மேலும் அறிய

கள்ளச்சாராய விற்பனையை கண்டுகொள்ளாத காவல்துறை - களத்தில் இறங்கிய பெண்கள்

மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையை போலீசார் தடுக்காததால் காவல்துறையினரை கண்டித்து கிராம புற பெண்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராய விற்பனையும், பாண்டி சாராயம் விற்கப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், அவர்களில் கண்ணில் மண்ணைத் தூவும் விதமாகவும், ஒரு சில காவலர்களின் ஒத்துழைப்பாலும், இந்த கள்ளச்சாராய விற்பனையை தடுப்பது என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது.


கள்ளச்சாராய விற்பனையை கண்டுகொள்ளாத காவல்துறை - களத்தில் இறங்கிய பெண்கள்

மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தை ஒட்டிய பகுதியில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் அமைந்துள்ளதால், அங்கிருந்து பாண்டி எரி சாராயம் கடத்தி வரப்பட்டு, மதுரை மாவட்டத்தின் பல பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. மாவட்ட எல்லையில் சோதனை சாவடிகள் இருந்தும் அதனை கடந்து சாராயம் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவது, மக்கள் மத்தியில் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. சாராய விற்பனையை தடுக்க வேண்டும் என்றால் காவல்துறை அனைவருமே தங்கள் பணியை சரியாக செய்தால் மட்டுமே முடியும் எனவும் மாறாக கையூட்டு பெற்றுக் கொண்டு கடத்தல் காரர்களையும் சாராய விற்பனை செய்பவர்களையும் காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை என பலர் குற்றச்சாட்டையும் பதிவு செய்கின்றனர்.


கள்ளச்சாராய விற்பனையை கண்டுகொள்ளாத காவல்துறை - களத்தில் இறங்கிய பெண்கள்

இந்நிலையில் இதற்கு எடுத்துக்காட்டாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கழுக்கானிமுட்டத்தை சேர்ந்த தவமணி அவரது மகள் சுபத்ரா ஆகியோர் வேப்பங்குளம் கருவக்காடு பகுதியில் தொடர்ந்து பல மாதங்களாக சாராய விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. தவமணி கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மகள் சுபத்ரா தொடர்ந்து சாரய விற்பனை செய்து வந்துள்ளார். 

Goa Forest Fire: ஆறு நாளாக கோவாவில் பற்றி எரியும் காட்டுத்தீ... தீயை பரப்பியவர்கள் யார்..? உத்தரவிட்ட கோவா அரசு!


கள்ளச்சாராய விற்பனையை கண்டுகொள்ளாத காவல்துறை - களத்தில் இறங்கிய பெண்கள்

இந்த சூழலில் இதுகுறித்து  மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த வேப்பங்குளம் பகுதி பெண்கள் சாராய விற்பனை நடைபெற்ற இடத்திற்கு சென்று பாண்டி சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அப்பகுதியில் உள்ள சாலையில் சாராய பாக்கெட்டுகளை உடைத்து அவற்றை அழித்தனர். தொடர்ந்து, நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து  சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாஸ்மாக் டெண்டர் விவகாரம்: அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி..!


கள்ளச்சாராய விற்பனையை கண்டுகொள்ளாத காவல்துறை - களத்தில் இறங்கிய பெண்கள்

இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சாலைமறியல் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு காவல்துறையினர் வராத நிலையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் சுபத்ராவை  எச்சரிக்கை செய்து விட்டு பெண்கள் கலைந்து சென்றனர். மேலும் இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், தங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக சாராய விற்பனை நடைபெற்று வருவதாகவும், காவல்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு சாராய விற்பனையை தடுக்க வேண்டும் என்றும், அதனை விடுத்து அவர்களும் இதனை கண்டு கொள்ளாமலும், புகார் அளித்தபின்னும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் காவல்துறையினர் மீது நம்பிக்கை இழந்துள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

DGE TN Warning: தேர்வு எழுதவே நிரந்தரத் தடை: ஒழுங்கீனச்‌ செயலில்‌ ஈடுபடுவோருக்கு அரசுத் தேர்வுகள்‌ இயக்ககம் எச்சரிக்கை


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களுக்கு ரெட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் Alert -  வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களுக்கு ரெட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் Alert - வானிலை அறிக்கை
Sengottaiyan joined TVK: ஜெ. படத்தை தூக்கி போட்ட செங்கோட்டையன்.! பாக்கெட்டில் ஜொலிக்கும் விஜய் படம்
ஜெ. படத்தை தூக்கி போட்ட செங்கோட்டையன்.! பாக்கெட்டில் ஜொலிக்கும் விஜய் படம்
தவெகவில் இணைந்ததற்கு இது தான் காரணம்.! தம்பி இளவல் விஜய் தலைமையில் ஆட்சி- செங்கோட்டையன் அதிரடி
தவெகவில் இணைந்ததற்கு இது தான் காரணம்.! இளவல் விஜய் தலைமையில் ஆட்சி- செங்கோட்டையன் அதிரடி
Sengottaiyan: விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்... கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக
விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்... கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களுக்கு ரெட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் Alert -  வானிலை அறிக்கை
TN Weather Update: கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களுக்கு ரெட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் Alert - வானிலை அறிக்கை
Sengottaiyan joined TVK: ஜெ. படத்தை தூக்கி போட்ட செங்கோட்டையன்.! பாக்கெட்டில் ஜொலிக்கும் விஜய் படம்
ஜெ. படத்தை தூக்கி போட்ட செங்கோட்டையன்.! பாக்கெட்டில் ஜொலிக்கும் விஜய் படம்
தவெகவில் இணைந்ததற்கு இது தான் காரணம்.! தம்பி இளவல் விஜய் தலைமையில் ஆட்சி- செங்கோட்டையன் அதிரடி
தவெகவில் இணைந்ததற்கு இது தான் காரணம்.! இளவல் விஜய் தலைமையில் ஆட்சி- செங்கோட்டையன் அதிரடி
Sengottaiyan: விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்... கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக
விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்... கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக
Sengottaiyan : ’காலம்போன காலத்தில் TVK’ இன்னொரு புஸ்ஸி ஆனந்தா செங்கோட்டையன்..?
’காலம்போன காலத்தில் TVK’ இன்னொரு புஸ்ஸி ஆனந்தா செங்கோட்டையன்..?
Gautam Gambhir: சொன்னதை செய்ய மாட்டேன், மாத்தி மாத்தி பேசுவேன் - கன் டீம்? அந்தர் பல்டி அடிக்கும் கம்பீர்..
Gautam Gambhir: சொன்னதை செய்ய மாட்டேன், மாத்தி மாத்தி பேசுவேன் - கன் டீம்? அந்தர் பல்டி அடிக்கும் கம்பீர்..
Mahindra XEV 9S: நாட்டின் வேகமான, ப்ராண்டின் முதல் 7 சீட்டர் மின்சார SUV - மஹிந்த்ராவின் XEV 9S விலை, விவரங்கள்
Mahindra XEV 9S: நாட்டின் வேகமான, ப்ராண்டின் முதல் 7 சீட்டர் மின்சார SUV - மஹிந்த்ராவின் XEV 9S விலை, விவரங்கள்
Tamil Nadu Weatherman: சென்னை தான் ஹாட்ஸ்பாட்டா.!! எந்த இடத்தில் புயல் கரையை கடக்கும்- வெதர்மேன் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை தான் ஹாட்ஸ்பாட்டா.!! எந்த இடத்தில் புயல் கரையை கடக்கும்- வெதர்மேன் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
Embed widget