மேலும் அறிய

Crime: அடுத்தடுத்த இரண்டு கொலைகள்..! 3வது கொலைக்கு முன் மாட்டிக்கொண்ட கும்பல்..! நெல்லையில் நடந்தது என்ன?

திரைப்படத்தில் வருவது போன்றே சர்வ சாதாரணமாக ஒரே நாளில் இரண்டு கொலைகளை செய்து மூன்றாவது கொலை செய்ய சென்ற சம்பவம் நெல்லை மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி அருகே உள்ள பற்பநாதபுரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் ஐயப்பன் என்ற சுரேஷ். இவர் செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் அவர் செங்கல் சூளையில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  6 பேர் கும்பல் இந்த கொலையை செய்ததாக கூறப்பட்ட நிலையில் காவல்துறையினர் அது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த நிலையில் அதே நாளில் தூத்துக்குடி அருகே கருப்பசாமி என்பவரை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. மேலும் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்ட பாளையங்கோட்டையை சேர்ந்த கார்த்திக் பாண்டியன், முத்துவேல் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்  அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

அதில் கார்த்திக் பாண்டியனின் புல்லட்டை எடுத்துச் சென்ற பாபு செல்வம் அதனை திருப்பி தராமல் இருந்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பாபு செல்வத்தை நேற்று முன் தினம் இரவு ரெட்டியார்பட்டி மலை அருகே காட்டுப்பகுதியில் கொலை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து செய்துங்கநல்லூருக்கு வந்து ஐயப்பன் என்ற சுரேஷை வேலை முடிந்து வரும் வழியில் கொலை செய்துள்ளனர். அதன் பின்னர் தூத்துக்குடியை சேர்ந்த கருப்பசாமியை கொலை செய்ய முயற்சிக்கும் பொழுது காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பிடிபட்ட 6 பேர் கொண்ட கும்பலில் உள்ள ஒருவருக்கு ஐயப்பன் என்ற சுரேஷூடன் முன்விரோதம் இருந்த காரணத்தை பயன்படுத்தி தன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. 

இந்த இரண்டு கொலைகளையும் செய்த 6 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள கருப்பசாமி என்பவரை மூன்றாவதாக கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கருப்பசாமி தன்னை கொலை செய்ய 6 பேர் கொண்ட கும்பல் நெல்லையில் இருந்து வருவதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கருப்பசாமியை கொலை செய்ய விடாமல் தடுத்ததோடு இரண்டு கொலைகளை செய்த ஆறு பேர் கொண்ட  கும்பலை கைது செய்ததாக தெரியவந்துள்ளது.  பிடிபட்ட  அன்பு, சிவபெருமாள், கார்த்திக் பாண்டியன், முத்துவேல் உள்ளிட்ட ஆறு பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். காவல்துறையின் கைதுக்கு பின்னரே பாபு செல்வம் மலைப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடப்பது வெளியே தெரிய வந்துள்ளது. அதன்பின்னரே காவல்துறையினர் அங்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஒரே நாளில் இரண்டு கொலைகளை செய்த கும்பல் மூன்றாவது கொலையை செய்ய திட்டமிட்டு செல்லும்போது காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படத்தில் வருவது போன்றே சர்வ சாதாரணமாக ஒரே நாளில் இரண்டு கொலைகளை செய்து மூன்றாவது கொலை செய்ய சென்ற சம்பவம் நெல்லை மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வருடத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்த கணவன் !! மனைவியின் திருமணத்தை மீறிய உறவு !! நடந்தது என்ன
வருடத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்த கணவன் !! மனைவியின் திருமணத்தை மீறிய உறவு !! நடந்தது என்ன
கன பொழுதில் சைக்கிள் அபேஸ்... கோவையை அதிர வைக்கும் பலே கில்லாடிகள்..
கன பொழுதில் சைக்கிள் அபேஸ்... கோவையை அதிர வைக்கும் பலே கில்லாடிகள்..
தொடர் குற்றங்களில் ஈடுபட்ட மூதாட்டி: குண்டர் சட்டத்தில் சிறை! மயிலாடுதுறை அதிரடி நடவடிக்கை, காரணம் என்ன?
தொடர் குற்றங்களில் ஈடுபட்ட மூதாட்டி: குண்டர் சட்டத்தில் சிறை! மயிலாடுதுறை அதிரடி நடவடிக்கை, காரணம் என்ன?
அரசு பேருந்தில் திடீரென கழன்று ஓடிய 2 சக்கரங்கள்! நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்... சீர்காழியில் திக்..திக்..
அரசு பேருந்தில் திடீரென கழன்று ஓடிய 2 சக்கரங்கள்! நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்... சீர்காழியில் திக்..திக்..
ABP Premium

வீடியோ

DMK Madurai maanadu | ஹாட்பாக்ஸில் மட்டன் பிரியாணி! சிக்கன் 65, தால்சா! மதுரை திமுக அசத்தல்
OPS meets MK Stalin | ஸ்டாலின் - OPS சந்திப்பு! திமுக கூட்டணியில் OPS? சட்டப்பேரவையில் சம்பவம்
DMK Vs Congress | டர்ரு விடும் காங்கிரஸ் ஸ்டாலின் சீக்ரெட் Operation தட்டி தூக்கிய தளபதிகள்
MK Stalin | ”ஸ்டாலின் அல்லது மம்தா” I.N.D.I.A கூட்டணி தலைவர் பதவி! சீனுக்கு வந்த உத்தவ் தாக்கரே
AI Summit 2026 | இந்தியா மானமே போச்சு.. AI மாநாட்டில் சீன ரோபோ! சீட்டிங் செய்த உ.பி UNIVERSITY

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi slams Congress:
PM Modi slams Congress: "நாட்டையே அசிங்கப்படுத்திட்டீங்க" காங்கிரஸை அக்கு அக்காய் விமர்சித்த பிரதமர் மோடி
ADMK: பில்லே சாட்சி பிரச்சாரம்.. ஸ்பீடை ஏத்தும் அதிமுக! வீடு,வீடாய் போகச் சொன்ன இபிஎஸ்!
ADMK: பில்லே சாட்சி பிரச்சாரம்.. ஸ்பீடை ஏத்தும் அதிமுக! வீடு,வீடாய் போகச் சொன்ன இபிஎஸ்!
T20 WC ENG vs SL: தட்டுத் தடுமாறிய இ்ங்கிலாந்து! பவுலிங்கில் மிரட்டிய இலங்கை - சூப்பர் 8ல் வெற்றி யாருக்கு?
T20 WC ENG vs SL: தட்டுத் தடுமாறிய இ்ங்கிலாந்து! பவுலிங்கில் மிரட்டிய இலங்கை - சூப்பர் 8ல் வெற்றி யாருக்கு?
ஒரே சார்ஜில் 530 கிலோமீட்டர் மைலேஜ்.. 7 சீட்டர்.. BYD eMax 7 மின்சார கார் எப்படி?
ஒரே சார்ஜில் 530 கிலோமீட்டர் மைலேஜ்.. 7 சீட்டர்.. BYD eMax 7 மின்சார கார் எப்படி?
DMK alliance seat allocation : எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? ஆட்டத்தை ஆரம்பித்த திமுக- யார் யாருக்கு அழைப்பு.?
எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? ஆட்டத்தை ஆரம்பித்த திமுக- யார் யாருக்கு அழைப்பு.?
Kader Mohideen Health update: திடீரென சரிந்த காதர் மொகிதீன்.! அறிவாலயத்தில் நடந்தது என்ன.? உடல்நிலை இப்போ எப்படி இருக்கு.?
திடீரென சரிந்த காதர் மொகிதீன்.! அறிவாலயத்தில் நடந்தது என்ன.? உடல்நிலை இப்போ எப்படி இருக்கு.?
Namo Bharat Train: 82.15KM தூரம்..! 55 நிமிஷம் தான், 180KM ஸ்பீட் - 12KM பூமிக்கு கீழ - மிரட்டலான நமோ பாரத் ரயில்
Namo Bharat Train: 82.15KM தூரம்..! 55 நிமிஷம் தான், 180KM ஸ்பீட் - 12KM பூமிக்கு கீழ - மிரட்டலான நமோ பாரத் ரயில்
கிறிஸ்தவரான செல்வப்பெருந்தகை தனி தொகுதியில் போட்டியிடுவதா.. உடனே பதவி விலகனும்- சீறும் பாஜக
கிறிஸ்தவரான செல்வப்பெருந்தகை தனி தொகுதியில் போட்டியிடுவதா.. உடனே பதவி விலகனும்- சீறும் பாஜக
Embed widget