மேலும் அறிய

Crime: 45 சவரன் கொள்ளை வழக்கு; மூதாட்டியை கொடூரமாக கொலை செய்தது ஏன்? கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்.!

சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டியை கொன்று நகை மற்றும் பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். வயதானோரை குறிவைத்து  கொலை செய்து கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டியை கொன்று நகை மற்றும் பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். வயதானவர்களை குறிவைத்து  கொலை செய்து கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

மூதாட்டி கொடூர கொலை:

நங்கநல்லூர் தில்லைகங்கா நகரை சேர்ந்தவர் 81 வயதான சிவகாமசுந்தரி. மகன் ஸ்ரீராம் வேலைக்கு சென்றிருந்த நிலையில் கடந்த 21-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் இருந்த மர்ம நபர் அவரை கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த 45 சவரன் தங்க நகைகள் மற்றும் பீரோவை உடைத்து அதில்  இருந்த ரூ.2 லட்சத்தையும் கொள்ளையடித்துச் சென்றார். கொலை குறித்து விசாரிக்க உதவி ஆணையர்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 

அவர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். சிசிடிவியில் முகம் பதியாதபடி வந்த நபர் ஒருவர் நீல நிறமுடைய குடையை பிடித்தபடி மூதாட்டியின் வீட்டினுள் சென்று பின் வெளியே வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிசிடிவி உள்ள இடங்களில் எல்லம் குடையை வைத்து முகத்தை மறைத்தபடி அந்த நபர் சென்று வந்ததும் தெரிய வந்தது. 

தீவிர விசாரணை:

போலீசார், கொலை நடந்த இடத்தில் இருந்து அந்நபர்  மாறி மாறி பயணித்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்த நபர் கே.கே.நகர் பாரதிதாசன் காலனியை சேர்ந்த சக்திவேல் என்பது தெரிய வந்தது. அசோக் நகர் போலீசார் நேற்று மதியம் அவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் தான் ஆடைகளுக்கு அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்ததாகவும், சரியான வேலை இல்லதாதால் கடனாளி ஆனதாகவும் தெரிவித்தார். 

வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் வறுமையில் தவித்து வந்ததாகவும், இதனால் திருட முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். குடும்ப வறுமையை போக்க திருட முடிவு செய்து வீட்டில் தனியாக வசிக்கும் மூதாட்டிகளை குறிவைத்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் சுற்றி வந்ததாகவும் தெரிவித்தார். 

கொலையாளி கைது:

சம்பவத்தன்று தில்லைகங்காநகர் முதாட்டி வீட்டிற்கு சென்று அவர் தனியாக இருப்பதை உறுதி செய்த பின் அவரிடம் தண்ணீர் வாங்கி குடிப்பது போல் நடித்து அவர் மூக்கை பொத்தியுள்ளார். பின் தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்த நகைகளை  திருடியதாக வாக்கு மூலம் அளித்தார்.

இதே போன்று கடந்த 2021-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நகர் பாரதிதாசன் நகரை சேர்ந்த சீதா லட்சுமியை கொலை செய்து 15 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றதாகவும் வாக்கு மூலம் அளித்துள்ளார். இதனையடுத்து சக்திவேலிடம் இருந்து 45 சவரன் நகைகள் , ஒரு லட்சம் பணம் ஆகியவற்றை மீட்டனர். பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொலை நடந்த 48 மணி நேரத்திற்குள் கொலையாளி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்பு செய்திகள்

"எங்களுக்குப் புற்றுநோய் வந்துடும்!" - மயிலாடுதுறையில் அஞ்சும் பொதுமக்கள்: வீதிக்கு வந்து போராட்டம்!
நச்சுப் புகையால் திணறும் ஆன்மீக நவகிரக ஸ்தலம்;  திருவெண்காட்டில் தொடரும் சுகாதாரச் சீர்கேடு!
நச்சுப் புகையால் திணறும் ஆன்மீக நவகிரக ஸ்தலம்;  திருவெண்காட்டில் தொடரும் சுகாதாரச் சீர்கேடு!
நண்பனைக் காப்பாற்றச் சென்று உயிரை விட்ட சோகம்... விஷவாயு தாக்கி ஒருவர் பலி; ஆபத்தான நிலையில் 3 பேர்..
நண்பனைக் காப்பாற்றச் சென்று உயிரை விட்ட சோகம்... விஷவாயு தாக்கி ஒருவர் பலி; ஆபத்தான நிலையில் 3 பேர்..
முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்
முதலிரவு முதல் பிரச்சனை !! மனைவியை 6 இடங்களில் வெட்டி சாய்த்த கணவன்

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Embed widget