மேலும் அறிய

ஓசூர்: ஊராட்சி மன்ற தலைவர் கொடூர கொலை சம்பவத்தில் 5 பேர் கைது - கிராமத்தில் போலீசார் குவிப்பு

ஒசூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் கொலை சம்பவத்தில் 5 பேர் கைது. பிரேத பரிசோதனைக்கு பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு. கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தாரவேந்திரம் ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக பி.பி.பாளையம் கிராமத்தை சேர்ந்த நரசிம்மமூர்த்தி வயது (46) இருந்து வந்தார். இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட குழு உறுப்பினராக இருந்தார். மேலும் இவர் தற்போது தளி பகுதி கமிட்டி உறுப்பினராக இருந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இரவு அவர் தளி பகுதியில் பொருட்கள் வாங்கு வதற்கு கடைக்கு சென்று பொருட்களை வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது கிராமத்தின் அருகே அவர் வந்தபோது பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கட்டையால் சரமாரியாக நரசிம்மமூர்த்தியை அடித்தனர். இதனால் அந்த கும்பலிடம் இருந்து நரசிம்மமூர்த்தி தப்பித்து செல்ல முயன்றார். அதனைத் தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் நரசிம்மமூர்த்தியை மடக்கி பிடித்து கல்லால் தாக்கி கொலை செய்தனர். பின்னர் அந்த மர்ம நபர்கள் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். 

 


ஓசூர்: ஊராட்சி மன்ற தலைவர் கொடூர கொலை சம்பவத்தில் 5 பேர் கைது -  கிராமத்தில் போலீசார் குவிப்பு

பின்னர் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இந்த கொலை குறித்து தேன்கனிக்கோட்டை காவல்நிலைத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் தேன்கனிக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் கிருத்திகா, தளி ஆய்வாளர் (பொறுப்பு) சம்பூர்ணம் மற்றும் காவலர்கள் என அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட நரசிம்ம மூர்த்தியின் உடலை காவல்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரேத பரிசோதனை காலையில் செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

 


ஓசூர்: ஊராட்சி மன்ற தலைவர் கொடூர கொலை சம்பவத்தில் 5 பேர் கைது -  கிராமத்தில் போலீசார் குவிப்பு

 

மேலும் கொலை சம்பவம் குறித்து தளி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகரும், ஊராட்சி தலைவருமான நரசிம்மமூர்த்தி கொலை செய்யப்பட்டுள்ளதால் தளி அருகே பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் எந்த வித அசம்பாவிதம் ஏற்படாத வகையில் ஏராளமான காவல்துறையினரை பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.ஊராட்சி மன்ற தலைவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்து மக்கள் கட்சி பிரமுகர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி...கோவையில் பரபரப்பு - நடந்தது என்ன..?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

India vs Canada: இந்தியா - கனடா போட்டி.. ஒரு பந்து கூட வீசாமல் ரத்தான ஆட்டம்!
India vs Canada: இந்தியா - கனடா போட்டி.. ஒரு பந்து கூட வீசாமல் ரத்தான ஆட்டம்!
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
"மோடியின் பிம்பத்தை ஸ்வீட் பாக்ஸ் மூலம் Close செய்தவர் ராகுல் காந்தி" முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
"பாஜக கால் ஊன்ற முடியாத மண் தமிழ்நாடுதான்" முப்பெரும் விழாவில் திருமாவளவன் பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Vikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOSSuriya Political Entry | அரசியலில் குதிக்க ரெடி விஜயுடன் மோதும் சூர்யா?உள்ளாட்சி தேர்தலில் போட்டியா?Anti Caste Marriage | சாதி மறுப்பு திருமணம் சூறையாடப்பட்ட CPIM OFFICE நெல்லையில் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India vs Canada: இந்தியா - கனடா போட்டி.. ஒரு பந்து கூட வீசாமல் ரத்தான ஆட்டம்!
India vs Canada: இந்தியா - கனடா போட்டி.. ஒரு பந்து கூட வீசாமல் ரத்தான ஆட்டம்!
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
Breaking News LIVE: 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு மு.க.ஸ்டாலினின் வியூகமே காரணம் - திருமாவளவன் எம்.பி.
"மோடியின் பிம்பத்தை ஸ்வீட் பாக்ஸ் மூலம் Close செய்தவர் ராகுல் காந்தி" முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
"பாஜக கால் ஊன்ற முடியாத மண் தமிழ்நாடுதான்" முப்பெரும் விழாவில் திருமாவளவன் பேச்சு!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் தொண்டர்கள் அதிர்ச்சி!
Petrol Diesel Price Hike: பேரதிர்ச்சி! பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
பெட்ரோல், டீசல் விலை திடீர் உயர்வு - மக்களுக்கு ஷாக் தந்த மாநில அரசு
Factcheck : கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி?
Factcheck : கச்சத்தீவு மீட்பு ஆலோசனை குழுவின் தலைவராக அண்ணாமலையை நியமித்தாரா பிரதமர் மோடி?
Vijay Sethupathi :  நான் என்னை தான் ரொம்ப மிஸ் பண்றேன்.. வைரலாகும் விஜய் சேதுபதி பேச்சு
நான் என்னை தான் ரொம்ப மிஸ் பண்றேன்.. வைரலாகும் விஜய் சேதுபதி பேச்சு
Embed widget