மேலும் அறிய

வடிவேலுவின் அரிசி கடை சாம்பிள் பாலிசியை நகைக்கடையில் அப்ளை செய்த ‛பேமிலி பெண்கள்’ கைது!

சென்னையில் கவரிங் நகைகளை மாற்றி வைத்துவிட்டு தங்க நகைகளை நூதன முறையில் திருடிச்சென்ற தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் காலூராம். 63 வயதான அவர் அதே பகுதியில் சொந்தமாக நகைக்கடை வைத்துள்ளார். அவரது கடைக்கு தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு காலூராமின் நகைக்கடைக்கு இரு பெண்கள் வந்துள்ளனர். அவர்கள் இருவரும் கம்மல், சங்கிலி, மோதிரம் என பல நகைகளை பார்த்துள்ளனர். பல மாடல் நகைகளை பார்த்த அவர்கள் பின்னர் எந்த நகையையும் பிடிக்கவில்லை என்று கூறி சென்றுவிட்டனர். அவர்கள் சென்றபிறகு அவர்கள் வாங்கிப் பார்த்த சங்கிலி, கம்மல் மற்றும் மோதிரங்களில் ஏதோ மாற்றம் இருப்பதுபோல் காலூராம் உணர்ந்துள்ளார்.

உடனே அவர் அந்த நகைகளை சோதித்து பார்த்தபோது, சங்கிலி, மோதிரங்கள் மற்றும் கம்மல் கவரிங் ஆக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போதுதான், அந்த இரண்டு பெண்களும் தனது நகைகளை திருடிவிட்டு அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்திருப்பதை காலூராம் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.


வடிவேலுவின் அரிசி கடை சாம்பிள் பாலிசியை நகைக்கடையில் அப்ளை செய்த ‛பேமிலி பெண்கள்’ கைது!

உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில், காலூராம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சிவபிரசாத் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, நகைக்கடை மற்றும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, நூதன திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்களும் ஆட்டோ ஒன்றில் ஏறிச்சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஆட்டோவில் ஏறிச்சென்ற இரண்டு பெண்களும் தாய் மற்றும் மகள் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழ்மாதிரை கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான சுமதி மற்றும் அவரது மகள் 26 வயதான பிரியதர்ஷினி ஆகியோர் என்பதையும் காவல்துறையினர் உறுதி செய்தனர்.


வடிவேலுவின் அரிசி கடை சாம்பிள் பாலிசியை நகைக்கடையில் அப்ளை செய்த ‛பேமிலி பெண்கள்’ கைது!

இதையடுத்து, தாய் சுமதி மற்றும் மகள் பிரியதர்ஷினி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்கள் 2 பேரிடம் இருந்து 4 சவரன் தங்க நகைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இவர்கள் மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் உள்ள ஏராளமான நகைக்கடைகளிலும் இதேபோல நூதன திருட்டில் ஈடுபட்டிருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தாய் சுமதி மற்றும் மகள் பிரியதர்ஷினி இருவரையும் தனிப்படை போலீசார் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீஞ்சூரில் வங்கி ஒன்றில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர் மேகநாதன் என்பவர், போலி வாடிக்கையாளர்கள் மூலம் கவரிங் நகைகளை வங்கியில் அடமானம் வைக்கச் சொல்லி, அதற்கு தங்க நகை என்று சான்றிதழ் அளித்து ரூபாய் 4 கோடியே 52 லட்சம் மோசடி செய்தத கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து நகை மதிப்பீட்டாளர் மேகநாதன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Embed widget