மேலும் அறிய

Crime: ஆபாச வீடியோ பார்ப்பதை தடுத்த மனைவி.. மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற கணவன்..!

ஆபாச வீடியோ பார்த்த கணவரை மனைவி பார்க்காதே என்று தடுத்ததால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மது போதையைவிட மிகவும் ஆபத்தான போதை ஆபாச போதை. அது எந்த அளவிற்கு ஆபத்து என்றும், என்னவெல்லாம் செய்யும் என்றும் சமீபகாலத்தில் நிறைய பார்த்து கடந்து வந்துவிட்டோம். அந்த வகையில். ஆபாச வீடியோ பார்த்த கணவரை மனைவி பார்க்காதே என்று தடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியை எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மும்பையை சேர்ந்த 25 வயதான காஜல் என்பவருக்கும், 35 வயதாக கிஷோர் என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் கதிர்காமத்தில் உள்ள துருவ்தாரக் சொசைட்டியில் வசித்து வரும் நிலையில், வாராச்சாவில் உள்ள ஒரு வைர தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளது. திருமணம் ஆனது முதலே இவர்கள் இருவருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்தநிலையில், கிஷோர் தனது மனைவியுடன் ஆபாச வீடியோக்களை காட்டி மீண்டும் மீண்டும் உறவில் ஈடுபட முயன்றுள்ளார். ஒரு கட்டத்தில் அது காஜலுக்கு பிடிக்காமல் போயுள்ளது. இதையடுத்து, காஜல் தனது கணவரிடம் இதுபோன வீடியோக்களை பார்க்க கூடாது என்று தெரிவித்துள்ளார். 

இதை எதையும் காதில் வாங்கி கொள்ளாத கிஷோர் தொடர்ந்து இதுபோன்றே செய்து வந்துள்ளார். ஆபாச படம் பார்ப்பது தொடர்பாக இருவருக்கு இடையே தொடர்ந்து தகராறு பெரிதாகி வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 20 ம்தேதி இருவருக்கும் இடையே இந்த விஷயம் தொடர்பாக சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கணவன் கிஷோர் குளியலறையில் இருந்த மனைவி காஜல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். பிறகு, தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை  உணர்ந்து தனது மனைவியை காப்பாற்ரி அருகிலிருந்த ஸ்மியர் மருத்துவமனையில் அனுமதித்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் காஜல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

மரண வாக்குமூலம்:

பலத்த தீக்காயம் அடைந்த காஜலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, ​​தனது மனைவி தீக்குளித்துக்கொண்டதாக கிஷோர் மருத்துவமனையில் தெரிவித்துள்ளார். இருந்தும் சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து தகவலறிந்து விரைந்து வந்த சௌக் பஜார் போலீசார் காஜலின் வாக்குமூலத்தை எடுத்தபோது முழு உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

அந்த வாக்குமூலத்தில், “ஆபாச வீடியோக்கள் மற்றும் பிற காரணங்களால் எங்களுக்குள் அடிக்கடி சண்டை வந்தது. ஒரு கட்டத்தில் என்னை பிடிக்கவில்லை என்றும், இங்கிருந்து வெளியேறு ஐந்து லட்சம் ரூபாய் தருகிறேன் என்றும் கூறினார். அதற்கு நான் செல்லமுடியாது என்று சொன்னதால் என்னை எரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்” என்று தெரிவித்தார். இதையடுத்து, கிஷோர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கணவரை கைது செய்தனர்.

காஜலுக்கு இது இரண்டாவது திருமணம்: 

காஜலுக்கு இது இரண்டாவது திருமணம். காஜலின் முதல் கணவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதன்பிறகு, மும்பையிலுள்ள தனது அண்ணன் வீட்டில் காஜல் வாழ்ந்து வந்துள்ளார். கிஷோர் சில காலத்திற்கு முன்பு மும்பையில் பணிபுரிந்தார். காஜலின் அண்ணனும் வைர வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். இப்படித்தான் காஜலும் கிஷோரும் ஒருவரையொருவர் சந்தித்தனர். பின்னர் குடும்பத்தினர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget