மேலும் அறிய

கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 63 பேர் உயிரிழந்த விவகாரத்தைவிட, மயிலாடுதுறை முட்டத்தில் நடந்த மரணங்கள் கொடூரமானது - சாட்டை துரைமுருகன் 

கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 63 பேர் உயிரிழந்த விவகாரத்தைவிட, மயிலாடுதுறை முட்டத்தில் நடந்த மரணங்கள் கொடூரமானது என சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 63 பேர் உயிரிழந்த விவகாரத்தைவிட, மயிலாடுதுறை முட்டத்தில் நடந்த மரணங்கள் கொடூரமானது என்பதால் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என மயிலாடுதுறை அருகே பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

கொலையான இளைஞர்களின் உறவினர்களிடம் ஆறுதல் 

மயிலாடுதுறையில் கடந்த பிப்ரவரி 14 -ம் தேதி இரவு சாராய விற்பனையை தட்டிக்கேட்டதற்காக கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ஹரீஸ் மற்றும் ஹரிசக்தி ஆகியோரது குடும்பத்தினரை நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிசெந்தில் மற்றும் கொள்கைபரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிசெந்தில் கூறியதாவது;


கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 63 பேர் உயிரிழந்த விவகாரத்தைவிட, மயிலாடுதுறை முட்டத்தில் நடந்த மரணங்கள் கொடூரமானது - சாட்டை துரைமுருகன் 

காவல்துறையினரின் அலட்சியத்தால் கொலை

காவல்துறை உரிய நேரத்தில் செயல்பட்டிருந்தால் இந்த கொலை நடந்திருக்காது. உண்மை குற்றவாளிகளை மறைக்கும் நோக்கத்துடன் காவல்துறை செயல்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டினார்.

சாட்டை துரைமுருகன் 

அவரை தொடர்ந்து பேசிய நாம் தமிழர் கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் கூறுகையில், இந்த வழக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும், காவல்துறையினர், வருவாய்த்துறையினர் செய்ய வேண்டிய சாராய விற்பனையை தடுக்க வேண்டிய வேலையினை உயிரிழந்த இந்த இரண்டு இளைஞர்களும் செய்துள்ளனர்.


கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 63 பேர் உயிரிழந்த விவகாரத்தைவிட, மயிலாடுதுறை முட்டத்தில் நடந்த மரணங்கள் கொடூரமானது - சாட்டை துரைமுருகன் 

வழக்கை மடைமாற்றம் செய்த காவல்துறை

இப்பகுதியில் நடைபெறும் சாராய வியாபாரம் குறித்து 8 புகார்கள் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், அதில் ஒரு புகாரில் நடவடிக்கை எடுத்திருந்தால்கூட இந்த கொலைகள் நடந்திருக்காது. பிப்ரவரி 11 -ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராஜ்குமார் பிப்ரவரி 14-ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளிவந்த நிலையில், அன்றிரவு 7 மணிக்கு இந்த கொலைகள் நடந்துள்ளன. கொலைக்கு முக்கிய உடந்தையாக இருந்த மஞ்சுளா, கார்த்திகா ஆகிய இரண்டு பெண்கள் மீது இதுவரை எப்ஐஆர் போடப்படவில்லை. அவர்கள்தான் இவர்களை கொலை செய்ய சொல்லி தூண்டியதாக கொலையை நேரில் பார்த்த ஹரிசக்தியின் சகோதாரர் கூறியுள்ள நிலையில், கொலைக்கான காரணம் முன்விரோதம்தான் என காவல்துறையினர் மடைமாற்றம் செய்வதற்கான காரணம் என்ன?

கண்டுக் கொள்ளாத திமுக 

போலீஸார் கண்துடைப்புக்காக வழக்குகளை போட்டு, உடனடியாக சாராய வியாபாரிகளை விடுவித்து விடுகின்றனர். இவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இரண்டு உயிர்கள் போயிருக்காது. இது தமிழக காவல்துறை, தமிழக அரசின் தோல்வி. எனவே, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்கள் உள்பட அனைவரின் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கிராமத்தில் 30 பேர் இதுவரை சாராய வியாபாரிகளால் தாக்கப்பட்டுள்ளனர். பரம்பரையாக திமுகவுக்கு வாக்களிக்கக் கூடிய மக்கள் வசிக்கக் கூடிய இந்த கிராமத்தில் நடைபெற்ற மரணத்தை ஏன் இதுவரை எந்த திமுகவினரும் கண்டுகொள்ளவில்லை.


கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 63 பேர் உயிரிழந்த விவகாரத்தைவிட, மயிலாடுதுறை முட்டத்தில் நடந்த மரணங்கள் கொடூரமானது - சாட்டை துரைமுருகன் 

ஒரு கோடி ரூபாய் இழப்பீடு 

சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும். இரண்டு இளைஞர்களின் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் தலைமையில் மாபெரும் போராட்டம் நடத்துவோம். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
Tirunelveli: நெல்லையில் கண்ணில் பட்டவர்களை வெட்டிய கும்பல்.. இருவர் கொலை... பெரும் பதற்றம்!
ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
ஆண்களுடன் ஏற்பட்ட தகாத உறவு !! அக்காவை பழி தீர்க்க தம்பி செய்த வெறிச் செயல்
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் !! தனி அறை எடுத்து இறுதியாக பேசிய வீடியோ கால் !! நடந்தது என்ன ?
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
ABP Premium

வீடியோ

Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Surprise Gift: மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000; முதலமைச்சரின் சர்ப்ரைஸ் கிஃப்ட்; யார் யாருக்கு தெரியுமா.?
மீண்டும் அக்கவுண்ட்டுக்கு வந்த ரூ.2,000; முதலமைச்சரின் சர்ப்ரைஸ் கிஃப்ட்; யார் யாருக்கு தெரியுமா.?
1- 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வுகள் எப்போது? ஸ்கிரைப் நியமனத்தில் நடந்தது என்ன? அமைச்சர் அன்பில் அப்டேட்!
1- 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுத்தேர்வுகள் எப்போது? ஸ்கிரைப் நியமனத்தில் நடந்தது என்ன? அமைச்சர் அன்பில் அப்டேட்!
வலுவில்லாத மத்திய கைலாஷ் எல் மேம்பாலம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்- அன்புமணி கடும் கண்டனம்
வலுவில்லாத மத்திய கைலாஷ் எல் மேம்பாலம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்- அன்புமணி கடும் கண்டனம்
வங்கி கணக்கில் ரூ.8,000 டெபாசிட்.! மீனவர்கள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்
வங்கி கணக்கில் ரூ.8,000 டெபாசிட்.! மீனவர்கள் எதிர்பார்த்த அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்
Trump Arab Countries Iran: “மெயின் அடியே இனிமே தான் இருக்கு“; ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங்; தாக்குதலில் இணையும் அரபு நாடுகள்.?
“மெயின் அடியே இனிமே தான் இருக்கு“; ஈரானுக்கு ட்ரம்ப் வார்னிங்; தாக்குதலில் இணையும் அரபு நாடுகள்.?
OPS CAR DRIVER: ஓபிஎஸ் டிரைவரை புலம்ப வைத்த நெட்டிசன்கள்.! அறிவாலயத்தில் நடந்தது இது தான்- போட்டுடைத்த ஓட்டுநர்
ஓபிஎஸ் டிரைவரை புலம்ப வைத்த நெட்டிசன்கள்.! அறிவாலயத்தில் நடந்தது இது தான்- போட்டுடைத்த ஓட்டுநர்
Top 10 News Headlines: மீனவர்களுக்கு உதவித்தொகை, தங்கம் விலை குறைவு, மோடிக்கு சோனியா கண்டனம், அமெரிக்கா அறிவிப்பு - 11 மணி செய்திகள்
மீனவர்களுக்கு உதவித்தொகை, தங்கம் விலை குறைவு, மோடிக்கு சோனியா கண்டனம், அமெரிக்கா அறிவிப்பு - 11 மணி செய்திகள்
China Backs Iran: “ஈரானுக்கு நாங்க இருக்கோம்“ சீனுக்கு வந்த சீனா; அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மெசேஜ் - என்ன நடக்குமோ.?
“ஈரானுக்கு நாங்க இருக்கோம்“ சீனுக்கு வந்த சீனா; அமெரிக்கா, இஸ்ரேலுக்கு மெசேஜ் - என்ன நடக்குமோ.?
Embed widget