மேலும் அறிய

இதைவிட ஒரு நிர்வாகத் திறமையின்மை இருக்க முடியுமா? மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே உச்சக்கட்ட கொடுமை!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே உள்ள அம்மா உணவக சமையலறைக்குள் பாதாள சாக்கடை கழிவுநீர் குளம் போல் புகுந்ததால், பொதுமக்கள் துர்நாற்றத்தில் மூக்கை மூடியபடி உணவருந்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் ஏழைகளின் அமுதசுரபியான ‘அம்மா உணவகம்’, அதிகாரிகளின் அலட்சியத்தால் தற்போது நோய் பரப்பும் கூடாரமாக மாறியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உணவகத்தின் சமையல் கூடத்திற்குள்ளேயே பாதாள சாக்கடை கழிவுநீர் குளம் போல் குபுகுபுவெனப் பொங்கி வழிந்ததால், சமையல் பணியாளர்களும், உணவு அருந்த வந்த பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.

சமையலறையைச் சூழ்ந்த சாக்கடை: அதிர்ச்சியில் பணியாளர்கள்

மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் வந்து செல்கின்றனர். இவர்களின் பசிப்பிணியைப் போக்கும் நோக்கில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவமனை வளாகத்தின் அருகே அம்மா உணவகம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பாதாள சாக்கடை அடைப்புப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் உச்சக்கட்டமாக, இன்று அரசு மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பாதாள சாக்கடைக் கழிவுநீர், அடைப்பு காரணமாக அம்மா உணவகத்தின் சமையல் கூடத்திற்குள் புகுந்தது. சமையலறை முழுவதையும் சாக்கடை நீர் சூழ்ந்ததால், அசுத்தமான சூழலில், மிகுந்த மனவேதனையுடனும் முகச்சுழிப்புடனும் பணியாளர்கள் சமைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

மூக்கை மூடிக்கொண்டு சாப்பிடும் அவலம்!

சாக்கடை நீர் சமையலறைக்குள் புகுந்தது மட்டுமன்றி, பொதுமக்கள் அமர்ந்து சாப்பிடும் இடம் வரை நாரடித்தது. இதனால், பசியோடு உணவருந்த வந்த ஏழை எளிய மக்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள், வேறு வழியின்றி தங்களின் மூக்கைப் பொத்திக்கொண்டே சாப்பிடும் அவலக் காட்சிகள் அரங்கேறின. இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி, பார்ப்போரை நெஞ்சம் பதற வைக்கிறது.

இது குறித்து அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கூறுகையில்,

"சமையல் கூடம் முழுவதும் மலம் மற்றும் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால், மேற்கொண்டு இங்கு சமைக்கவே முடியாத ஒரு மோசமான சூழல் உருவாகியுள்ளது. துர்நாற்றத்திற்கு நடுவே தீராத மன உளைச்சலுடன் வேலை செய்து வருகிறோம்" என வேதனை தெரிவித்தனர்.

நகராட்சி, மாவட்ட நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு

அம்மா உணவகத்தின் உள்ளே மட்டுமன்றி, வெளியில் உள்ள பிரதான சாலைகளிலும் பாதாள சாக்கடை நீர் ஆறாக ஓடுகிறது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடமும், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்திடமும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் இதுவரை எந்தவொரு ஆக்ஷனும் எடுக்காமல் கும்பகர்ண தூக்கத்தில் ஆழ்ந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கழிவுநீர் தேங்குவதால் அப்பகுதி முழுவதும் கொசுக்கள் உற்பத்தியாகி, டைபாய்டு, டெங்கு போன்ற உயிர்க்கொல்லித் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

முதலமைச்சரின் அறிவிப்பு என்னாச்சு? - பொதுமக்கள் குமுறல்

அம்மா உணவகத்தில் மூக்கை மூடியபடியே உணவருந்திய நோயாளி ஒருவரின் உறவினர் ஆவேசமாகப் பேசுகையில்; "தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்கள் அனைத்தும் மேலும் சீரமைக்கப்பட்டு, நவீனமயமாக்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். ஆனால், மயிலாடுதுறையிலோ முதலமைச்சரின் அறிவிப்புக்கு நேர்மாறாக, சாக்கடை நீரில் ஏழைகளின் உணவு தயாராகும் அவல நிலை நீடிக்கிறது. பசியைப் போக்க வந்தால், எங்களுக்குத் தொற்றுநோய் தான் பரிசாகக் கிடைக்கும் போலிருக்கிறது. தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு, இந்த அவல நிலையை மாற்றி, ஏழைகள் நிம்மதியாக உணவருந்த வழிவகை செய்ய வேண்டும்," என்று கொதிப்புடன் தெரிவித்தார்.

ஏழைகளின் பசியாற்றும் ஒரு பொது உணவுக்கூடத்தில் இத்தகைய சுகாதாரச் சீர்கேடு நிலவுவது, மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகத்தின் நிர்வாகத் திறமையின்மையையே தோலுரித்துக் காட்டுகிறது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, சாக்கடை அடைப்பை நீக்கி, அம்மா உணவகத்தைச் சுத்தப்படுத்த உத்தரவிடுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலுடன் பிறந்த 9 மணி நேர சிசுவை கொன்று ஏரியில் வீசிய தாய்
கள்ளக் காதலுடன் பிறந்த 9 மணி நேர சிசுவை கொன்று ஏரியில் வீசிய தாய்
விழுப்புரம் அருகே கொடூர விபத்து: அடுத்தடுத்து மோதி அப்பளம் போல் நொறுங்கிய 3 கார்கள்....
விழுப்புரம் அருகே கொடூர விபத்து: அடுத்தடுத்து மோதி அப்பளம் போல் நொறுங்கிய 3 கார்கள்....
பிறந்த 24 மணி நேரக் குழந்தையை ஏரியில் மூழ்கடித்துக் கொன்ற தாய் கைது! தாய், கள்ளக்காதலன் கைது!
பிறந்த 24 மணி நேரக் குழந்தையை ஏரியில் மூழ்கடித்துக் கொன்ற தாய் கைது! தாய், கள்ளக்காதலன் கைது!
பெயிலில் வந்த போக்சோ கைதி..! மனைவி, 4 வயது & 18 மாத மகன்கள், 17 வயது சிறுமி, மூதாட்டி - 6 பேர் கொடூர கொலை
பெயிலில் வந்த போக்சோ கைதி..! மனைவி, 4 வயது & 18 மாத மகன்கள், 17 வயது சிறுமி, மூதாட்டி - 6 பேர் கொடூர கொலை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
TVK Vijay: செந்தில் பாலாஜியை வச்சுகிட்டு ஊழல் பத்தி பேச கூச்சமே இருக்காதா? - திமுகவை சாடிய தவெக!
Senthil Balaji: கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
கேள்வியை கூட ஒளிஞ்சிட்டு கேட்டா எப்படி கரூர் கம்பெனி ஓனரே? - செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
Embed widget