மேலும் அறிய

நெல்லையில் கடத்தப்பட்ட குழந்தை திருச்செந்தூரில் மீட்பு - குழந்தை மீட்கப்பட்டது எப்படி..?

குழந்தையின் காதில் கிடந்த கம்மல் மட்டும் மாயமாகி உள்ளதோடு குழந்தையின் கன்னம், கழுத்துப்பகுதியில் லேசான காயம் இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ளது ஆற்றங்கரை பள்ளிவாசல். மிகவும் புகழ்பெற்ற இந்த ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு இஸ்லாமிய மக்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் சென்று நேர்த்திக்கடனை செலுத்தி வருவது வழக்கம். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து தங்கியிருந்து வழிபாடு நடத்தி செல்வர். இந்த சூழலில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சாகுல் ஹமீது, தனது மனைவி நாகூர் மீரா, குழந்தைகள் முகமது சபிக் (7),  நஜிலா பாத்திமா (21/2) ஆகியோருடன் ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு நேற்றுமுன் மதியம் வந்து தங்கி உள்ளனர்.


நெல்லையில் கடத்தப்பட்ட குழந்தை திருச்செந்தூரில் மீட்பு - குழந்தை மீட்கப்பட்டது எப்படி..?

தனது இரு குழந்தைகளுக்கு மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்த வந்த  நிலையில் இரவு நேரமாகியதால் தனது குழந்தைகளுடன் தர்காவில் உள்ள திண்ணையில் தூங்கி உள்ளனர். பின்னர் அதிகாலை தூங்கி எழுந்து பார்த்த போது தனது அருகே தூங்கிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை நஜிலா பாத்திமா காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் அதிகாலை 4 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை தோளில் தூக்கி கொண்டு நடந்து சென்று அருகே நிறுத்தி இருந்த காரில் கடத்தி செல்வது பதிவாகி இருந்தது. இந்த  சூழலில் இது தொடர்பாக கூடங்குளம் காவல்துறையில் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் இன்று குழந்தை திருச்செந்தூரில் மீட்கப்பட்டது.


நெல்லையில் கடத்தப்பட்ட குழந்தை திருச்செந்தூரில் மீட்பு - குழந்தை மீட்கப்பட்டது எப்படி..?

குறிப்பாக திருச்செந்தூர்  பேருந்து நிலையத்தில் தனியாக நின்று அழுது கொண்டிருந்த பெண் குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் மீட்கப்பட்ட குழந்தை குறித்து விசாரணை நடத்தியதில், அந்த குழந்தை ஆற்றங்கரை பள்ளிவாசலில் இருந்து மர்ம நபரால் கடத்தப்பட்டு தேடப்பட்டு வந்த குழந்தை என்பதை என முடிவு செய்த காவல்துறையினர் அக்குழந்தையின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள்  தங்கள் குழந்தைதான் என உறுதி செய்தனர். குழந்தை கிடைத்ததை அறிந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்திற்கு வந்து குழந்தையை தூக்கி கொஞ்சி ஆனந்த கண்ணீர் விட்டனர்.


நெல்லையில் கடத்தப்பட்ட குழந்தை திருச்செந்தூரில் மீட்பு - குழந்தை மீட்கப்பட்டது எப்படி..?

மேலும் குழந்தையின் காதில் கிடந்த கம்மல் மட்டும் மாயமாகி உள்ளதோடு குழந்தையின் கன்னம், கழுத்துப்பகுதியில் லேசான காயம் இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தை நகைக்காக கடத்தப்பட்டதா? அல்லது சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தன்னை நெருங்கிய அறிந்த மர்ம நபர் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக குழந்தையை திருச்செந்தூரில் விட்டு சென்றாரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" வேலை வேண்டுமா " இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் !! சிக்கிய 37 வயது ஜிம் பயிற்சியாளர்
காதல் திருமணத்தின் சோக முடிவு! கந்திலி அருகே இளம்பெண் தற்கொலை செய்யக் காரணம் என்ன?
காதல் திருமணத்தின் சோக முடிவு! கந்திலி அருகே இளம்பெண் தற்கொலை செய்யக் காரணம் என்ன?
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
US Iran War: ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Tata Sierra EV Delivery: ஒரே சார்ஜில் 600 கிமீ-க்கும் அதிக ரேஞ்ச்.! தொடங்கிய டாடா சியரா EV-ன் டெலிவரி; ஆன்-ரோடு விலை என்ன.?
ஒரே சார்ஜில் 600 கிமீ-க்கும் அதிக ரேஞ்ச்.! தொடங்கிய டாடா சியரா EV-ன் டெலிவரி; ஆன்-ரோடு விலை என்ன.?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
Embed widget