மேலும் அறிய

Crime: நண்பர்களுடன் மது அருந்தும்போது வாலிபர் கொடூரக்கொலை...நெல்லையில் பயங்கரம்

நண்பர்களுடன் மது அருந்தும் பொழுது இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பழவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் பழவூரைச் சேர்ந்தவர் ஐயப்பன் என்பவரின் மகன் அஜித் (வயது 25). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு நட்பு வட்டம் அதிகம் எனவும் கூறப்படுகிறது. அந்த பழக்கத்தின் அடிப்படையில் அஜித் தனது நண்பர்களுடன் சேர்ந்து  அடிக்கடி மது அருந்துவதை வழக்கமாக வைத்து வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில் நேற்று மதியத்திற்கு மேல் அஜித் தனது நண்பர்களுடன் சேர்ந்து பழவூர் பெரியகுளம் அருகில் உள்ள புது காலனி பகுதியில் மது அருந்தி உள்ளார்.

அப்போது போதையின் உச்சகட்டத்தில் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.. அப்போது உடனிருந்த நண்பர்கள் அஜித்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அவரது இரு கைகளையும் துண்டித்து, பின் கழுத்து மற்றும் தலை பகுதியில் கொடூரமாக அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடித்த அஜித் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இக்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், அஜித்திற்கும் அவரது  நண்பர்களுக்குமிடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்துள்ளதாகவும், அதனை மனதில் வைத்துக்கொண்டு மது அருந்தும் பொழுது அவரை கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதே போல மது அருந்த சென்றவர்கள் அரிவாளை வைத்திருந்தார்கள் என்றால் கொலை சம்பவத்தை நிகழ்த்தும் நோக்கில் அரிவாளை மறைத்து கொண்டு வந்து கொலை செய்திருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.  இருப்பினும் பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை தொடர்பாக ஒரு சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. நண்பர்களுடன் மது அருந்தும் பொழுது இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பழவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget