7 ஆண்டு காதல், ரகசிய திருமணம், 3 முறை கருக்கலைப்பு - ஏமாற்றிய காதலன் சிறையில் அடைப்பு
காதலித்த பெண்ணை ரகசிய திருமணம் செய்து 3 முறை கருகலைப்பு செய்ய வைத்து இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற காதலன் வீட்டில் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் காதலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
![7 ஆண்டு காதல், ரகசிய திருமணம், 3 முறை கருக்கலைப்பு - ஏமாற்றிய காதலன் சிறையில் அடைப்பு Mayiladuthurai news Girl dharna protest at her lover house - TNN 7 ஆண்டு காதல், ரகசிய திருமணம், 3 முறை கருக்கலைப்பு - ஏமாற்றிய காதலன் சிறையில் அடைப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/19/d83284bc507d8d178834ba77901ac2c31708357760718733_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அசிக்காடு ஊராட்சி செங்குடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த பொண்ணையன் என்பவரின் மகள் 26 வயதான சுகப்பிரியா. இவர் சென்னையில் நர்சிங் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதி மேலத்தெருவை சேர்ந்த அழகர்சாமி என்பவரின் 29 வயதான மகன் வினோத் வெளிநாட்டு வேலை பார்த்து வந்தவர் தற்போது டாடா ஏசி வாகனம் ஓட்டு வருகிறார். இந்நிலையில் சுகப்பிரியா வினோத் இவர்கள் இருவரும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சுகப்பிரியாவை திருமணம் செய்து கொள்வதாக வினோத் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாண்டிச்சேரி, வேளாங்கண்ணி, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு அழைத்துச் சென்று இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.
இதனால் இரண்டு முறை கரு கலைப்பு செய்ததாக கூறும் சுகப்பிரியா, மூன்றாவது முறையாக கர்ப்பம் ஆகிய நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாலி கட்டி தன்னை ரகசிய திருமணம் செய்து கொண்ட காதலன் வினோத், கர்ப்பிணிகளுக்கு தரும் சத்து மாத்திரை என்று கூறி கருகலைப்பு மாத்திரையை ஏமாற்றி வாங்கி தந்து அதனை என்னை சாப்பிட வைத்து தன்னை ஏமாற்றி வயிற்றில் வளர்ந்த 3வது கருவை கலைத்து விட்டதாகவும். தற்போது என்னை நிராகத்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயல்வதாக மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகார் அளித்து 56 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை புகார் குறித்து மகளிர் காவல் நிலையத்தில் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள சுகப்பிரியா, வினோத் வீட்டிற்கு சென்று வாசலில் அமர்ந்து நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை செல்லமாட்டேன் என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அடுத்து வினோத் வீட்டில் இருந்த பெற்றோர் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்ட நிலையில், வீட்டின் வாசல் கேட் பூட்டை உடைத்து உள்ளே சென்றதாக காவல்நிலையத்தில் வினோத் குடும்பத்தார் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பெரம்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
"வயநாட்டுக்கு போகாமா போட்டி போடட்டும்" ராகுல் காந்திக்கு சவால் விட்ட ஸ்மிருதி இராணி
இந்நிலையில் மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் இருவரையும் சேர்த்து வையுங்கள் என்று கூறியதன் பேரில் இரு குடும்பத்தாரும் பேச்சுவார்த்தை நடத்த கால அவகாசம் பெற்று சென்றதால் நடவடிக்கை எடுக்காமல் நிறுத்தி வைத்ததாக கூறிய போலீசார், சுகப்பிரியா காதலன் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் வினோத்தை கைது செய்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றுதல் 420, 417 ஆகிய சட்டபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். ஏழு ஆண்டுகள் காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டு மூன்று முறை கருக்கலைப்பு செய்து விட்டு இளைஞர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றது, இதனை அறிந்த காதலி காதலன் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு தற்போது காதல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்ட சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)