மேலும் அறிய

தொடரும் கொள்ளை சம்பவங்கள் - பதட்டத்தில் பொதுமக்கள்..! எங்கே தெரியுமா?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வீட்டின் கதவை உடைத்து 25 சவரன் தங்க நகைகள், மடிக்கணினிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வீட்டின் கதவை உடைத்து 25 சவரன் தங்க நகைகள், மடிக்கணினிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடரும் குற்றச்சம்பவங்கள் 

தமிழகத்தில் நாள்தோறும் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறையினர் தரப்பில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், காவல்துறையினர் கண்களில் மண்ணைத் தூவும் விதமாக திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தேறிய வருகிறது. இதனால் நாள்தோறும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்ற சம்பவங்களை குறைக்க காவல்துறையினர் முயன்று வருகின்றனர். 


தொடரும் கொள்ளை சம்பவங்கள் - பதட்டத்தில் பொதுமக்கள்..! எங்கே தெரியுமா?

தொடரும் கொள்ளை சம்பவங்கள் 

அதுவும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்திலும் நாளுக்கு நாள் திருட்டு நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் கோயில் உண்டியலை உடைத்து 2 லட்சம் ரூபாய் திருட முயன்று மூன்று கொள்ளையர்கள் சிக்கிய நிலையில் அதனை தொடர்ந்து இரண்டு தினங்களில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து 7 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. மேலும் பொறியாளர் ஒருவர் வீட்டின் கதவை உடைத்து 125 சவரன் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த பரபரப்புகள் அடங்கும் முன்பு மீண்டும் ஒரு வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட நிகழ்வு மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


தொடரும் கொள்ளை சம்பவங்கள் - பதட்டத்தில் பொதுமக்கள்..! எங்கே தெரியுமா?

மீண்டும் கொள்ளை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விளந்திட சமுத்திரம் ரத்தினாம்பாள் நகரை சேர்ந்தவர் 37 வயதான ரகுராமன். அபுதாபி நாட்டில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 36 வயதான மனைவி மஞ்சுளா மற்றும் 2 மகள்கள் உள்ளனர். மஞ்சுளா மயிலாடுதுறையில் உள்ள தாய் வீட்டில் மகள்களுடன் தங்கி பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். விடுமுறை நாட்களில் மட்டும் சீர்காழி வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். பொங்கல் விடுமுறையில் சீர்காழி வீட்டில் தங்கி விட்டு கடந்த 19-ம் தேதி மயிலாடுதுறைக்கு சென்றுள்ளனர். 


தொடரும் கொள்ளை சம்பவங்கள் - பதட்டத்தில் பொதுமக்கள்..! எங்கே தெரியுமா?

சிசிடிவி கேமரா பதிவுகள் அழிப்பு 

இந்நிலையில் நேற்று காலை 5 மணிக்கு வெளிநாட்டில் உள்ள ரகுராமன் தனது வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா செயல்படவில்லை என மஞ்சுளாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து உடனடியாக வீட்டிற்கு சென்று பார்க்க மனைவியிடம் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து மஞ்சுளா சீர்காழியில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவுகள் திறந்து கிடப்பதையும், சிசிடிவி கேமராக்கள் உடைந்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோல்கள் உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 25 சவரன் தங்க நகைகள், 2 லேப்டாப்புகள், சிசிடிவி கேமரா பதிவு எந்திரம் ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.


தொடரும் கொள்ளை சம்பவங்கள் - பதட்டத்தில் பொதுமக்கள்..! எங்கே தெரியுமா?

காவல்துறையினர் விசாரணை 

உடனடியாக இதுகுறித்து மஞ்சுளா சீர்காழி காவல்நிலையத்தில் புகார் அளிக்க, அந்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து 2 தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள மற்ற சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் கொள்ளையர்கள் விட்டுச் சென்ற பொருட்களை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old pension scheme: மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு .? அமைச்சர்கள் குழு இன்று முக்கிய முடிவு
மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு .? அமைச்சர்கள் குழு இன்று முக்கிய முடிவு
US Visa: ஊர்காரங்கள கல்யாணம் பண்ணா மட்டும் போதுமா? க்ரீன் கார்ட்களுக்கு ஆப்படித்த அமெரிக்கா, புது ரூல்ஸ்
US Visa: ஊர்காரங்கள கல்யாணம் பண்ணா மட்டும் போதுமா? க்ரீன் கார்ட்களுக்கு ஆப்படித்த அமெரிக்கா, புது ரூல்ஸ்
Crime: வீட்டுக்கு வா..! காதலியை நம்பி சென்ற காதலன், மர்ம உறுப்பை துண்டித்த 25 வயது பெண், நடந்தது என்ன?
Crime: வீட்டுக்கு வா..! காதலியை நம்பி சென்ற காதலன், மர்ம உறுப்பை துண்டித்த 25 வயது பெண், நடந்தது என்ன?
Bharat Taxi Fare: கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old pension scheme: மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு .? அமைச்சர்கள் குழு இன்று முக்கிய முடிவு
மீண்டும் பழைய ஓய்வூதியம்.! அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு .? அமைச்சர்கள் குழு இன்று முக்கிய முடிவு
US Visa: ஊர்காரங்கள கல்யாணம் பண்ணா மட்டும் போதுமா? க்ரீன் கார்ட்களுக்கு ஆப்படித்த அமெரிக்கா, புது ரூல்ஸ்
US Visa: ஊர்காரங்கள கல்யாணம் பண்ணா மட்டும் போதுமா? க்ரீன் கார்ட்களுக்கு ஆப்படித்த அமெரிக்கா, புது ரூல்ஸ்
Crime: வீட்டுக்கு வா..! காதலியை நம்பி சென்ற காதலன், மர்ம உறுப்பை துண்டித்த 25 வயது பெண், நடந்தது என்ன?
Crime: வீட்டுக்கு வா..! காதலியை நம்பி சென்ற காதலன், மர்ம உறுப்பை துண்டித்த 25 வயது பெண், நடந்தது என்ன?
Bharat Taxi Fare: கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
கேப் டிரைவர்கள், பயணிகளுக்கு ஜாக்பாட்.! இன்று முதல் 'பாரத் டேக்ஸி'; கட்டணம் இவ்வளவுதானா.?!
Chennai Metro Rail: வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயிலில் எப்போது பயணிக்கலாம்.? சென்னை மக்களுக்கு குஷியான தகவல் இதோ
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயிலில் எப்போது பயணிக்கலாம்.? சென்னை மக்களுக்கு குஷியான தகவல் இதோ
Bangladesh Attack on Hindu: இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
Zelensky Vs Putin: “200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
“200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
Embed widget