மேலும் அறிய

Crime: அடுத்தடுத்த இரண்டு கொலைகள்..! 3வது கொலைக்கு முன் மாட்டிக்கொண்ட கும்பல்..! நெல்லையில் நடந்தது என்ன?

திரைப்படத்தில் வருவது போன்றே சர்வ சாதாரணமாக ஒரே நாளில் இரண்டு கொலைகளை செய்து மூன்றாவது கொலை செய்ய சென்ற சம்பவம் நெல்லை மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி அருகே உள்ள பற்பநாதபுரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் ஐயப்பன் என்ற சுரேஷ். இவர் செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் அவர் செங்கல் சூளையில் வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய போது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.  6 பேர் கும்பல் இந்த கொலையை செய்ததாக கூறப்பட்ட நிலையில் காவல்துறையினர் அது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  இந்த நிலையில் அதே நாளில் தூத்துக்குடி அருகே கருப்பசாமி என்பவரை கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. மேலும் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்ட பாளையங்கோட்டையை சேர்ந்த கார்த்திக் பாண்டியன், முத்துவேல் உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில்  அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

அதில் கார்த்திக் பாண்டியனின் புல்லட்டை எடுத்துச் சென்ற பாபு செல்வம் அதனை திருப்பி தராமல் இருந்துள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பாபு செல்வத்தை நேற்று முன் தினம் இரவு ரெட்டியார்பட்டி மலை அருகே காட்டுப்பகுதியில் கொலை செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து செய்துங்கநல்லூருக்கு வந்து ஐயப்பன் என்ற சுரேஷை வேலை முடிந்து வரும் வழியில் கொலை செய்துள்ளனர். அதன் பின்னர் தூத்துக்குடியை சேர்ந்த கருப்பசாமியை கொலை செய்ய முயற்சிக்கும் பொழுது காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பிடிபட்ட 6 பேர் கொண்ட கும்பலில் உள்ள ஒருவருக்கு ஐயப்பன் என்ற சுரேஷூடன் முன்விரோதம் இருந்த காரணத்தை பயன்படுத்தி தன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. 

இந்த இரண்டு கொலைகளையும் செய்த 6 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள கருப்பசாமி என்பவரை மூன்றாவதாக கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட கருப்பசாமி தன்னை கொலை செய்ய 6 பேர் கொண்ட கும்பல் நெல்லையில் இருந்து வருவதாக காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கருப்பசாமியை கொலை செய்ய விடாமல் தடுத்ததோடு இரண்டு கொலைகளை செய்த ஆறு பேர் கொண்ட  கும்பலை கைது செய்ததாக தெரியவந்துள்ளது.  பிடிபட்ட  அன்பு, சிவபெருமாள், கார்த்திக் பாண்டியன், முத்துவேல் உள்ளிட்ட ஆறு பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர். காவல்துறையின் கைதுக்கு பின்னரே பாபு செல்வம் மலைப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடப்பது வெளியே தெரிய வந்துள்ளது. அதன்பின்னரே காவல்துறையினர் அங்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஒரே நாளில் இரண்டு கொலைகளை செய்த கும்பல் மூன்றாவது கொலையை செய்ய திட்டமிட்டு செல்லும்போது காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படத்தில் வருவது போன்றே சர்வ சாதாரணமாக ஒரே நாளில் இரண்டு கொலைகளை செய்து மூன்றாவது கொலை செய்ய சென்ற சம்பவம் நெல்லை மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

Chennai Nude Puja Fraud: நிர்வாணப் பூஜை செய்தால் அது நடக்குமா? தென்காசி கிளி ஜோசியரின் பகீர் லீலைகள்!
நிர்வாணப் பூஜை செய்தால் அது நடக்குமா? தென்காசி கிளி ஜோசியரின் பகீர் லீலைகள்!
தினம் ஒரு குண்டாஸ்... மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 47 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு..
தினம் ஒரு குண்டாஸ்... மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 47 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு..
'அரசு சம்பளம்... தனியார் கமிஷன்...' - மயிலாடுதுறை டாக்டரின் லீலைகள் வீடியோவாக வெளியாகி பரபரப்பு!
'அரசு சம்பளம்... தனியார் கமிஷன்...' - மயிலாடுதுறை டாக்டரின் லீலைகள் வீடியோவாக வெளியாகி பரபரப்பு!
“அவமானத்தை தாங்க முடியல” - மனைவியின் செயலால் மாமியார் வீட்டில் கணவன் எடுத்த விபரீத முடிவு!
“அவமானத்தை தாங்க முடியல” - மனைவியின் செயலால் மாமியார் வீட்டில் கணவன் எடுத்த விபரீத முடிவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KN Nehru: கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
US Iran War: கார்க் தீவு அருகே கலவரம்.! ஈரானிய எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; அதிகரிக்கும் பதற்றம்
கார்க் தீவு அருகே கலவரம்.! ஈரானிய எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; அதிகரிக்கும் பதற்றம்
CM Vijay: CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
கம்மி பட்ஜெட், 34 கி.மீ. மைலேஜ்; ஆல்டோ K10 காருக்கு ரூ.62,500 அதிரடி சலுகை அறிவித்த மாருதி!
கம்மி பட்ஜெட், 34 கி.மீ. மைலேஜ்; ஆல்டோ K10 காருக்கு ரூ.62,500 அதிரடி சலுகை அறிவித்த மாருதி!
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
Chennai Power Cut: சென்னைல ஞாயிற்றுக்கிழமை (06.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு பாருங்க
சென்னைல ஞாயிற்றுக்கிழமை (06.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு பாருங்க
TN Weather News: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இடி, மின்னலுடன் இன்று மழை? சென்னை? வானிலை அறிக்கை
Kia Sorento: சொரெண்டோ வேரியண்ட்களின் விலை விவரங்கள் - போட்டியாளர்கள் எப்படி? SUV-க்களின் முழு ஒப்பீடு
சொரெண்டோ வேரியண்ட்களின் விலை விவரங்கள் - போட்டியாளர்கள் எப்படி? SUV-க்களின் முழு ஒப்பீடு
Embed widget