மேலும் அறிய

Crime: 45 சவரன் கொள்ளை வழக்கு; மூதாட்டியை கொடூரமாக கொலை செய்தது ஏன்? கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்.!

சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டியை கொன்று நகை மற்றும் பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். வயதானோரை குறிவைத்து  கொலை செய்து கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டியை கொன்று நகை மற்றும் பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். வயதானவர்களை குறிவைத்து  கொலை செய்து கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

மூதாட்டி கொடூர கொலை:

நங்கநல்லூர் தில்லைகங்கா நகரை சேர்ந்தவர் 81 வயதான சிவகாமசுந்தரி. மகன் ஸ்ரீராம் வேலைக்கு சென்றிருந்த நிலையில் கடந்த 21-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் இருந்த மர்ம நபர் அவரை கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த 45 சவரன் தங்க நகைகள் மற்றும் பீரோவை உடைத்து அதில்  இருந்த ரூ.2 லட்சத்தையும் கொள்ளையடித்துச் சென்றார். கொலை குறித்து விசாரிக்க உதவி ஆணையர்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 

அவர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். சிசிடிவியில் முகம் பதியாதபடி வந்த நபர் ஒருவர் நீல நிறமுடைய குடையை பிடித்தபடி மூதாட்டியின் வீட்டினுள் சென்று பின் வெளியே வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிசிடிவி உள்ள இடங்களில் எல்லம் குடையை வைத்து முகத்தை மறைத்தபடி அந்த நபர் சென்று வந்ததும் தெரிய வந்தது. 

தீவிர விசாரணை:

போலீசார், கொலை நடந்த இடத்தில் இருந்து அந்நபர்  மாறி மாறி பயணித்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்த நபர் கே.கே.நகர் பாரதிதாசன் காலனியை சேர்ந்த சக்திவேல் என்பது தெரிய வந்தது. அசோக் நகர் போலீசார் நேற்று மதியம் அவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் தான் ஆடைகளுக்கு அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்ததாகவும், சரியான வேலை இல்லதாதால் கடனாளி ஆனதாகவும் தெரிவித்தார். 

வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் வறுமையில் தவித்து வந்ததாகவும், இதனால் திருட முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். குடும்ப வறுமையை போக்க திருட முடிவு செய்து வீட்டில் தனியாக வசிக்கும் மூதாட்டிகளை குறிவைத்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் சுற்றி வந்ததாகவும் தெரிவித்தார். 

கொலையாளி கைது:

சம்பவத்தன்று தில்லைகங்காநகர் முதாட்டி வீட்டிற்கு சென்று அவர் தனியாக இருப்பதை உறுதி செய்த பின் அவரிடம் தண்ணீர் வாங்கி குடிப்பது போல் நடித்து அவர் மூக்கை பொத்தியுள்ளார். பின் தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்த நகைகளை  திருடியதாக வாக்கு மூலம் அளித்தார்.

இதே போன்று கடந்த 2021-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நகர் பாரதிதாசன் நகரை சேர்ந்த சீதா லட்சுமியை கொலை செய்து 15 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றதாகவும் வாக்கு மூலம் அளித்துள்ளார். இதனையடுத்து சக்திவேலிடம் இருந்து 45 சவரன் நகைகள் , ஒரு லட்சம் பணம் ஆகியவற்றை மீட்டனர். பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொலை நடந்த 48 மணி நேரத்திற்குள் கொலையாளி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்பு செய்திகள்

காதல் திருமணத்தின் சோக முடிவு! கந்திலி அருகே இளம்பெண் தற்கொலை செய்யக் காரணம் என்ன?
காதல் திருமணத்தின் சோக முடிவு! கந்திலி அருகே இளம்பெண் தற்கொலை செய்யக் காரணம் என்ன?
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
திருமணம் மீறிய உறவு !! தட்டி கேட்டவர்கள் மீது கஞ்சா கும்பல் தாக்குதல்
Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!
கடல் வழியே இலங்கைக்கு போலி மருந்துகள் கடத்தல்: புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை உரிமையாளர் கைது!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
ஒரே சார்ஜில் 104 கி.மீட்டர் மைலேஜ்.. சீனியர் சிட்டிசன் கெத்து காட்ட Kinetic Green Zulu இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோ கம்மியா?
ஒரே சார்ஜில் 104 கி.மீட்டர் மைலேஜ்.. சீனியர் சிட்டிசன் கெத்து காட்ட Kinetic Green Zulu இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோ கம்மியா?
Hector Hawk Vs Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை தூக்கி சாப்பிடுமா எம்ஜி-யின் பிரமிக்க வைக்கும் பிளக்-இன் ஹைப்ரிட்.? என்ன வித்தியாசம்.?
இன்னோவா ஹைக்ராஸை தூக்கி சாப்பிடுமா எம்ஜி-யின் பிரமிக்க வைக்கும் பிளக்-இன் ஹைப்ரிட்.? என்ன வித்தியாசம்.?
Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!
Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
Embed widget