மேலும் அறிய

காதலியால் ஏமாற்றம், உதவி ஆய்வாளர் மிரட்டல்: குவைத்தில் இளைஞர் தற்கொலை! மயிலாடுதுறை பரபரப்பு

காவல் உதவி ஆய்வாளருடன் சேர்ந்து காதலி தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி இளைஞர் குவைத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது காதலி வேறொருவரைத் திருமணம் செய்யவிருப்பதாகவும், வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மிரட்டியதாகவும் கூறி, தொலைபேசியில் பெற்றோரிடம் தெரிவித்த சில மணிநேரங்களில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, உதவி ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் அளித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காதல் கதை தொடங்கியது எப்படி?

மயிலாடுதுறை மாவட்டம், தலைஞாயிறு கிராமத்தைச் சேர்ந்த மணவாளன் என்பவரின் ஒரே மகன் 30 வயதான சரத்குமார். இவர் கடந்த சில ஆண்டுகளாக குவைத் நாட்டில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்துள்ளார். வைத்தீஸ்வரன்கோயில் அருகே உள்ள திருப்பன்கூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவரை சரத்குமார் கடந்த 10 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.


காதலியால் ஏமாற்றம், உதவி ஆய்வாளர் மிரட்டல்: குவைத்தில் இளைஞர் தற்கொலை! மயிலாடுதுறை பரபரப்பு

சரத்குமார் வெளிநாட்டில் வேலை பார்த்ததால், அடிக்கடி சங்கீதாவுக்கு ரொக்கப் பணம் மற்றும் நகைகளை அனுப்பியுள்ளார். இதுவரை 15 சவரன் நகைகள் மற்றும் சுமார் இரண்டு லட்ச ரூபாய் வரை ரொக்கப் பணம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. திருமணம் செய்துகொள்ளும் நம்பிக்கையில் இந்த உறவு நீடித்துள்ளது.

சம்பவத்தின் திருப்புமுனை: உதவி ஆய்வாளரின் தலையீடு

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சங்கீதாவின் இருசக்கர வாகனம் தொலைந்த நிலையில், இதுகுறித்து புகார் அளிக்க வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது, காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூர்யமூர்த்தி என்பவருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பானது நாளடைவில் நெருக்கமாக மாறியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, சங்கீதாவும் உதவி ஆய்வாளர் சூர்யமூர்த்தியும் வெளிநாட்டில் இருந்த சரத்குமாருக்கு வீடியோ கால் செய்துள்ளனர். அப்போது, "நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம், எங்கள் விஷயத்தில் நீ தலையிடாதே" என்று கூறியுள்ளனர். மேலும், உதவி ஆய்வாளர் சூர்யமூர்த்தி, சரத்குமாரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சரத்குமார் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.


காதலியால் ஏமாற்றம், உதவி ஆய்வாளர் மிரட்டல்: குவைத்தில் இளைஞர் தற்கொலை! மயிலாடுதுறை பரபரப்பு

சோகமான முடிவு

நேற்று இரவு, சரத்குமார் தனது பெற்றோரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, சங்கீதா தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், இனி உயிர் வாழ விருப்பமில்லை என்றும் வேதனையுடன் கூறியுள்ளார். அதற்குப் பிறகு அவரது தொலைபேசியை அணைத்து வைத்துள்ளார். பெற்றோர்கள் தொடர்ந்து தொடர்புகொள்ள முயன்றபோது, அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், குவைத்தில் உள்ள சரத்குமாரின் நண்பர்களுக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நண்பர்கள், சரத்குமார் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்தச் செய்தி சரத்குமாரின் குடும்பத்தினரைத் துயரத்தில் ஆழ்த்தியது.

உறவினர்கள் நீதிகேட்டுப் போராட்டம்

சம்பவத்தைக் கேள்விப்பட்ட சரத்குமாரின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூர்யமூர்த்தி தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதால், சரத்குமார் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டதாகவும், எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் புகார் மனு அளித்தனர். மேலும், குவைத்தில் உள்ள சரத்குமாரின் உடலை உடனடியாக இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தற்கொலைக்குத் தூண்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.


காதலியால் ஏமாற்றம், உதவி ஆய்வாளர் மிரட்டல்: குவைத்தில் இளைஞர் தற்கொலை! மயிலாடுதுறை பரபரப்பு

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்

இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில சட்ட உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

" அம்மா கிட்ட சொன்னேன் கண்டுகல " 9 - ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கள்ளக் காதலன்
"எங்களுக்குப் புற்றுநோய் வந்துடும்!" - மயிலாடுதுறையில் அஞ்சும் பொதுமக்கள்: வீதிக்கு வந்து போராட்டம்!
நச்சுப் புகையால் திணறும் ஆன்மீக நவகிரக ஸ்தலம்;  திருவெண்காட்டில் தொடரும் சுகாதாரச் சீர்கேடு!
நச்சுப் புகையால் திணறும் ஆன்மீக நவகிரக ஸ்தலம்;  திருவெண்காட்டில் தொடரும் சுகாதாரச் சீர்கேடு!
நண்பனைக் காப்பாற்றச் சென்று உயிரை விட்ட சோகம்... விஷவாயு தாக்கி ஒருவர் பலி; ஆபத்தான நிலையில் 3 பேர்..
நண்பனைக் காப்பாற்றச் சென்று உயிரை விட்ட சோகம்... விஷவாயு தாக்கி ஒருவர் பலி; ஆபத்தான நிலையில் 3 பேர்..

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 30-ம் தேதி எக்கச்சக்கமான இடங்கள்ல மின் தடை இருக்கு; இந்த லிஸ்ட்ட பாருங்க
சென்னை மக்களே.! ஜூலை 30-ம் தேதி எக்கச்சக்கமான இடங்கள்ல மின் தடை இருக்கு; இந்த லிஸ்ட்ட பாருங்க
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Embed widget