மேலும் அறிய

காதலிப்பதை பெற்றோரிடம் சொன்ன ஆசிரியருக்கு அடி உதை - தனக்கு கிடைத்த பரிசு என ஆசிரியர் வேதனை..!

கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் சாதிய பிரிவினை அதிகம் காணப்படுவதாக கூறப்படுகிறது. தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாக உள்ளது என்கின்றனர் பொதுமக்களும் பெற்றோர்களும்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை பிரிவு தலைவராக பணியாற்றி வரும் பேராசிரியர் சிவசங்கரன் என்பவரை 4 மாணவர்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகளை போலீசார் அழித்து விட்டதாக தாக்குதலுக்கான சிவசங்கரன் குற்றம்சாட்டியுள்ளார்


காதலிப்பதை பெற்றோரிடம் சொன்ன ஆசிரியருக்கு அடி உதை - தனக்கு கிடைத்த பரிசு என ஆசிரியர் வேதனை..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத்துறை பிரிவு தலைவர் பேராசிரியர் சிவசங்கரன். இந்தக் கல்லூரியில் பி.ஏ.கணிதம் 3ம் ஆண்டு படிக்கும் ராமர் என்ற மாணவரும், அதே வகுப்பில் படிக்கும் மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை பேராசிரியர் சிவசங்கரன் கண்டித்துள்ளது மட்டுமின்றி இருவரின் பெற்றோருக்கும் இது குறித்து தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


காதலிப்பதை பெற்றோரிடம் சொன்ன ஆசிரியருக்கு அடி உதை - தனக்கு கிடைத்த பரிசு என ஆசிரியர் வேதனை..!

இந்நிலையில், நேற்று காலையில் பேராசிரியர் சிவசங்கரன் தனது துறை பிரிவு அலுவலகத்தில் இருந்த போது மாணவர் ராமர், அதே கல்லூரியில் படிக்கும் சிவசுந்தர ராமன், சுரேஷ் மற்றும் ஒருவர் என 4 பேர் எப்படி தங்களது காதலை பற்றி வீட்டில் சொல்லாலம் என்று கூறி வாக்குவாதம் செய்ததது மட்டுமின்றி சிவசங்கரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சிவசங்கரன் மயக்கமடைந்தார். இதையெடுத்து அருகில் இருந்த மற்ற பேராசிரியர்கள் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்தும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தாக்குதலில் ஈடுபட்டதாக மாணவர் சுரேஷ், சிவசுந்தரராமன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாக தரப்பில் தெரிவித்துள்ளனர்.

 

காதலிப்பதை பெற்றோரிடம் சொன்ன ஆசிரியருக்கு அடி உதை - தனக்கு கிடைத்த பரிசு என ஆசிரியர் வேதனை..!

 

இதுகுறித்து அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் பேராசிரியர் சிவசங்கரன் கூறுகையில், மாணவர்களின் காதலை கண்டித்தேன், அதற்கு கிடைத்த பரிசு தான் எனக்கு அடி உதை, தன்னை தாக்கிய காட்சிகள் கல்லூரியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமிராவில் உள்ளதாகவும், அதனை காவல்துறை அழித்து விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் ராமர், சிவசுந்தர ராமன், சுரேஷ் மற்றும் ஒரு மாணவர் என 4 பேர் மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சாதிய வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதே போன்று சுரேஷ், சிவசுந்தர ராமன் ஆகியோரிடம் பேராசிரியர் சிவசங்கரன் தவறாக நடக்க முயன்றதாக குற்றச்சாட்டு அடிப்படையில் பேராசிரியர் சிவசங்கரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விசாரித்த போது, கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருவதாகவும், தற்போது கல்லூரியில் சாதிய பிரிவினை அதிகம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாக உள்ளது என்கின்றனர் பொதுமக்களும் பெற்றோர்களும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
லோடு இறக்க 3 நாள் தாமதம் !! லாரி டிரைவரை இரும்பு ராடால் அடித்துக் கொன்ற உரிமையாளர்
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
மது குடிக்க பணம் கேட்டு டார்ச்சர்...கணவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி
காதலிக்கு பரிசு தர மளிகை கடைக்காரர் மனைவி கொலை ? 15 சவரன் கொள்ளையடித்த வாலிபர் சிக்கியது எப்படி
காதலிக்கு பரிசு தர மளிகை கடைக்காரர் மனைவி கொலை ? 15 சவரன் கொள்ளையடித்த வாலிபர் சிக்கியது எப்படி
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
DMK vs BJP : பாஜகவிற்கு ஆதரவா.? நாடாளுமன்றத்தில் திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
பாஜகவிற்கு ஆதரவா.? திமுகவின் நிலை என்ன.? ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
TNPSC: க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
க்ரூப்-1 தேர்வு தேதியை மாற்றி அறிவித்த டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் - எப்போது? எத்தனை பணியிடங்கள்?
TN Weather Update: 4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
4 மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் - சென்னையில் மழை? தமிழக வானிலை எச்சரிக்கை
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TTV Statement : விஜய் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் போலி கடிதம்.! என் புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க- சீறிய டிடிவி
விஜய் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் போலி கடிதம்.! என் புகாருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க- சீறிய டிடிவி
Embed widget