மேலும் அறிய

வடிவேலுவின் அரிசி கடை சாம்பிள் பாலிசியை நகைக்கடையில் அப்ளை செய்த ‛பேமிலி பெண்கள்’ கைது!

சென்னையில் கவரிங் நகைகளை மாற்றி வைத்துவிட்டு தங்க நகைகளை நூதன முறையில் திருடிச்சென்ற தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் காலூராம். 63 வயதான அவர் அதே பகுதியில் சொந்தமாக நகைக்கடை வைத்துள்ளார். அவரது கடைக்கு தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு காலூராமின் நகைக்கடைக்கு இரு பெண்கள் வந்துள்ளனர். அவர்கள் இருவரும் கம்மல், சங்கிலி, மோதிரம் என பல நகைகளை பார்த்துள்ளனர். பல மாடல் நகைகளை பார்த்த அவர்கள் பின்னர் எந்த நகையையும் பிடிக்கவில்லை என்று கூறி சென்றுவிட்டனர். அவர்கள் சென்றபிறகு அவர்கள் வாங்கிப் பார்த்த சங்கிலி, கம்மல் மற்றும் மோதிரங்களில் ஏதோ மாற்றம் இருப்பதுபோல் காலூராம் உணர்ந்துள்ளார்.

உடனே அவர் அந்த நகைகளை சோதித்து பார்த்தபோது, சங்கிலி, மோதிரங்கள் மற்றும் கம்மல் கவரிங் ஆக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போதுதான், அந்த இரண்டு பெண்களும் தனது நகைகளை திருடிவிட்டு அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்திருப்பதை காலூராம் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.


வடிவேலுவின் அரிசி கடை சாம்பிள் பாலிசியை நகைக்கடையில் அப்ளை செய்த ‛பேமிலி பெண்கள்’ கைது!

உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில், காலூராம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, நகைக்கடை மற்றும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, நூதன திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்களும் ஆட்டோ ஒன்றில் ஏறிச்சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஆட்டோவில் ஏறிச்சென்ற இரண்டு பெண்களும் தாய் மற்றும் மகள் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழ்மாதிரை கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான சுமதி மற்றும் அவரது மகள் 26 வயதான பிரியதர்ஷினி ஆகியோர் என்பதையும் காவல்துறையினர் உறுதி செய்தனர்.


வடிவேலுவின் அரிசி கடை சாம்பிள் பாலிசியை நகைக்கடையில் அப்ளை செய்த ‛பேமிலி பெண்கள்’ கைது!

இதையடுத்து, தாய் சுமதி மற்றும் மகள் பிரியதர்ஷினி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் 2 பேரிடம் இருந்து 4 சவரன் தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் உள்ள ஏராளமான நகைக்கடைகளிலும் இதேபோல நூதன திருட்டில் ஈடுபட்டிருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தாய் சுமதி மற்றும் மகள் பிரியதர்ஷினி இருவரையும் தனிப்படை போலீசார் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீஞ்சூரில் வங்கி ஒன்றில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர் மேகநாதன் என்பவர், போலி வாடிக்கையாளர்கள் மூலம் கவரிங் நகைகளை வங்கியில் அடமானம் வைக்கச் சொல்லி, அதற்கு தங்க நகை என்று சான்றிதழ் அளித்து ரூபாய் 4 கோடியே 52 லட்சம் மோசடி செய்தத கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நகை மதிப்பீட்டாளர் மேகநாதன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Embed widget