மேலும் அறிய

மக்களே உஷார்! பீட்சா நிறுவனம் பெயரை கூறி லட்சக்கணக்கில் பண மோசடி! - வெளியான அதிர்ச்சி தகவல்

 குற்றம் சாட்டப்பட்ட உணவு நிறுவனம் இந்தியா மட்டுமல்லாது நேபாளம், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பீட்சாவுக்கு முதன்மை உரிமையாளர்களைக் கொண்ட நிறுவனம் (master franchise) என்பது குறிப்பிடத்தக்கது. 

உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவில் பீட்சா நிறுவனத்தில் பேரில்  போலி வலைத்தளத்தை உருவாக்கி மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.  உ.பியில் அமைந்துள்ள நொய்டா  தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் தலைநகரம் என அழைக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்  ஐடி இளைஞர்கள் , நொய்டாவில் முகாமிட்டுள்ளனர்.பரப்பரபாக இயங்கும் நொய்டாவில் , ஃபாஸ்ட் புட் கடைகளுக்கும், உணவகங்களுக்கும் பஞ்சமே இல்லை. குறிப்பாக அங்கு பீட்சா கடைகள் ஏராளம். இந்த நிலையில் பிரபல பீட்சா நிறுவனம் பேரில் போலி இணையதளம் ஒன்றை தொடங்கிய மர்ம நர்கள், போலி மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்கள் மூலம் மக்களை தொடர்புக்கொண்டு வெளிநாட்டு உரிமத்தை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு சம்பந்தப்பட்ட உணவு நிறுவனத்தை  பணம் ஏமாந்த நபர்கள் முற்றுகை இட்டுள்ளனர்.  

அதன் பின்னரே சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு மோசடியின் பின்னணி குறித்து  தெரிய வந்ததாக  கூறப்படுகிறது.  குற்றம் சாட்டப்பட்ட உணவு நிறுவனம் இந்தியா மட்டுமல்லாது நேபாளம், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பீட்சாவுக்கு முதன்மை உரிமையாளர்களைக் கொண்ட நிறுவனம் (master franchise) என்பது குறிப்பிடத்தக்கது.  (முதன்மை உரிமையாளர்கள் என்பவர்கள் அந்த பகுதியில் இயங்கும் கடையில் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வார்கள் . அதன்படி குறிப்பிட்ட பகுதியில் இயங்கும் கடையின் உரிமையை குறிப்பிட்ட தொகை கொடுத்து வாங்குவதன் மூலம் , அதில் கிடைக்கும் லாபத்தில் சில பகுதியை தாங்கள் எடுத்துக்கொள்வார்கள் . கிட்டத்தட்ட இரண்டாம் நிலை owners என வைத்துக்கொள்ளலாம். )

 


மக்களே உஷார்! பீட்சா நிறுவனம் பெயரை கூறி லட்சக்கணக்கில்  பண மோசடி! -  வெளியான அதிர்ச்சி தகவல்

இது குறித்து அறிந்த நொய்டாவின் செக்டார் 16 இல் அமைந்துள்ள சம்பந்தப்பட்ட பீட்சா நிறுவன அதிகாரிகள் , நொய்டாவின் செக்டார் 20 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் தங்கள் நிறுவனத்தின் பெயரில் போலியாக இணைதளத்தை உருவாக்கி மோசடி நடைப்பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வெளிநாட்டில் உள்ள உணவு நிறுவனத்தின் உரிமையை ( franchise) பெற்று தருவதாக கூறி லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. எனவே குற்றவாளிகளை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அறிந்த காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். விரைவில் வழக்கில் தொடர்புடைய  சைபர்  குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இது குறித்து நொய்டா காவல்துறை சைபர் மற்றும் கண்காணிப்பு பிரிவு  இணைந்து விசாரணை நடத்தி வருகிறது.  இப்படி பிரபல பீட்சா நிறுவனத்தின்  வெளிநாட்டு உரிமத்தை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்திருப்பது நொய்டாவின் செக்டார் 16 பகுதிகளில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget