மேலும் அறிய

திருவண்ணாமலை: ஒரே தெருவில் அடுத்தடுத்து 3 வீடுகளில் மர்மநபர்கள் கைவரிசை

தண்டராம்பட்டு அருகே துணிகரம் சத்துணவு அமைப்பாளர் வீடு உள்பட 3 வீடுகளில் 41 சவரன், எல்இடி டிவிக்கள் திருட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த பெருங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி வயது (55), இவருடைய மனைவி அம்சா. இவர் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு தண்டபாணி வீட்டை உட்புறமாக பூட்டிக்கொண்டு மனைவி, குழந்தைகளுடன் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கியுள்ளனர். அப்போது காலையில் விடிந்தவுடன் கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்ட தண்டபாணி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோ இருக்கும் அறைக்கு சென்று பார்த்துள்ளார். பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் கீழே சிதறிக்கிடந்தது. பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகைகள் மற்றும் ஹாலில் வைத்திருந்த எல்இடி டிவி (LED TV) ஆகியவை திருடி போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 


திருவண்ணாமலை:  ஒரே தெருவில் அடுத்தடுத்து 3  வீடுகளில் மர்மநபர்கள் கைவரிசை

 

அதேபோன்று தண்டபாணியின் பக்கத்து வீட்டை சேர்ந்த சக்கரபாணி என்பவர் வீட்டிலும் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர் சக்கரபாணியின் பீரோவில் இருந்த ஒரு சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். மேலும் அதே பகுதியில் உள்ள கருணாகரன் என்பவர் வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் எல்இடி டிவி ஆகியவற்றை திருடு போனது தெரியவந்தது. ஒரே நாள் நள்ளிரவில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் மர்ம ஆசாமிகள் புகுந்து நகை மற்றும் பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மூன்று நபர்களும் தனித்தனியாக தானிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தண்டராம்பட்டு ஆய்வாளர் தனலட்சுமி, துணை ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று திருடு போன வீடுகளில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


திருவண்ணாமலை:  ஒரே தெருவில் அடுத்தடுத்து 3  வீடுகளில் மர்மநபர்கள் கைவரிசை

 

ஒரே தெருவில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் நகை, டிவிகள் மற்றும் பணம் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தண்டராம்பட்டு, தானிப்பாடி ஆகிய பகுதிகளில் அடிக்கடி இது போன்று வீடு புகுந்து திருடும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருவதால் காவல்துறையினர் தீவிரோ ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். தானிப்பாடி காவல் நிலையத்திற்கு பகுதிக்குட்பட்ட பெருங்குளத்தூர் பகுதியில் காப்புக்காடு இருப்பதால் நகை திருடிய மர்ம ஆசாமிகள் அந்த காட்டுக்குள் சென்று பதுங்கிக் கொள்வதாக கூறப்படுகிறது. எனவே இரவு நேரங்களில் இந்த பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனி கவனம் செலுத்தி தண்டராம்பட்டு தானிப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இதுபோன்ற திருடு சம்பவங்கள் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7264
Active
13604
Recovered
108
Deaths
Last Updated: Mon 16 June, 2025 at 09:56 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
Jagan Moorthy : ’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance | 2026-ல் கூட்டணி ஆட்சி தான் “நீங்க பேசுங்க நா இருக்கேன்” அமித்ஷாவின் அசைன்மென்ட்MLA பதவிக்கு ஆபத்தா? அடுத்த சிக்கலில் OPS! அப்பாவு-க்கு பறந்த புகார்பேச்சை மீறும் அண்ணாமலை! கடுப்பில் நயினார், வானதி! அமித்ஷாவுக்கு பறந்த மெசேஜ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
Top 25 Medical Colleges: டாக்டர் ஆகணுமா? நாட்டின் டாப் 25 மருத்துவக் கல்லூரிகள்- தமிழ்நாட்டில் எத்தனை? இதோ லிஸ்ட்!
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
எது அரைவேக்காட்டுத் தனம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
விஜய்க்கு ஆதரவு அளித்த ஆசிரியர்கள்: திமுக அதிர்ச்சி! ஓட்டு வங்கி பாதிக்குமா? பரபரப்பு தகவல்!
Jagan Moorthy : ’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
’அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கடத்தல்’ பூவை ஜெகன் மூர்த்தி மீது குவியும் புகார்..!
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Air India plane crash: வெடித்து சிதறிய விமானம்; மாடியில் இருந்து குதித்து தப்பிய தமிழக மருத்துவர் - அகமதாபாத்தில் பிழைத்தது எப்படி?
Hyundai Creta: ஆல்வேஸ் நெம்பர்.1, காம்பேக்ட் SUV-யின் கிங்: ஜாம்பியாய் குவியும் மக்கள், அப்படி என்னதான் இருக்கு?
Hyundai Creta: ஆல்வேஸ் நெம்பர்.1, காம்பேக்ட் SUV-யின் கிங்: ஜாம்பியாய் குவியும் மக்கள், அப்படி என்னதான் இருக்கு?
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஜூன் 23, 24-ல் ஆய்வுக் கூட்டம்; அமைச்சர் அன்பில் அறிவிப்பு- எதற்கு?
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஜூன் 23, 24-ல் ஆய்வுக் கூட்டம்; அமைச்சர் அன்பில் அறிவிப்பு- எதற்கு?
‘பட்டா, சிட்டா பெயர் மாற்ற வருவாய் துறை இழுத்தடிப்பு’  லஞ்சத்திற்காக இந்த வஞ்சமா..?
‘பட்டா, சிட்டா பெயர் மாற்ற வருவாய் துறை இழுத்தடிப்பு’ லஞ்சத்திற்காக இந்த வஞ்சமா..?
Embed widget