மேலும் அறிய

16 வயது சிறுமிக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை..! உடந்தையாக இருந்த இளம்பெண்..! சூரத்தில் கொடூரம்..!

சூரத்தில் 16 வயது சிறுமியை இளைஞர்கள் இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததும், அதற்கு பெண் ஒருவர் உடந்தையாக இருந்ததும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது சூரத், மிகவும பிரபலமான இந்த நகரத்தில் மத்தியப் பிரதேசத்தைப் பூர்வீகமாக கொண்ட 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அந்த 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அவர்களது வீட்டிற்கு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரிந்த ஒரு பெண்ணும், அவருடன் ஒரு இளைஞரும் வந்துள்ளனர்.

அப்போது, அந்த இளைஞன் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இந்த கொடூர சம்பவத்திற்கு அந்த பெண்ணும் உடந்தையாக இருந்துள்ளார். பின்னர், அந்த இளைஞனும், அந்த பெண்ணும் இணைந்து அந்த சிறுமியிடம் இந்த விவகாரத்தை வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று கூறியுள்ளனர். வெளியில் கூறினால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.


16 வயது சிறுமிக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை..! உடந்தையாக இருந்த இளம்பெண்..! சூரத்தில் கொடூரம்..!

பின்னர், ஒரு வாரம் கடந்த பிறகு அந்த இளைஞனுக்கு உடந்தையாக இருந்த பெண் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று அந்த சிறுமியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அவ்வாறு வராவிட்டால் சிறுமியின் தந்தையை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்த சிறுமியை அந்த பெண் அருகில் இருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனுடன் இன்னொரு இளைஞனும் இருந்துள்ளான்.

இவர்கள் இருவரும் இணைந்து சிறுமிக்கு டீயில் போதை மருந்தை கலந்து கொடுத்து குடிக்க வைத்ததுள்ளனர். பின்னர், மயக்க நிலைக்கு சென்ற சிறுமியை இருவரும் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு சிறுமியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார். பின்னர் தனது தாயுடன் சிறுமி மத்திய பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கே திரும்பியுள்ளார். அங்கு சிறுமியின் நடவடிக்கைகளில் பெரியளவில் மாற்றம் இருப்பதை கண்ட பெற்றோர்களும், உறவினர்களும் சிறுமியிடம் விசாரித்தனர்.


16 வயது சிறுமிக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை..! உடந்தையாக இருந்த இளம்பெண்..! சூரத்தில் கொடூரம்..!

அப்போது, சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தை விவரித்துள்ளார். இதையடுத்து, மத்திய பிரதேசத்தில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் சூரத் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 இளைஞர்கள் மற்றும் உடந்தையாக இருந்த ஒரு பெண் உள்பட மூன்று பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
" நான் ஒருத்தர கொலை பண்ணிட்டேன் " நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Sanam Shetty:
Sanam Shetty: "நான் தளபதி ரசிகை.." சனம் ஷெட்டியிடம் மைக்கைப் பிடுங்கி அனுப்பிய மாணவர்கள் - நீங்களே பாருங்க
TASMAC SHOP : பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் இனி தப்பிக்க முடியாது.! என்னென்ன Punishment.? லிஸ்ட் போட்ட டாஸ்மாக்
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் கால்நடை தடுப்பு... நோயாளிகள் பெரும் அவதி: எங்கே தெரியுமா?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
Embed widget