மேலும் அறிய

Crime: அழுகிய நிலையில் கிடந்த அம்மா - கணவர் உடல் ; அடக்கம் பண்ண பணம் இல்லாமல் தவித்த மகள் 

ஈரோட்டில் அம்மா - கணவர் இறந்த நிலையில், அழுகிய நிலையில் இருந்த அவர்களது உடலுடன் பெண் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில் அம்மா - கணவர் இறந்த நிலையில், அழுகிய நிலையில் இருந்த அவர்களது உடலுடன் பெண் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் குமணன் வீதியைச் சேர்ந்த  மோகன சுந்தரம் என்பவர் மனைவி சாந்தி, மாமியார் கனகாம்பாள், மகன் சரவணக்குமார் ஆகியோரோடு வசித்து வந்தார். இவர்களது மகள் சசிரேகா திருமணாமாகி  திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.  சரவணக்குமாருக்கு உடல்நலக்குறைவு இருப்பதால் அவரை தங்களுடன் வைத்து மோகன சுந்தரம் - சாந்தி பராமரித்து வந்தனர். தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து ஓய்வு பெற்ற 74 வயதான மோகனசுந்தரத்தின் குடும்பம் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வந்ததாக சொல்லப்படுகிறது. 

அதுமட்டுமின்றி முதுமை காரணமாக மோகனசுந்தரம், கனகாம்பாள் ஆகியோரின் உடல் நலமும் பாதிக்கப்பட்டது. இதற்காக கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதுவும் ஒருகட்டத்தின் நின்று போக மோகனசுந்தரம், சாந்தி ஆகியோர் வறுமையால் கோவில் மற்றும் வெளி இடங்களுக்கு சென்று இலவசமாக கிடைக்கும் உணவுகளை வாங்கி சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளனர். 

ஆனால் வயது முதுமை, வறுமை, உடல்நலம் பாதிப்பு ஆகியவை காரணமாக சில தினங்களுக்கு முன் மோகனசுந்தரம், கனகாம்பாள் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.  ஆனால் கையில் பணம் இல்லாததால் இறந்த உடல்களை இறுதிச்சடங்கு செய்யாமல் சாந்தி தனது மகனுடன் வீட்டிலேயே வைத்துள்ளார். 

இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்து அதிகளவில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு சாந்தியின் வீட்டுக்குள் சென்று பார்த்த போது  அழுகிய நிலையில் மோகனசுந்தரம் மற்றும் கனகாம்பாளின் உடல் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.  அதன் அருகில் சாந்தியும், அவருடைய மகன் சரவணக்குமாரும் இருந்ததையும் பார்த்துள்ளனர். 

உடனடியாக இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சாந்தியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அவர் வறுமை, உடல் நலன் பாதிப்பு, சரியான நேரத்தில் உணவு கிடைக்காதது  காரணத்தால் கடந்த ஒரு வாரம் முன்பு மோகனசுந்தரமும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனகாம்பாளும் இறந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய தன்னிடம் பணம் இல்லாமல் இருந்தது. அதேசமயம் இதுகுறித்து பக்கத்து வீட்டில் உள்ளவர்களிடம் யாரிடமும் கூறி உதவி கேட்க மனம் இல்லாததால்  நானும், எனது மகனும் இறந்த உடல்களுடன் இருந்தோம் என கண்கலங்கியபடி தெரிவித்துள்ளார். ' என்றதை கேட்டதும் போலீசார் கண்கலங்கினர். இந்த சம்பவம் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

சாத்தன்குடி காதல் ஜோடி மரண விவகாரம் : முற்றுகையிட்ட சமுதாய அமைப்புகள்! பூட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகக் கதவுகள்!
சாத்தன்குடி காதல் ஜோடி மரண விவகாரம் : முற்றுகையிட்ட சமுதாய அமைப்புகள்! பூட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகக் கதவுகள்!
கட்டிட தொழிலாளி மனைவியுடன் கள்ளக் காதல்...டீ மாஸ்டர் முகத்தை சிதைத்த கணவன் , ஆட்டோ டிரைவர்
கட்டிட தொழிலாளி மனைவியுடன் கள்ளக் காதல்...டீ மாஸ்டர் முகத்தை சிதைத்த கணவன் , ஆட்டோ டிரைவர்
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
CM Vijay Perambur: ”என் தொகுதிக்கு இதெல்லாம் வேண்டும்” பெரம்பூருக்காக CM விஜயின் 7 கோரிக்கைகள் - ரூ.3 கோடி நிதி
”என் தொகுதிக்கு இதெல்லாம் வேண்டும்” பெரம்பூருக்காக CM விஜயின் 7 கோரிக்கைகள் - ரூ.3 கோடி நிதி
திமுக - அதிமுக கூட்டணி.. ராஜேந்திர பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் தான் தூதர்கள்.. நிர்மல்குமார் விளாசல்!
திமுக - அதிமுக கூட்டணி.. ராஜேந்திர பாலாஜி, அனிதா ராதாகிருஷ்ணன் தான் தூதர்கள்.. நிர்மல்குமார் விளாசல்!
YUVA AI: மத்திய அரசின் இலவச ஏஐ படிப்பு- சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கு வழி! விண்ணப்பிப்பது எப்படி?
YUVA AI: மத்திய அரசின் இலவச ஏஐ படிப்பு- சான்றிதழுடன் வேலைவாய்ப்புக்கு வழி! விண்ணப்பிப்பது எப்படி?
Carans Clavis: நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் எம்பிவி - 5 ஸ்டார் ரேட்டிங், 6 & 7 சீட்டர், 490KM ரேஞ்ச் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் எம்பிவி - 5 ஸ்டார் ரேட்டிங், 6 & 7 சீட்டர், 490KM ரேஞ்ச் - EMI விவரங்கள்
MK Stalin Dmk : சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்.! ஒரே வாரத்தில் தூக்கியடிக்கப்படும் திமுக நிர்வாகிகள்- ரெடியான லிஸ்ட்.?
CM Vijay: விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
விஜயை பாடாய்படுத்தும் ஃபேன் பாய்ஸ்..! கோரிக்கைகளை உடனே நிறைவேற்றிய CM.. ”ஹக் டூ செல்ஃபி”
திமுக வரலாற்றுத் திரிபை தவெக அரசும் பின்பற்றுவதா? நவ.1தான் தமிழ்நாடு நாள்- சாடிய அன்புமணி
திமுக வரலாற்றுத் திரிபை தவெக அரசும் பின்பற்றுவதா? நவ.1தான் தமிழ்நாடு நாள்- சாடிய அன்புமணி
Embed widget