மேலும் அறிய

தட்டிக்கேட்டவரை வெட்டிக் கொன்ற போதை ஆசாமிகள்! பிடிக்க வந்த போலீசுக்கு அரிவாள் வெட்டு - நெல்லையில் நடந்தது என்ன?

திருநெல்வேலியில் போதை ஆசாமிகள் ரகளையில் ஈடுபட்டபோது தட்டிக்கேட்டவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் செட்டிகுளம் பகுதியை சார்ந்தவர் கருப்பசாமி, வயது 42. இவர் வெள்ளங்குளி பகுதியில் நடைபெற்று வரும் சாலை மற்றும் பால பணிகளில் பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அம்பாசமுத்திரம் நோக்கி சென்ற நான்கு சக்கர வாகனத்தை மறித்த தென் திருபுவனம்  கிராமத்தைச்  சேர்ந்த போதை ஆசாமிகள் இருவர் வாகனத்தில் வந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

தட்டிக்கேட்டவர் வெட்டிக்கொலை:

போதை தலைக்கேறிய நிலையில் காரின் பின் பக்க கண்ணாடியையும், அடித்து உடைத்துள்ளனர். இதனை அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த கருப்பசாமி தட்டி கேட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து தாங்கள் வைத்திருந்த அரிவாளால் கருப்பசாமியை வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். பின்னர் அருகில் உள்ள  திருப்புடைமருதூர் பகுதிக்கு சென்ற அவர்கள் அந்த வழியாக வந்த அரசு பேருந்து முன் பக்க கண்ணாடியையும் அடித்து உடைத்துள்ளனர். இந்த நிலையில் இது குறித்து வீரவநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலறிந்த அவர்கள்  தகராறில் ஈடுபடும் போதை ஆசாமிகளை கைது செய்ய திருப்புடைமருதூர் பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்தவர்களை பிடிக்க முயலும் போது வீரவநல்லூர் காவல் நிலையத்தை சார்ந்த தலைமை காவலர் செந்தில்குமார்  என்பவரை கையில் வெட்டி விட்டு வாழை தோட்டத்திற்குள் புகுந்து மறைந்து கொண்டதாக தெரிகிறது. இது தொடர்பாக தகவலறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதோடு மூன்று தனிப்படைகள் அமைத்து அவர்களை தேடும் பணியை முடிக்கி விட்டார். அப்போது தனிப்படையினர் அவர்களை அங்குள்ள வயல் பகுதிகளில் தேட தொடங்கினர்.

சுட்டுப்பிடித்த போலீஸ்:

இந்த நிலையில் இருவரில் ஒருவரான பேச்சித்துரை என்பவர் தப்பி ஓடிய நிலையில், சீதபற்பநல்லூர்  பகுதியில் தப்பியோடிய போது காவல் துறையினர் அவரை கால் முட்டில் சுட்டு பிடித்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபரான சந்துரு என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே காயம்பட்ட காவலர் செந்தில்குமாரை மாவட்ட எஸ்பி மருத்துவமனைக்கு சென்று விசாரித்தார். போதை தலைக்கேறிய நிலையில் சாலையில் சென்ற நான்கு சக்கர வாகனத்தை தாக்கி சாலை பணியாளர்  கொலை செய்துவிட்டு, பிடிக்க வந்த காவலரை தாக்கி பின் அங்கிருந்த அரசு பேருந்தை சேதப்படுத்தி சென்ற நிலையில் இந்த சம்பவங்கள் தொடர்பாக வீரவநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். போதை ஆசாமிகள் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் பிடிக்க வந்த காவலரையும் தாக்கிய சம்பவம், காவல்துறையினர் ஒருவரை சுட்டுப் பிடித்த சம்பவம்   நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற மனைவி ; மலைக் கோயிலில் அரங்கேறிய நாடகம் !!
கள்ளக் காதலுக்காக கணவனை கொன்ற மனைவி ; மலைக் கோயிலில் அரங்கேறிய நாடகம் !!
மார்க்கெட்டிங் பெண் தலையில் அடித்துக் கொன்று 9 பவுன் நகை கொள்ளை !! வாலிபர் சிக்கியது எப்படி ?
மார்க்கெட்டிங் பெண் தலையில் அடித்துக் கொன்று 9 பவுன் நகை கொள்ளை !! வாலிபர் சிக்கியது எப்படி ?
பிசியோதெரபி கிளினிக்கில் பாலியல் தொழில் ; ஆன்லைன் புக்கிங் மோசடி அம்பலம்
பிசியோதெரபி கிளினிக்கில் பாலியல் தொழில் ; ஆன்லைன் புக்கிங் மோசடி அம்பலம்
சீர்காழி புறவழிச்சாலையில் போகும் போது உஷார்! ஹெல்மெட் கொள்ளையர்கள் வெறிச்செயல்!
சீர்காழி புறவழிச்சாலையில் போகும் போது உஷார்! ஹெல்மெட் கொள்ளையர்கள் வெறிச்செயல்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget