மேலும் அறிய

அசைவ உணவகத்திற்கு ஆய்வு சென்ற அதிகாரிகள் - சுகாதார பெண் ஆய்வாளர் மீது தாக்குதலா? - என்ன நடந்தது ?

அசைவ ஹோட்டலில் ஆய்வுக்கு சென்ற சுகாதார பெண் ஆய்வாளர் மீது கடை நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகாரில் ஹோட்டல் உரிமையாளர் உட்பட சிலர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள அசைவ ஹோட்டலில் ஆய்வுக்கு சென்ற சுகாதார பெண் ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் மீது கடை நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகாரை தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர் உட்பட சிலர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குபதிவு செய்து போலீசார் நடவடிக்கை  மேற்கொண்டுள்ளனர்.

அசைவ உணவகம் மீது எழுந்த புகார்

மயிலாடுதுறை நகராட்சி கச்சேரி சாலையில் நகராட்சிக்கு சொந்தமான எம்.எம்.ஆர் வணிக வளாகத்தில் 32 கடைகள் வாடகைக்கு விடப்பட்டு இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகத்தில் உள்ள பாய் வீட்டு கல்யாண பிரியாணி கடை வணிக வளாகத்தில் நடந்து செல்லக்கூடிய பகுதி மற்றும் கழிவறை மேல்தள பகுதியை ஆக்கிரமித்தும் திறந்தவெளியில் பிரியாணி சமைத்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர் கணேசன் என்பவர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இன்று நகராட்சி நிர்வாகம் உணவு பாதுகாப்பு துறையினர் அந்த அசைவ பிரியாணி ஹோட்டலில் ஆய்வுக்கு சென்றனர்.


அசைவ உணவகத்திற்கு ஆய்வு சென்ற அதிகாரிகள் - சுகாதார பெண் ஆய்வாளர் மீது தாக்குதலா? - என்ன நடந்தது ?

அதிகாரிகள் தாக்கப்பட்டதாக புகார்

ஹோட்டலில் உள்ளே நுழைந்தபோதே கொக்கியில் பிளாஸ்டிக் பைகள் மாட்டியிருந்ததை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பிருந்தா கைப்பற்றினார். அப்போது ஹோட்டலில் இருந்த அமர், அஃபீல் உள்ளிட்ட 20 பேர் வாக்குவாதம் செய்து சுகாதார ஆய்வாளர் பிருந்தா கையில் வைத்திருந்த பிளாஸ்டிக் கவர்களை பிடிங்கியபோது கொக்கி மோதிரத்தில் மாட்டியதால் வலி தாங்காமல் அலறியுள்ளார். இதனை பார்த்த  நகரமைப்பு பிரிவு உதவியாளர் முருகராஜ் வந்து கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டு ஹோட்டல் நிர்வாகத்தினர் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினரும் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். சுகாதாரமற்ற முறையில் ஹோட்டல் இயங்குவதாகவும் விளக்கமளிக்க கோரி கடந்த மாதம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் அசைவ ஹோட்டலுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.


அசைவ உணவகத்திற்கு ஆய்வு சென்ற அதிகாரிகள் - சுகாதார பெண் ஆய்வாளர் மீது தாக்குதலா? - என்ன நடந்தது ?

நகராட்சி ஊழியர்கள் தர்ணா

இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக பணியை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி அதிகாரிகளை தாக்கியதாக கூறப்படும் நபர்கள் நகர் மன்றத் துணைத் தலைவர் எஸ்எஸ் குமாருடன் சமரசம் பேச நகராட்சிக்கு வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர். தொடர்ந்து பணியில் இருந்த அதிகாரிகளை தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி நகராட்சி முன்பு நகராட்சி துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சுப்பிரியா பேச்சுவார்த்தை நடத்தி கடையை சீல் வைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதாக கூறி அதிகாரிகளை அழைத்து சென்றார்.  

Exit Poll Results 2024 LIVE: மக்களவைத் தேர்தல்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு என்ன சொல்லுது? உடனுக்குடன் அப்டேட்ஸ்


அசைவ உணவகத்திற்கு ஆய்வு சென்ற அதிகாரிகள் - சுகாதார பெண் ஆய்வாளர் மீது தாக்குதலா? - என்ன நடந்தது ?

ஹோட்டல் ஆதரவாக சாலை மறியல் போராட்டம்

இதனிடையே அசைவ ஹோட்டல், பிரியாணி ஹோட்டல் தரப்பினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இஸ்லாமிய கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அசைவ உணவகத்திற்கு காவல்துறை உதவியுடன் நகராட்சி உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் பூட்டி சீல் வைக்க முயன்றபோது அவர்களை தடுத்து நிறுத்தி நகராட்சி அதிகாரிகள் காழ்புணர்ச்சியோடு  செயல்படுவதாகவும் காரணமில்லாமல் கடையை பூட்டி சீல் வைப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து கடையின் உள்ளே அமர்ந்தனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஹோட்டலில் உள்ள உணவை உணவு பாதுகாப்புதுறை ஆய்வகத்திற்கு சோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. ஆய்வு முடிவு வரும்வரை கடையை திறக்க கூடாது என்று ஹோட்டலுக்கு சீல் வைக்காமல் கடை பூட்டப்பட்டது.


அசைவ உணவகத்திற்கு ஆய்வு சென்ற அதிகாரிகள் - சுகாதார பெண் ஆய்வாளர் மீது தாக்குதலா? - என்ன நடந்தது ?

ஆனால் இதை ஏற்காத நகராட்சி துறையினர் கடையை பூட்டி சீல் வைப்பதற்கும் பாதுகாப்பு வழங்க கோரியும், அரசு அலுவலர்களை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்ககோரி காவல்துறையினரிடம் மனு அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அசைவ ஹோட்டல் நிர்வாகத்தினர் கூறுகையில், நகராட்சி துறையினர் காசு இல்லாமல் பிரியாணி கேட்டதாகவும் தராததால் கடையை சோதனை செய்வதாக வந்த நபர்கள் தவறான வார்த்தைகளை கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளுத ஏற்பட்டதாகவும் நாங்கள் அடிக்கவில்லை என்றும் உணவு பாதுகாப்பு துறையினர் சுகாதாரமற்ற முறையில் உள்ளதாக வழங்கிய நோட்டீஸ்சிற்கு உரிய விளக்கம் அளித்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.


அசைவ உணவகத்திற்கு ஆய்வு சென்ற அதிகாரிகள் - சுகாதார பெண் ஆய்வாளர் மீது தாக்குதலா? - என்ன நடந்தது ?

பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு

இதனிடையே அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கியதாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பிருந்தா அளித்த புகாரின் பேரில் போலீசார், உரிமையாளர் அஃபில், அமீர் மற்றும் சிலர் மீது 294(b), 332, 506(i) பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் என 400 -க்கும் மேற்பட்டோர் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு நகராட்சியில் இன்று தஞ்சமடைந்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
Admk Bjp Alliance: 45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்
Admk Bjp Alliance: 45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
Year Ender 2025: யார் நம்பர் 1 பேட்ஸ்மேன்? கோலியின் சாதனை, 2025-ல் இந்திய கிரிக்கெட்! மற்ற வீரர்கள் நிலை என்ன?
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
தகாத உறவு.. கணவனை கொன்று உடலை க்ரைண்டரில் அரைத்த மனைவி - குழந்தை தந்த ட்விஸ்ட்
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
திருமணமான 9 நாளில் சோகம்! குன்றத்தூரில் இளம் தம்பதி மரணம்: அதிர்ச்சியில் உறவினர்கள், காரணம் என்ன?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Maruti Wagon R: விற்பனை ஜரூர்..! 35 லட்சம் யூனிட்களை கடந்த மாருதியின் 3வது கார்.. அப்படி என்ன தான் இருக்கு?
Holiday Special Class: மாணவர்களுக்கு குஷியோ குஷி. அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த தடை- வெளியான உத்தரவு
மாணவர்களுக்கு குஷியோ குஷி. அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த தடை- வெளியான உத்தரவு
Embed widget