மேலும் அறிய

காதலிப்பதை பெற்றோரிடம் சொன்ன ஆசிரியருக்கு அடி உதை - தனக்கு கிடைத்த பரிசு என ஆசிரியர் வேதனை..!

கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் சாதிய பிரிவினை அதிகம் காணப்படுவதாக கூறப்படுகிறது. தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாக உள்ளது என்கின்றனர் பொதுமக்களும் பெற்றோர்களும்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை பிரிவு தலைவராக பணியாற்றி வரும் பேராசிரியர் சிவசங்கரன் என்பவரை 4 மாணவர்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகளை போலீசார் அழித்து விட்டதாக தாக்குதலுக்கான சிவசங்கரன் குற்றம்சாட்டியுள்ளார்


காதலிப்பதை பெற்றோரிடம் சொன்ன ஆசிரியருக்கு அடி உதை - தனக்கு கிடைத்த பரிசு என ஆசிரியர் வேதனை..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை பிரிவு தலைவர் பேராசிரியர் சிவசங்கரன். இந்தக் கல்லூரியில் பி.ஏ.கணிதம் 3ம் ஆண்டு படிக்கும் ராமர் என்ற மாணவரும், அதே வகுப்பில் படிக்கும் மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை பேராசிரியர் சிவசங்கரன் கண்டித்துள்ளது மட்டுமின்றி இருவரின் பெற்றோருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


காதலிப்பதை பெற்றோரிடம் சொன்ன ஆசிரியருக்கு அடி உதை - தனக்கு கிடைத்த பரிசு என ஆசிரியர் வேதனை..!

இந்நிலையில், நேற்று காலையில் பேராசிரியர் சிவசங்கரன் தனது துறை பிரிவு அலுவலகத்தில் இருந்த போது மாணவர் ராமர், அதே கல்லூரியில் படிக்கும் சிவசுந்தர ராமன், சுரேஷ் மற்றும் ஒருவர் என 4 பேர் எப்படி தங்களது காதலை பற்றி வீட்டில் சொல்லாலம் என்று கூறி வாக்குவாதம் செய்ததது மட்டுமின்றி சிவசங்கரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சிவசங்கரன் மயக்கமடைந்தார். இதையெடுத்து அருகில் இருந்த மற்ற பேராசிரியர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்தும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தாக்குதலில் ஈடுபட்டதாக மாணவர் சுரேஷ், சிவசுந்தரராமன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாக தரப்பில் தெரிவித்துள்ளனர்.

 

காதலிப்பதை பெற்றோரிடம் சொன்ன ஆசிரியருக்கு அடி உதை - தனக்கு கிடைத்த பரிசு என ஆசிரியர் வேதனை..!

 

இதுகுறித்து அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் பேராசிரியர் சிவசங்கரன் கூறுகையில், மாணவர்களின் காதலை கண்டித்தேன், அதற்கு கிடைத்த பரிசு தான் எனக்கு அடி உதை, தன்னை தாக்கிய காட்சிகள் கல்லூரியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமிராவில் உள்ளதாகவும், அதனை காவல்துறை அழித்து விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் ராமர், சிவசுந்தர ராமன், சுரேஷ் மற்றும் ஒரு மாணவர் என 4 பேர் மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சாதிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே போன்று சுரேஷ், சிவசுந்தர ராமன் ஆகியோரிடம் பேராசிரியர் சிவசங்கரன் தவறாக நடக்க முயன்றதாக குற்றச்சாட்டு அடிப்படையில் பேராசிரியர் சிவசங்கரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விசாரித்த போது, கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருவதாகவும், தற்போது கல்லூரியில் சாதிய பிரிவினை அதிகம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாக உள்ளது என்கின்றனர் பொதுமக்களும் பெற்றோர்களும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
பணத்தைக் கேட்டா 'பிட்டு துணியோடு' அடிப்பாங்களா? - உயிருக்கு பயந்து ஓடிய ஏஜென்ட்கள் - நடந்தது என்ன?
பணத்தைக் கேட்டா 'பிட்டு துணியோடு' அடிப்பாங்களா? - உயிருக்கு பயந்து ஓடிய ஏஜென்ட்கள் - நடந்தது என்ன?
விழுப்புரம் அருகே சோகம்... வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட மினிவேன் டிரைவர் திடீர் மரணம்!
விழுப்புரம் அருகே சோகம்... வீட்டில் மீன் குழம்பு சாப்பிட்ட மினிவேன் டிரைவர் திடீர் மரணம்!
சோழபுரத்தில் அதிரடி: ரூ.50 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ புகையிலைப் பொருட்கள் குழிதோண்டி அழிப்பு
சோழபுரத்தில் அதிரடி: ரூ.50 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ புகையிலைப் பொருட்கள் குழிதோண்டி அழிப்பு

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
என்எல்சி பங்குகள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் - விஜய் சொன்னது என்ன?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
EV Velu: எவ வேலு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்தது என்னென்ன தெரியுமா?
ADMK:
ADMK: "வெயிட் பண்ணுங்க.. முதலமைச்சர் ரீல்ஸ் எடுக்கனும்.." விஜய்யை விளாசிய அதிமுக!
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
KTM-க்கு டஃப் ஃபைட்! மிரட்டலான 457cc ட்வின் சிலிண்டர் எஞ்சினுடன் Aprilia Tuono 457! என்னென்ன புதுசு தெரியுமா?
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
தங்க மோதிரமா? தாயின் உயிரா? தவெக அரசு மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
புலிகள் காப்பகங்களில் திடக்கழிவு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?
பட்ஜெட் விலை.. சீனியர் சிட்டிசன்களுக்கு பெஸ்ட் இ ஸ்கூட்டர்! Yo Drift, Yo Edge விலை எவ்ளோ?
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
Embed widget