மேலும் அறிய

மதுரையில் பரபரப்பு; வடமாநில தொழிலாளியை  குத்திக் கொன்று செல்போன் பறிப்பு

தோப்பூர் எய்ம்ஸ் அலுவலகம்  அருகே வடமாநில தொழிலாளியை  குத்திக் கொலை செய்து செல்போன் பறித்துச் சென்ற மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு - மற்றொரு தொழிலாளி காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அலுவலகம் அருகே சாலையோரம் நடந்து சென்ற வட மாநில தொழிலாளரை கத்தியால் குத்தி கொலை செய்து செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் செல்போன் பறிப்பில் நடந்த தகராறில் மற்றொரு தொழிலாளி பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பிரச்னை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்  அருகே ஆஸ்டின்பட்டி நெஞ்சக மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் 20க்கும் மேற்பட்ட வடமாநில கட்டிட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வரும் பீகார்  மாநிலம் சுபேல் மாவட்டத்தை  சுபாஷ்குமார் 18, பீகாரை சேர்ந்த சன்னி 21 இருவரும்  இரவு உணவு சமைப்பதற்காக அருகில் உள்ள கூத்தியார் குண்டு விலக்கில் உள்ள மளிகை கடையில்  பொருட்களை வாங்கிக் கொண்டு சாலையில் நடந்து சென்றுள்ளனர்.

மதுரையில் பரபரப்பு; வடமாநில தொழிலாளியை  குத்திக் கொன்று செல்போன் பறிப்பு
 
எய்ம்ஸ் அலுவலகம் அருகே வந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் வடமாநில தொழிலாளிகள் இருவரையும் வழிமறித்து செல்போனை பறித்து சென்றுள்ளனர். சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த இருவரும் செல்போன் பறித்துச் சென்றவர்களை துரத்தி பிடித்து சண்டையிட்டுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் முற்றியதால்  மர்ம நபர்கள் திடீரென கத்தியை எடுத்து இருவரையும் இடது பக்க மார்பில் குத்திவிட்டு அவர்களிடமிருந்த செல்போனை பறித்துசென்றுள்ளனர். கத்திக்குத்து பட்ட வடமாநில தொழிலாளி சுபேஷ்குமார் பரிதாபமாக துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு நபரான சன்னி பலத்த  காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்தார். அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து உடனடியாக  போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து  சம்பவ இடத்திற்கு வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் காயமடைந்த சன்னியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுனில்  மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

மதுரையில் பரபரப்பு; வடமாநில தொழிலாளியை  குத்திக் கொன்று செல்போன் பறிப்பு
 
தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரணை செய்த போலீசார் ஆதாயக் கொலை வழக்கு பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மதுரை சரக டி.ஐ.ஜி ரம்யா பாரதி, மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத் விசாரணை மேற்கொண்டு தப்பி ஓடிய குற்றவாளிகளை விரைந்து பிடிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டனர். சாலையோரம் நடந்து சென்ற வட மாநில தொழிலாளர்களின் செல்போனை பறித்துச் சென்ற போது நடந்த தகராறில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
Embed widget