மேலும் அறிய

ரூ.2 லட்சத்துக்காக மகள் விற்பனை.. 54 வயது நபருடன் இரண்டாவது திருமணம்.. தாய் கொடூர செயல்!

புங்கனூரில் பகுதியில் தனியே வீடு எடுத்து வசித்து வந்த ஷோபா பண பிரச்னையால் அவதிப்பட்டார். இடைத்தரகர் மூலமாக மகள்களில் ஒருவரை திருமணம் செய்து வைத்தால் ரூ.2 லட்சம் பணம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலத்தில் ரூ.2  லட்சத்துக்காக பெற்ற மகளை தாய் விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த மனிதாபிமானமற்ற சம்பவம் ஆந்திரப்பிரதேச மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள புங்கனூர் பீடி காலனியில் ராமராஜூ - ஷோபா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மகிழ்ச்சியாக சென்றுக் கொண்டிருந்த இவர்களது குடும்பத்தில் புயல் வீச தொடங்கியது. கணவர் ராமராஜுவுடன் ஷோபாவுக்கு அடிக்கடி கருத்து வேறுபாடுகள் எழுந்ததால், தகராறு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் முற்றியது. 

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஷோபா தனது கணவர் ராமராஜுவுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு மகள்களுடன் வெளியேறினார். புங்கனூரில் உள்ள டிட்கோ பகுதியில் தனியே வீடு எடுத்து வசித்து வந்த அவர் பண பிரச்னையால் அவதிப்பட்டார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிய ஷோபாவுக்கு ரெட்டெப்பா என்ற இடைத்தரகருடன் பழக்கம் ஏற்பட்டது. 

அவர் மூலமாக கர்நாடக மாநிலம் ராயல்பாடு பகுதியைச் சேர்ந்த ரெட்டி ராஜசேகர் என்பவர் இரண்டாவது திருமணத்திற்காக பெண் தேடி வருகிறார். உங்கள் மகள்களில் ஒருவரை திருமணம் செய்து வைத்தால் நான் ரூ.2 லட்சம் வாங்கி தருகிறேன் என ஷோபாவுக்கு ஆசை காட்டப்பட்டது. இந்த டீலுக்கு ஒப்புக்கொண்ட ஷோபா தனது மகளை விற்க முடிவு செய்தார். தனது திட்டத்தின்படி, உன்னைப் பார்க்க விரும்புவதாகக் கூறி தனது மூத்த மகளை தனது வீட்டிற்கு அழைத்தார்.

அங்கு மகளிடம் பேசி ராஜசேகருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். ஆனால் அந்த மகளுக்கு 14 வயது தான் ஆகியிருந்தது. இந்த திருமண ஏற்பாடுகளை ஷோபாவின் தாய் தான் கவனித்துள்ளார். ஒப்பந்தப்படி ரூ.2 லட்சத்தில் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் பணம் வழங்கப்பட்டது. இதற்கிடையில் சிறுமியை அழைத்துக் கொண்டு ராஜசேகர் பெங்களூருக்கு சென்று விட்டார்.

ஆனால் அங்கு சென்ற பின் தினந்தோறும் அந்த சிறுமியை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சிறுமி தனது மூத்த சகோதரருக்கு தொலைபேசியில் தான் கொடுமைப்படுத்தப்பட்ட விஷயத்தை தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து சகோதரர் உதவியுடன் பெங்களூருவில் இருந்து தப்பித்து புங்கனூரை அடைந்து நேராக போலீசில் சென்று புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து கர்நாடகாவில் நடந்த சம்பவம் என்று கருதி புங்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் அந்த சிறுமியை மாநில சமூக நலத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.   அங்கு சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் உண்மை அனைத்து வெளிப்பட்டது. 

