மேலும் அறிய

சினிமா பாணியில் கோடிக்கணக்கில் மோசடி; தாயின் மீது மகன் பரபரப்பு புகார்

பெற்ற மகனே தனது தாய் மோசடியில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களுடன் மனு அளிக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள்.  இவரது கணவருடன் இவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இசக்கியம்மாள் தனது 4 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த நிலையில் பணகுடி காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரிந்து வந்த கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்ணனின் மனைவி கண்டித்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இசக்கியம்மாளும் கண்ணனும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாகவும் தெரிகிறது. 


சினிமா பாணியில் கோடிக்கணக்கில் மோசடி;  தாயின் மீது மகன் பரபரப்பு புகார்

இந்த சூழலில் இசக்கியம்மாள் வடக்கன்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பத்துக்கு மேற்பட்ட நபர்களிடம் அரேபிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆகியும் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர்கள் கேட்டபோது விரைவில் பணியானை வந்து விடும் பொறுமையாக  இருங்கள் என கூறி வந்துள்ளார்.  உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர், புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. தகவலறிந்த  கண்ணன் மற்றும் இசக்கியம்மாள் இருவரும் ஊரை காலி செய்து விட்டு சென்னைக்கு சென்று வசித்து வருவதாக கூறப்படுகிறது.  இதனால் மனமுடைந்து பாதிக்கப்பட்ட பேச்சியம்மாள், தளவாய், பாண்டி, மெரினா, கிரேஸ், செல்வம் ஆகியோர் ஒன்று சேர்ந்து இசக்கியம்மாளின்  மகன் ஸ்டாலினுடன்  வந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.  ஆட்சியர் மனுவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இடம் அனுப்பி விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார்.


சினிமா பாணியில் கோடிக்கணக்கில் மோசடி;  தாயின் மீது மகன் பரபரப்பு புகார்

இதுகுறித்து இசக்கியம்மாளின் மகன்  ஸ்டாலின் கூறும் பொழுது, "எனது தாய் கடந்த இரண்டு வருடத்திற்கும் மேல் பலருக்கும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஒவ்வொருவரிடம்  பணத்தை பெற்று உள்ளார். வேலை எதுவும் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார். தென்காசி, நெல்லை, சென்னை என பல மாவட்டங்களிலும் 100க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி இது போன்று மோசடி செய்துள்ளார். கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றி இருப்பார்.  இது தவறு என அவரிடம் சுட்டி காட்டினால் என்னையும் மிரட்டி அடிக்க திட்டமிட்டு தேடி வருகின்றனர். நான் அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். அவர் செய்யும் தவறுக்காக சட்டப்படி தண்டனை கிடைக்க வேண்டும் என நானும் பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து மனு கொடுக்க வந்துள்ளேன், இந்த உண்மையை எங்கு வேண்டுமானாலும் சொல்வேன்" என கூறினார். வெற்றிக்கொடி கட்டு திரைப்பட பாணியில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஒவ்வொரு ஊரிலும் பணத்தை பெற்றுக் கொண்டு இசக்கியம்மாள் தலைமறைவாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பெற்ற மகனே தனது தாய் மோசடியில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களுடன் மனு அளிக்க வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE:  கோலாகலமாக தொடங்கிய ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. அப்டேட் உடனுக்குடன்!
ABP Southern Rising Summit 2025 LIVE: கோலாகலமாக தொடங்கிய ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. அப்டேட் உடனுக்குடன்!
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE:  கோலாகலமாக தொடங்கிய ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. அப்டேட் உடனுக்குடன்!
ABP Southern Rising Summit 2025 LIVE: கோலாகலமாக தொடங்கிய ABP Southern Rising Summit 2025 நிகழ்ச்சி.. அப்டேட் உடனுக்குடன்!
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
Embed widget