மேலும் அறிய

Crime : திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் திட்டமிட்டு கொலை; சிசிடிவியால் சிக்கிய கொலையாளி

வண்டியை மாற்றி எடுத்துக் கொண்டு நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் மாற்றி ஒட்டிக் கொண்டு ஜெகதீஸ்வரி வீட்டிற்கு வந்து கொலை செய்ததும், திருடிய நகையை அடமானத்தில் வைத்து பணம் பெற்றதும் தெரியவந்தது.

கோவை விளாங்குறிச்சி சேரன் மாநகர் பகுதியில் உள்ள பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. 44 வயதான இவர் பெயிண்டிங் காண்ட்ராக்டராக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெகதீஸ்வரி (41), இவர்களது மகள் கார்த்திகா பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் மாலை மகள் கார்த்திகாவை பள்ளியில் இருந்து 4.30 மணியளவில் ஜெகதீஸ்வரி வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 28ம் தேதியன்று மாலை 5.30 மணிக்கு மேலாகியும் ஜெகதீஸ்வரி அழைத்துச் செல்ல வரவில்லை என்பதால், கார்த்திகா வீட்டிற்கு நடந்து வந்துள்ளார்.

அப்போது வீட்டின் படுக்கை அறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், பீளமேடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜெகதீஸ்வரி கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும், 4 சவரன் தங்க சங்கிலி உள்ளிட்ட 5 1/2 சவரண் நகை திருடப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சக்கரவர்த்தி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வந்தனர்.


Crime : திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் திட்டமிட்டு கொலை; சிசிடிவியால் சிக்கிய கொலையாளி

இந்நிலையில் காவல் துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில் பந்தயசாலை பகுதியில் சூப் கடை வைத்து நடத்தி வரும் மோகன்ராஜ் (33) என்பவர் அவரது வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ஜெகதீஸ்வரி உடன் மோகன்ராஜ் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்ததும், அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஜெகதீஸ்வரியை கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும் மோகன்ராஜ் வீட்டில் இருந்து புல்லட்டில் கிளம்பிய நிலையில்,  வரும் வழியில் வண்டியை மாற்றி ஆக்டிவா வண்டியை எடுத்துக் கொண்டு நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் மாற்றி ஒட்டிக் கொண்டு ஜெகதீஸ்வரி வீட்டிற்கு வந்து திட்டமிட்டு கொலை செய்ததும், திருடிய நகையை அடமானத்தில் வைத்து பணம் பெற்றதும் தெரியவந்தது. இதையடுத்து மோகன்ராஜை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த உதவி ஆணையர் பார்த்திபன், “இந்த கொலை சம்பவத்தில் குற்றவாளியை பிடிக்க சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளே உதவியது. சேரன் மாநகர், கணபதி, அவினாசி சாலை, பந்தயசாலை உள்ளிட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பின்னோக்கி தொடர்ந்து பார்வையிட்டு வந்தோம். பந்தய சாலையில் இருந்து கிளம்பிய நபர் ஒரு கடையில் கிளவுஸ் வாங்கிக்கொண்டு ரெட் பீல்டு வழியாக வந்து வண்டியில் நம்பர் பிளேட் எண்ணை மாற்றிக் கொண்டும், வண்டியை மாற்றி வந்ததும் தெரியவந்தது. மோகன்ராஜ் மற்றும் உயிரிழந்த ஜெகதீஸ்வரி இவருக்கும் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்துள்ளனர். ஜெகதீஸ்வரி மற்றவர்களிடம் பேசுவது பிடிக்காத காரணத்தினால் மோகன்ராஜ் கொலை செய்துள்ளார். மோகன்ராஜ் மீது கொலை வழக்கு சேலத்தில் உள்ளது. இவர்களின் தொடர்பு குறித்து யாருக்கும் தெரியவில்லை. கொலைக்கு பயன்படுத்திய இரண்டு வாகனங்கள் மற்றும் திருடிய நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்?  அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
செங்கோட்டையனை கழற்றிவிட்ட ஈபிஎஸ்? அதிமுகவில் வெடித்த பூகம்பம்!
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
BSNL: பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ள புதிய வாய்ஸ் ஒன்லி ரீசார்ஜ் திட்டம் - எவ்வளவு தெரியுமா?
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
தமிழ்நாட்டில் நடக்கும் அநியாயத்தைப் பாருங்க! யாரு இந்தியை திணிக்குறாங்க? அண்ணாமலை ஆவேசம்
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
Annamalai: இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக அரசை கிழித்த அண்ணாமலை
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா...கங்கையில் நீராடி பிரார்த்தனை
மகா கும்பமேளாவில் குடும்பத்துடன் விஜய் தேவரகொண்டா...கங்கையில் நீராடி பிரார்த்தனை
WPL 2025 RCB VS DC : இறுதி போட்டியில் தோல்வி.. பழிதீர்க்குமா டெல்லி கேபிடல்ஸ்! பெங்களூருவுடன் மோதல்..
WPL 2025 RCB VS DC : இறுதி போட்டியில் தோல்வி.. பழிதீர்க்குமா டெல்லி கேபிடல்ஸ்! பெங்களூருவுடன் மோதல்..
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.