சிறுமியின் தாய் ஷோபாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முதலில் அவர் பணம் வாங்கவில்லை என மறுத்த நிலையில் ஒரு கட்டத்தில் உண்மையை ஒப்புக்கொண்டார். மேலும் சிறுமி தான் படிக்க விரும்புவதாக கூறிய நிலையில், தாய்க்கு அறிவுரை வழங்கி கல்வி கற்க உதவுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் ஆந்திரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: முனீஸ்வரனுக்கு எதிரான மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது !
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: முனீஸ்வரனுக்கு எதிரான மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது !
மனைவியை கொன்று தலைமறைவான முன்னாள் ராணுவ அதிகாரி: கேஸ் சிலிண்டர் புக் செய்யும் போது சிக்கினார்
மனைவியை கொன்று தலைமறைவான முன்னாள் ராணுவ அதிகாரி: கேஸ் சிலிண்டர் புக் செய்யும் போது சிக்கினார்
ஆசைக்கு தடை சொன்ன கணவர் கொலை.. இரவு முழுவதும் சடலத்துடன் தூங்கிய மனைவி!
ஆசைக்கு தடை சொன்ன கணவர் கொலை.. இரவு முழுவதும் சடலத்துடன் தூங்கிய மனைவி!
8 ஏக்கர் நில தகராறு !! கிணற்று நீருக்காக எழுந்த சண்டை !! அண்ணன் தம்பியை கொன்ற சோகம் !!
8 ஏக்கர் நில தகராறு !! கிணற்று நீருக்காக எழுந்த சண்டை !! அண்ணன் தம்பியை கொன்ற சோகம் !!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Meeting: தவெக பிரச்சாரத்தில் பெண்கள் மீது பாட்டில் வீச்சு.. கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா!
TVK Meeting: தவெக பிரச்சாரத்தில் பெண்கள் மீது பாட்டில் வீச்சு.. கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா!
Udhayanidhi Stalin: ’’கே.பி.அன்பழகன் சிறை செல்வார்; திமுகவின் வெற்றிக்கோடு பாலக்கோடு’’ பிரச்சாரத்தில் பரபரத்த உதயநிதி!
Udhayanidhi Stalin: ’’கே.பி.அன்பழகன் சிறை செல்வார்; திமுகவின் வெற்றிக்கோடு பாலக்கோடு’’ பிரச்சாரத்தில் பரபரத்த உதயநிதி!
IPL 2026 PBKS vs GT: ஆட்டம் காட்டிய வெற்றி.. பஞ்சாப்பிற்கு பலே பலே! கடைசி ஓவரில் தோற்ற குஜராத்!
IPL 2026 PBKS vs GT: ஆட்டம் காட்டிய வெற்றி.. பஞ்சாப்பிற்கு பலே பலே! கடைசி ஓவரில் தோற்ற குஜராத்!
நடுவானில் அபாயச் சங்கு.. அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்! பயணிகள் நிலை என்ன?
நடுவானில் அபாயச் சங்கு.. அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்! பயணிகள் நிலை என்ன?
Aadhav Arjuna Net Worth: 442 கோடி சொத்து, 490 சவரன் தங்கம், கார்கள்.. ஆச்சர்யபடுத்தும் ஆதவ் அர்ஜூனா சொத்து விவரம் இதோ!
Aadhav Arjuna Net Worth: 442 கோடி சொத்து, 490 சவரன் தங்கம், கார்கள்.. ஆச்சர்யபடுத்தும் ஆதவ் அர்ஜூனா சொத்து விவரம் இதோ!
மூன்று மாதம் தான் டைம்... ஆட்சி அமைந்தால் கஞ்சாவே இருக்காது - ஈ.பி.எஸ்., சிவகாசியில் பரப்புரை !
மூன்று மாதம் தான் டைம்... ஆட்சி அமைந்தால் கஞ்சாவே இருக்காது - ஈ.பி.எஸ்., சிவகாசியில் பரப்புரை !
சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் திமுகவின் தேர்தல் அறிக்கைதான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சட்டமன்ற தேர்தலில் சூப்பர் ஸ்டார் திமுகவின் தேர்தல் அறிக்கைதான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
Class 12 Result: பிளஸ் 2 தேர்வில் 93.88% மதிப்பெண்- முடிவுகள் வெளியாகும் முன்னே பரிதாபமாக பலியான மாணவி
Embed widget