மேலும் அறிய

போலீஸ் மனைவி, 2 வயது குழந்தை கொடூர கொலை.. ஆத்திரத்தில் இளைஞர் வெறிச்செயல்... நடந்தது என்ன?

புனேவில் 2 வயது பெண் குழந்தை மற்றும் போலீஸ் வேலை பார்த்த மனைவியை கணவனே கொடூரமாக குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது புனே மாவட்டம். மிகவும் முக்கியமான மாவட்டமான இங்குள்ளது சிக்லி கிராமம். பிம்ப்ரி – சிஞ்ச்வாத் தாலுகாவிற்கு உட்பட்ட இந்த கிராமத்தில் வசித்து வருபவர் வர்ஷா. இவர் சிக்லி காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரியாக பொறுப்பு வகித்து வந்தார்.

வர்ஷாவின் கணவர் கிஷோர். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகளுக்கு 8 வயதும், மற்றொரு மகளுக்கு 2 வயதும் ஆகும். வர்ஷாவிற்கும் அவரது கணவர் கிஷோருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

மனைவி, மகள் குத்திக்கொலை:

இந்த நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் இடையே நேற்றும் வழக்கம்போல சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டைக்கு பிறகு வர்ஷா பணிக்கு சென்றுவிட்டார். பின்னர், பணியில் இருந்து நேற்று இரவு வர்ஷா வீடு திரும்பியுள்ளார். வீட்டில் அவர்களது மகள் உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.  

காலையில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக கிஷோர் மிகவும் ஆத்திரமாக இருந்துள்ளார். இந்த சூழலில்,வர்ஷா பணியில் இருந்து திரும்பிய சூழலில், கிஷோர் கையில் கூர்மையான கத்தியுடன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த வர்ஷாவை தன் கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்தார் கிஷோர். மேலும், ஆத்திரத்தில் பெற்ற மகள் என்றும் பாராமல் தனது 2 வயது மகளையும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

கணவன் தற்கொலை:

பின்னர், தன்னுடைய மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள கங்கல்காவ்ன் கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில், சடலம் தொங்குவதை கண்ட அந்த பகுதி போலீசார் அது யார்? என்று குழப்பம் அடைந்துள்ளனர். பின்னர், மோட்டார்சைக்கிள் எண்ணை கொண்டு விசாரித்தபோது அது கிஷோர் என்றும், தனது மனைவி மற்றும் மகளை கொலை செய்த குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்திருப்பதும் தெரியவந்தது.  

இந்த சோகத்திலும் அதிர்ஷ்டவசமாக அவர்களது 8 வயது மகள் பள்ளி சென்றிருந்ததால் அவர் உயிர்பிழைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனே தனது மனைவி மற்றும் 2 வயது மகளை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

மேலும் படிக்க: Crime: போலீஸ் அதிகாரிகள் போல நடித்து நகை பறித்த கும்பல் கைது ; கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மேலும் படிக்க: Crime: "தண்ணி வேணுமா.. இந்தா சிறுநீரை குடி.." பட்டியலின இளைஞரை தாக்கி அராஜகம் செய்த போலீஸ் எஸ்.ஐ..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Crime: சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Crime: சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
Embed widget