மேலும் அறிய

அரை போதை ஆயில் மசாஜ் ஏசி... ‛பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு’ கேட்டதால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

‛பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு...’ இப்படி காட்டு காட்டுனு காட்டிடுச்சேனு புலம்பி வரும் சோமசுந்தரம்... இனி சோமபானத்தை தொடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். 

‛பேசி பேசி ராசியானதே... மாமன் பேரை சொல்லிச் சொல்லி ஆளானாதே... ரொம்ப நாளானதே...’ இந்த வரிகள் தான், இன்று ஒரு போலீஸ் உயர் அதிகாரியைப் பற்றி வரிவரியாய் எழுத காரணமாகியிருக்கிறது. குடிபோதையில் இருப்பது தவறு, அதே நேரத்தில் அரை நிர்வாணத்தில் இருப்பது அதை விட தவறு... அதை விட தவறு... குடிபோதையில், அரை நிர்வாணத்துடன் ‛பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு...’ பாடலை ஒருவரை புல்லாங்குழல் இசைக்கச் செய்து கேட்பது. ஒருவர் இத்தனை தவறை செய்ய முடியுமா? அதுவும் அவர் ஒரு போலீஸ்காரர் என்றால் நம்ப முடிகிறதா? நம்பித்தால் ஆக வேண்டும்... ஏன் என்றால்... சம்மந்தப்பட்ட போலீஸ் உயர் அதிகாரி சோமசுந்தரம்... அத்தனைக்கும் அப்பாற்பட்டவர்.


அரை போதை ஆயில் மசாஜ் ஏசி... ‛பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு’ கேட்டதால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

மதுரை ஆயுதப்படையின் துணை ஆணையர் சோமசுந்தரம். பெயரோ... மங்களகரமானது. ஆனால் செய்யும் வேலைகள் எப்போதும் அதற்கு ஏற்றார் போல் இருந்தது இல்லை. மதுரையில் முன்பு உதவி கமிஷனராக இருந்த போது ‛டிக்டாக்’ செய்து சர்சையில் சிக்கியவர். அப்புறம் அதுக்காக ஏதாவது ஒரு தண்டனை பெறுவது, அப்புறம் வேறு ஒரு பகுதிக்கு வேலைக்குச் செல்வது, இப்படியே காலங்கள் கடந்து மதுரைக்கு அடுத்ததாக தூத்துக்குடி, சென்னை என தமிழ்நாட்டை ஒரு சுற்று சுற்றிவிட்டு, பதவி உயர்வுகளையும் பெற்று விட்டு, மீண்டும் மதுரைக்கே வந்து சேர்ந்தார் சோமசுந்தரம். 

சோமசுந்தரம் ஒரு கலா ரசிகர். அதுவும் மது போதை ஏறிவிட்டால், தலைவரை கையில் பிடிக்க முடியாது. அப்படி தான் சில நாட்களுக்கு முன், நல்ல போதையை ஏற்றிக் கொண்ட சோமசுந்தரத்திற்கு, மஜாஜ் செய்யும் எண்ணம் வந்தது. உடனே ஆடைகளை அவிழ்த்து அரை நிர்வாணமாக ஆயுதப்படை வளாகத்தில் ஆயில் மஜாஜ் செய்து கொண்டார். தனது கட்டுடலை மிடுக்காக வைத்துக் கொள்வதாக நினைத்து, தொந்தியும் தொப்பையுமாய் உடல் முழுக்க எண்ணெய் காப்பு நடத்திய அவர், நாற்காலியில் அமர்ந்து கொண்டார். நம்ம ஆளு தான் கலா ரசிகராச்சே... உடனே அவருக்கு ஒரு கலை தாகம் எடுத்தது. தனக்கு கீழ் பணியாற்றும் போலீஸ்காரர் ஒருவர் நன்கு புல்லாங்குழல் வாசிப்பார் என்பதை அறிந்த சோமசுந்தரம், ‛அந்த கலைஞரை அழைத்து வாருங்கள்...’ என உத்தரவிட்டுள்ளார். 


அரை போதை ஆயில் மசாஜ் ஏசி... ‛பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு’ கேட்டதால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

புல்லாங்குழலுடன் அந்த போலீஸ்காரர் வந்து சேர, ‛ம்... நடக்கட்டும்...’ என உத்தரவிட்டார் சோமசுந்தரம். ‛என்னப்பாட்டய்யா...’ என போலீஸ்காரர் கேட்க, ‛நம்ம பாட்டுத்தான்...’ என சோமசுந்தரம் கூற, தேவர் மகன் சீன் போன்று அந்த இடத்தில் கலை கரை புரண்டோடியுள்ளது. சோமசுந்தரத்தின் கோரிக்கையை ஏற்று, பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு பாடவலை போலீஸ்காரர் வாசிக்க... முழு போதையில் சோமசுந்தரம் அதை நேசிக்க... உடலில் ஆயில் வடிந்ததைப் போல... இசையும் வடிந்து ஓடியது. இசை ஆழமாய் போய்க்கொண்டிருக்க... ஆப் பாட்டில் குவாட்டராய் குறைந்தது. பாட்டு முடிவதற்குள் பாட்டிலும் முடிந்துள்ளது. 

இது தொடர்பான செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட துணை ஆணையர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, அவர் மீதான தவறு நிரூபிக்கப்பட்டது. அப்புறம் என்ன... வந்த இடத்துக்கே போனு... சென்னை ஆயுதப்படைக்கு கலா ரசிகர் சோமசுந்தரம் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ‛நான் போகாதா... ஊரா...’ என்பது போல சோமசுந்தரம் இதை எடுத்துக் கொள்வார் என்பதால், கூடவே காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டுள்ளார். ‛பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு...’ இப்படி காட்டு காட்டுனு காட்டிடுச்சேனு சோமசுந்தரம்... இனி சோமபானத்தை தொடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Embed widget