மேலும் அறிய

அரசு அதிகாரியிடம் ரூ.49 லட்சம் மற்றும் நகை மோசடியில் ஈடுபட்ட நபர் கைது.. நடந்தது என்ன?

சென்னையில் பெண் அதிகாரியிடம் ரூ.49 லட்சம் மற்றும் 51 பவுன் நகையை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னையில் பெண் அதிகாரியிடம் ரூ.49 லட்சம் மற்றும் 51 பவுன் நகையை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை வில்லிவாக்கத்தில் வளர்மதி (57) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளர் துறையில் உதவி ஆணையராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில், "கடந்த 2009-ஆம் ஆண்டு வளர்மதி அண்ணா நகரில் ஆய்வாளராகப் பணியாற்றியபோது, திருவொற்றியூரைச் சேர்ந்த கணேஷ்குமார் அறிமுகமானார். தங்களுக்கு தெரிந்த நிறுவனங்களில் அறிமுகம் செய்து வைத்தால் தொழிலாளர் தொடர்பான வேலைகளை அந்த நிறுவனங்களுக்கு செய்து கொடுத்து வருவாய் ஈட்டி கொள்வேன் என தெரிவித்தார்.

இதன் பிறகு தம்பிபோல அவரை கருதி வந்தேன். இந்நிலையில், வீட்டுக்கடனை அடைப்பதற்காக வெளியில் வாங்கிய ரூ.40 லட்சம் மற்றும் வங்கியில் வாங்கிய கடன்  ரூ.9 லட்சம் என மொத்தம் ரூ.49 லட்சம் கணேஷ் குமாரிடம் கொடுத்து வைத்திருந்தேன். இதனிடையே, கணேஷ் குமார் வீடு புகுந்து 60 பவுன் நகையையும் எடுத்துச் சென்றுவிட்டார்.

இந்தப் பணத்தையும், நகையையும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருப்பி கேட்டபோது கணேஷ் குமார் அதை வைத்து இடம் மற்றும் வீடு வாங்கிவிட்டேன் என தெரிவித்தார். 6 மாதங்களுக்குள் இந்தப் பணத்தை தந்துவிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் பின்னர் அவர் திருப்பி தராமல் இது நாள் வரை மோசடியாக ஏமாற்றி வருகிறார். எனவே, கணேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதிகாரி வளர்மதி அந்தப் புகார் மனுவில் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக வில்லிவாக்கம் போலீஸார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர் ஏமாற்றியது உறுதியானது.  இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வளர்மதியின் ரூ.49 லட்சம் பணம் மற்றும் நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கணேஷ்குமார் போலீஸ் விசாரணையின்போது ஏற்கனவே 9 பவுன் நகைகளை திருப்பி கொடுத்திருப்பதாகவும், மீதமுள்ள 51 பவுன் நகைகளையும், பணத்தையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவு பேரில் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தலைப்பு செய்திகள்

பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
திண்டிவனத்தில் முதியவரிடம் ஏடிஎம் கார்டை மாற்றி மோசடி: 100-க்கும் மேற்பட்ட போலி கார்டுகளுடன் ஆந்திர வாலிபர் கைது!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget