மேலும் அறிய

”ஒரே கல்லுல ரெண்டு மாங்கா” - மனைவிகளை சமாளிக்க கணவனின் செய்த வேலை.. ஃப்ளாப்பான ப்ளான்..

அந்த திட்டம் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து மும்பை கல்யாண் நகர் பகுதி போலீசார் அவர் மீது தற்போது போலி கடத்தல் வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

மும்பையின் கல்யாண் நகரைச் சேர்ந்த ஒருவர் தனது இரு மனைவியிடமும் அனுதாபத்தைப் பெற தானே தன்னை கடத்திய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தனது இரண்டு மனைவிகளை சமாளிக்க தனது மூன்று நண்பர்களின் உதவியுடன் தன்னைத் தானே கடத்தத் திட்டமிட்டுள்ளார். அந்த திட்டம் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து மும்பை கல்யாண் நகர் பகுதி போலீசார் அவர் மீது தற்போது போலி கடத்தல் வழக்கைப் பதிவு செய்துள்ளனர். 

கல்யாண் நகர் பகுதியைச் சேர்ந்த அவர் தனது மனைவிகள் தன்னை நன்றாக நடத்தவில்லை என்பதால் இதனைச் செய்ததாகக் கூறப்படுகிறது.சம்பவம் நடந்த நான்கு நாட்களுக்குப் பிறகு, தானே மாவட்டத்தில் உள்ள ஷஹாபூரில் இருக்கும் அவரது நண்பரின் வீட்டில் அவர் மறைந்திருந்ததைப் போலீசார்  கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.


”ஒரே கல்லுல ரெண்டு மாங்கா” - மனைவிகளை சமாளிக்க கணவனின் செய்த வேலை.. ஃப்ளாப்பான ப்ளான்..

சுனிதா கெய்க்வாட் என்பவர் கடந்த அக்டோபர் 14 அன்று கோல்சேவாடி காவல் நிலையத்திற்குச் சென்று தனது கணவர் சந்தீப் கெய்க்வாட் என்பவரை கும்பல் ஒன்று கடத்தியதாக வழக்குப் பதிவு செய்தார். அவரது புகாரில் அவர் குறிப்பிட்ட தகவலின்படி கணவன் மனைவி இருவரும் தங்கள் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு சாலையில் நின்று ஒருவருக்கொருவர் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தனர்.  அப்போது கல்யாண் கிழக்கு பகுதி ஜேபி சாலையில் உள்ள சத்கர் டவர் அருகிலிருந்து ஒரு ஆட்டோரிக்ஷாவில் வந்த மூன்று பேர் அவர்களிடம் சென்று சந்தீப்பை அடித்துவிட்டு அவரை ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளனர்

கூடுதல் தகவலாக சுனிதா சந்தீப்பின் இரண்டாவது மனைவி, இருப்பினும் அவர் தனது முதல் மனைவியை இன்னும் விவாகரத்து செய்யவில்லை. இதற்கிடையேதான் கணவன் மற்றும் மனைவிகளுக்கு இடையே பிரச்னை எழுந்துள்ளது.

புகாரை அடுத்து கடத்தல் வழக்கு பதிவு செய்து கோல்சேவாடி போலீசார் விசாரணை நடத்தினர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஆட்டோ மற்றும் அதன் டிரைவரை கண்டுபிடித்தனர். அவர்கள் ஜாவேத் கான், ஆகாஷ் அபாங் மற்றும் அவி பாட்டீல் ஆகிய மூன்று பேர் எனக் கண்டறியப்பட்டது. மேலும் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு நபரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறி தனது வாகனத்தை ஒரு நாளைக்கு வாடகைக்கு எடுத்ததாக ஆட்டோ டிரைவர் ஒருவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். 

திட்டமிட்டதன்படி அவர்கள் சந்தீப்பை அடித்து, ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்றுள்ளனர். பின்னர் கடத்தப்பட்ட நபர், அங்கிருந்து நண்பர்களில் ஒருவரின் ஸ்கூட்டியை ஓட்டிச் சென்றுள்ளார்” என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதை அடுத்து இது போலி கடத்தல் வழக்கு என போலீசார் உறுதி செய்துள்ளனர்.

இதை அடுத்து 18 அக்டோபர் அன்று உல்லாஸ்நகரில் உள்ள வால்துனி என்ற இடத்தில் இருந்து ஜாவேதை போலீசார் கைது செய்தனர், அதன்பிறகு அவர் இது போலி கடத்தல் என ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. மேலும் தனது கடத்தலை தனது மாமியாரின் மீது பழிபோடச் சொல்லி கெய்க்வாட் தங்களிடம் சொன்னதாகவும் இதனால் இரண்டு மனைவிகளுக்கும் தன் மீது அனுதாபம் பிறக்கும் என அவர் எண்ணியதாகவும் தெரிகிறது. கெய்க்வாட்டின் முதல் மனைவி அவரோடு இணைந்து வாழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பக்காவா போட்ட ப்ளான் சுக்காவான வருத்தத்தில் தற்போது கெய்க்வாட் சிறையில் உள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget