மேலும் அறிய

6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா

மாநிலப் பாடத்திட்டத்தில் 6-ம் வகுப்பு முதலே மாணவர்களுக்கு ஏஐ குறித்த அடிப்படை அறிவைக் கற்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில அரசு, பள்ளி மாணவர்களுக்காக 6-ம் வகுப்பு முதலே செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ கல்வியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அத்துடன், இந்தியாவின் முதல் அரசால் நிர்வகிக்கப்படும் செயற்கை நுண்ணறிவுப் பல்கலைக்கழகத்தை (AI University) அமைக்க உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

6-ம் வகுப்பு முதல் ஏஐ கல்வி

உலகளவில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மாணவர்களை எதிர்காலத்திற்குத் தயார்படுத்தும் நோக்கில் கர்நாடக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இதன்படி, மாநிலப் பாடத்திட்டத்தில் 6-ம் வகுப்பு முதலே மாணவர்களுக்கு ஏஐ குறித்த அடிப்படை அறிவைக் கற்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆரம்பக் கட்டத்திலேயே தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதன் மூலம், மாணவர்களின் பகுப்பாய்வுத் திறன் மேம்படும் என்றும், எதிர்கால வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஏற்ப அவர்கள் தங்களைத் முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அரசு கருதுகிறது.

இந்தியாவின் முதல் அரசு ஏஐ பல்கலைக்கழகம்

பள்ளிக் கல்வியோடு மட்டுமின்றி, உயர்கல்வியிலும் ஏஐ தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, நாட்டிலேயே முதல்முறையாக மாநில அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கும் பிரத்யேக 'செயற்கை நுண்ணறிவுப் பல்கலைக்கழகம்' கர்நாடகாவில் நிறுவப்பட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் வெளியிட்டார்.

இந்த நவீன பல்கலைக்கழகம், ஏஐ தொழில்நுட்பம் சார்ந்த கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு பிரதான முக்கியத்துவம் அளித்துச் செயல்படும்.

திட்டத்தின் நோக்கம்

பெங்களூரு நகரம் இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப மையமாக (ஐடி ஹப்) திகழும் நிலையில், அந்த அந்தஸ்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள இந்த புதிய முன்னெடுப்புகள் உதவும் என கர்நாடக அரசு நம்புகிறது.

கல்வி நிறுவனங்கள் வழங்கும் கல்விக்கும், தற்போதைய தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறன்களுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்தத் திட்டங்களின் மூலம், தொழில்நுட்பத் துறையில் கர்நாடகா தொடர்ந்து முன்னிலையில் இருப்பதுடன், இளைஞர்களுக்கு ஏஐ சார்ந்த புதிய வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
100% தேர்ச்சி தான் டார்கெட்; லீவு போடும் மாணவர்களைக் கண்காணியுங்கள்! - கல்வித்துறையினருக்கு கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு!
100% தேர்ச்சி தான் டார்கெட்; லீவு போடும் மாணவர்களைக் கண்காணியுங்கள்! - கல்வித்துறையினருக்கு கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
US Iran War: ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ஐய்யய்யோ.! “மத்திய கிழக்கில் மொத்த எரிபொருள் ஏற்றுமதியும் ஸ்தம்பிக்கும்“; ஈரானின் IRGC வார்னிங்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
பதின்ம வயதுப் பெண்களே உஷார்! ரத்த சோகையை சரிசெய்வது எப்படி? மருத்துவர் எச்சரிக்கை
பதின்ம வயதுப் பெண்களே உஷார்! ரத்த சோகையை சரிசெய்வது எப்படி? மருத்துவர் எச்சரிக்கை
Embed widget