மேலும் அறிய

14 வயது சிறுமிக்கு திருமண ஆசைக்காட்டி வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை

’’பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தீர்ப்பு வந்த 30 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் 5 லட்சம் அரசு சார்பில் நஷ்ட ஈடு தொகையை வழங்கவும் நீதிபதி உத்தரவு’’

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே செவ்வேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியன் மகன் சின்னதுரை (22) தொழிலாளி. இவர் 10ஆம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி வந்தார். மேலும் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019 ஆண்டு  அன்று அந்த சிறுமியை, சின்னதுரை மற்றும் அவரது நண்பர்கள் கீழ்ஆதனூர் மாயவேல், செவ்வேரியை சேர்ந்த பிரதாப், சரத்பாபு ஆகிய 4 பேரும் மோட்டார் சைக்கிளில் கடத்திச்சென்றனர். பின்னர் சின்னதுரையையும், அந்த சிறுமியையும் நண்பர்கள் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் திட்டக்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் தேடி வந்தனர். இதை அறிந்த சின்னத்துரை, அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு தொழுதூருக்கு தப்பிச்சென்று உள்ளனர். இதை நோட்டமிட்ட காவல் துறையினர், அவர்களை பிடித்தனர். பின்னர் அந்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
 

14 வயது சிறுமிக்கு திருமண ஆசைக்காட்டி வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை
 
இதையடுத்து சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சின்னதுரை மீதும், அதற்கு உடந்தையாக இருந்ததாக மாயவேல், பிரதாப், சரத்பாபு ஆகிய 4 பேர் மீதும் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வெகு நாட்களாக நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிமன்றத்தில் இந்த வழக்கிற்கு நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார்.
 

14 வயது சிறுமிக்கு திருமண ஆசைக்காட்டி வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை
 
அவர் தனது தீர்ப்பில், சிறுமியை கடத்திச்சென்ற குற்றத்திற்காக சின்னதுரைக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் இந்த தண்டனையை சின்னதுரை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். சின்னதுரையுடன் கைதான மாயவேல், பிரதாப், சரத்பாபு மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்கள் 3 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறினார். இது தவிர பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, தீர்ப்பு வந்த 30 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் 5 லட்சம் அரசு சார்பில் நஷ்ட ஈடு தொகையை வழங்கவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார். இவ்வழக்கில் அரசு தரப்பின் சார்பாக வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
Breaking News LIVE, July 6: ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சென்னை வருகிறார் மாயாவதி
Breaking News LIVE, July 6: ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சென்னை வருகிறார் மாயாவதி
EPS Annamalai: வாயில் வடை , நம்பிக்கை துரோகி - எடப்பாடி & அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் - குறுக்கே திமுக
EPS Annamalai: வாயில் வடை , நம்பிக்கை துரோகி - எடப்பாடி & அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் - குறுக்கே திமுக
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
Breaking News LIVE, July 6: ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சென்னை வருகிறார் மாயாவதி
Breaking News LIVE, July 6: ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சென்னை வருகிறார் மாயாவதி
EPS Annamalai: வாயில் வடை , நம்பிக்கை துரோகி - எடப்பாடி & அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் - குறுக்கே திமுக
EPS Annamalai: வாயில் வடை , நம்பிக்கை துரோகி - எடப்பாடி & அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் - குறுக்கே திமுக
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
UEFA Euro 2024: யூரோ கோப்பை..ஜெர்மனியை வீழ்த்தி அசத்தல்.. அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் அணி தகுதி!
UEFA Euro 2024: யூரோ கோப்பை..ஜெர்மனியை வீழ்த்தி அசத்தல்.. அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் அணி தகுதி!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Chennai Power Shutdown : சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம்.. எங்கு எங்கு தெரியுமா ?
Chennai Power Shutdown : சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம்.. எங்கு எங்கு தெரியுமா ?
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
Embed widget