மேலும் அறிய

Crime: 45 சவரன் கொள்ளை வழக்கு; மூதாட்டியை கொடூரமாக கொலை செய்தது ஏன்? கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்.!

சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டியை கொன்று நகை மற்றும் பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். வயதானோரை குறிவைத்து  கொலை செய்து கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டியை கொன்று நகை மற்றும் பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். வயதானவர்களை குறிவைத்து  கொலை செய்து கொள்ளையடித்ததாக கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

மூதாட்டி கொடூர கொலை:

நங்கநல்லூர் தில்லைகங்கா நகரை சேர்ந்தவர் 81 வயதான சிவகாமசுந்தரி. மகன் ஸ்ரீராம் வேலைக்கு சென்றிருந்த நிலையில் கடந்த 21-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் இருந்த மர்ம நபர் அவரை கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த 45 சவரன் தங்க நகைகள் மற்றும் பீரோவை உடைத்து அதில்  இருந்த ரூ.2 லட்சத்தையும் கொள்ளையடித்துச் சென்றார். கொலை குறித்து விசாரிக்க உதவி ஆணையர்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 

அவர்கள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். சிசிடிவியில் முகம் பதியாதபடி வந்த நபர் ஒருவர் நீல நிறமுடைய குடையை பிடித்தபடி மூதாட்டியின் வீட்டினுள் சென்று பின் வெளியே வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிசிடிவி உள்ள இடங்களில் எல்லம் குடையை வைத்து முகத்தை மறைத்தபடி அந்த நபர் சென்று வந்ததும் தெரிய வந்தது. 

தீவிர விசாரணை:

போலீசார், கொலை நடந்த இடத்தில் இருந்து அந்நபர்  மாறி மாறி பயணித்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்த நபர் கே.கே.நகர் பாரதிதாசன் காலனியை சேர்ந்த சக்திவேல் என்பது தெரிய வந்தது. அசோக் நகர் போலீசார் நேற்று மதியம் அவரை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் தான் ஆடைகளுக்கு அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்ததாகவும், சரியான வேலை இல்லதாதால் கடனாளி ஆனதாகவும் தெரிவித்தார். 

வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் வறுமையில் தவித்து வந்ததாகவும், இதனால் திருட முடிவு செய்ததாகவும் தெரிவித்தார். குடும்ப வறுமையை போக்க திருட முடிவு செய்து வீட்டில் தனியாக வசிக்கும் மூதாட்டிகளை குறிவைத்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் சுற்றி வந்ததாகவும் தெரிவித்தார். 

கொலையாளி கைது:

சம்பவத்தன்று தில்லைகங்காநகர் முதாட்டி வீட்டிற்கு சென்று அவர் தனியாக இருப்பதை உறுதி செய்த பின் அவரிடம் தண்ணீர் வாங்கி குடிப்பது போல் நடித்து அவர் மூக்கை பொத்தியுள்ளார். பின் தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்த நகைகளை  திருடியதாக வாக்கு மூலம் அளித்தார்.

இதே போன்று கடந்த 2021-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நகர் பாரதிதாசன் நகரை சேர்ந்த சீதா லட்சுமியை கொலை செய்து 15 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றதாகவும் வாக்கு மூலம் அளித்துள்ளார். இதனையடுத்து சக்திவேலிடம் இருந்து 45 சவரன் நகைகள் , ஒரு லட்சம் பணம் ஆகியவற்றை மீட்டனர். பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொலை நடந்த 48 மணி நேரத்திற்குள் கொலையாளி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!
9 வாரிசுகளை மறைத்துப் பத்திரப்பதிவு: விவசாயியின் நிலத்தை ஆட்டையைப் போடப் பார்த்த நபர் சிக்கியது எப்படி?
​9 வாரிசுகளை மறைத்துப் பத்திரப்பதிவு: விவசாயியின் நிலத்தை ஆட்டையைப் போடப் பார்த்த நபர் சிக்கியது எப்படி?

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
Embed widget