் சென்ற பாபு செல்வம் அதனை திருப்பி தராமல் இருந்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பாபு செல்வத்தை நேற்று முன் தினம் இரவு ரெட்டியார்பட்டி மலை அருகே காட்டுப்பகுதியில் கொலை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து செய்துங்கநல்லூருக்கு வந்து ஐயப்பன் என்ற சுரேஷை வேலை முடிந்து வரும் வழியில் கொலை செய்துள்ளனர். அதன் பின்னர் தூத்துக்குடியை சேர்ந்த கருப்பசாமியை கொலை செய்ய முயற்சிக்கும் பொழுது காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பிடிபட்ட 6 பேர் கொண்ட கும்பலில் உள்ள ஒருவருக்கு ஐயப்பன் என்ற சுரேஷூடன் முன்விரோதம் இருந்த காரணத்தை பயன்படுத்தி தன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. 

இந்த இரண்டு கொலைகளையும் செய்த 6 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள கருப்பசாமி என்பவரை மூன்றாவதாக கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கருப்பசாமி தன்னை கொலை செய்ய 6 பேர் கொண்ட கும்பல் நெல்லையில் இருந்து வருவதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கருப்பசாமியை கொலை செய்ய விடாமல் தடுத்ததோடு இரண்டு கொலைகளை செய்த ஆறு பேர் கொண்ட  கும்பலை கைது செய்ததாக தெரியவந்துள்ளது.  பிடிபட்ட  அன்பு, சிவபெருமாள், கார்த்திக் பாண்டியன், முத்துவேல் உள்ளிட்ட ஆறு பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். காவல்துறையின் கைதுக்கு பின்னரே பாபு செல்வம் மலைப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடப்பது வெளியே தெரிய வந்துள்ளது. அதன்பின்னரே காவல்துறையினர் அங்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஒரே நாளில் இரண்டு கொலைகளை செய்த கும்பல் மூன்றாவது கொலையை செய்ய திட்டமிட்டு செல்லும்போது காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படத்தில் வருவது போன்றே சர்வ சாதாரணமாக ஒரே நாளில் இரண்டு கொலைகளை செய்து மூன்றாவது கொலை செய்ய சென்ற சம்பவம் நெல்லை மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
Kerala Election Results: கேரளாவில் காலூன்றிய பாஜக.. திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி சாதனை!
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
Embed widget