மேலும் அறிய

ரூ.2 லட்சத்துக்காக மகள் விற்பனை.. 54 வயது நபருடன் இரண்டாவது திருமணம்.. தாய் கொடூர செயல்!

புங்கனூரில் பகுதியில் தனியே வீடு எடுத்து வசித்து வந்த ஷோபா பண பிரச்னையால் அவதிப்பட்டார். இடைத்தரகர் மூலமாக மகள்களில் ஒருவரை திருமணம் செய்து வைத்தால் ரூ.2 லட்சம் பணம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் ரூ.2  லட்சத்துக்காக பெற்ற மகளை தாய் விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் ஆந்திரப்பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள புங்கனூர் பீடி காலனியில் ராமராஜூ - ஷோபா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருந்த இவர்களது குடும்பத்தில் புயல் வீச தொடங்கியது. கணவர் ராமராஜுவுடன் ஷோபாவுக்கு அடிக்கடி கருத்து வேறுபாடுகள் எழுந்ததால், தகராறு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் முற்றியது. 

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஷோபா தனது கணவர் ராமராஜுவுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு மகள்களுடன் வெளியேறினார். புங்கனூரில் உள்ள டிட்கோ பகுதியில் தனியே வீடு எடுத்து வசித்து வந்த அவர் பண பிரச்னையால் அவதிப்பட்டார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிய ஷோபாவுக்கு ரெட்டெப்பா என்ற இடைத்தரகருடன் பழக்கம் ஏற்பட்டது. 

அவர் மூலமாக கர்நாடக மாநிலம் ராயல்பாடு பகுதியைச் சேர்ந்த ரெட்டி ராஜசேகர் என்பவர் இரண்டாவது திருமணத்திற்காக பெண் தேடி வருகிறார். உங்கள் மகள்களில் ஒருவரை திருமணம் செய்து வைத்தால் நான் ரூ.2 லட்சம் வாங்கி தருகிறேன் என ஷோபாவுக்கு ஆசை காட்டப்பட்டது. இந்த டீலுக்கு ஒப்புக்கொண்ட ஷோபா தனது மகளை விற்க முடிவு செய்தார். தனது திட்டத்தின்படி, உன்னைப் பார்க்க விரும்புவதாகக் கூறி தனது மூத்த மகளை தனது வீட்டிற்கு அழைத்தார்.

அங்கு மகளிடம் பேசி ராஜசேகருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். ஆனால் அந்த மகளுக்கு 14 வயது தான் ஆகியிருந்தது. இந்த திருமண ஏற்பாடுகளை ஷோபாவின் தாய் தான் கவனித்துள்ளார். ஒப்பந்தப்படி ரூ.2 லட்சத்தில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் பணம் வழங்கப்பட்டது. இதற்கிடையில் சிறுமியை அழைத்துக் கொண்டு ராஜசேகர் பெங்களூருக்கு சென்று விட்டார்.

ஆனால் அங்கு சென்ற பின் தினந்தோறும் அந்த சிறுமியை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சிறுமி தனது மூத்த சகோதரருக்கு தொலைபேசியில் தான் கொடுமைப்படுத்தப்பட்ட விஷயத்தை தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து சகோதரர் உதவியுடன் பெங்களூருவில் இருந்து தப்பித்து புங்கனூரை அடைந்து நேராக போலீசில் சென்று புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் நடந்த சம்பவம் என்று கருதி புங்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் அந்த சிறுமியை மாநில சமூக நலத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.   அங்கு சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் உண்மை அனைத்து வெளிப்பட்டது. 

சிறுமியின் தாய் ஷோபாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முதலில் அவர் பணம் வாங்கவில்லை என மறுத்த நிலையில் ஒரு கட்டத்தில் உண்மையை ஒப்புக்கொண்டார். மேலும் சிறுமி தான் படிக்க விரும்புவதாக கூறிய நிலையில், தாய்க்கு அறிவுரை வழங்கி கல்வி கற்க உதவுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஆந்திரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Embed widget