மாலைக் கண் அப்பா... மது போதை சிறுமி... சீரழித்த காமக்கொடூரர்கள் கைது!
கொடைக்கானலில்15 வயது சிறுமிக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேர் போக்சோ சட்டத்தில் கைது.
கொடைக்கானல் செண்பகனூர் பகுதியில் 15 வயது சிறுமிக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்த மூவர் போக்சோ சட்டத்தின் கீழ் கொடைக்கானல் போலீசார் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செண்பகனூர் அய்யர்கிணறு பகுதியில் வசிப்பவர் தேவதாஸ்(42) ,இவருக்கு மாலை கண் நோய் தென்படுவதால் மாலை நேரத்தில் இவருக்கு கண்தெரியாது என கூறப்படுகிறது. இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில் 15 வயது மகளும் இவருடன் சேர்ந்து வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
தினந்தோறும் இவரது உறவினர் கண்ணன்(40) மற்றும் இவரது கூட்டாளிகளான ராஜ்குமார்(31),மணிகண்டன்(22) உள்ளிட்ட மூவரும் மதுபாட்டில்கள் வாங்கி வந்து தேவதாஸ் என்பவரின் வீட்டில் வைத்து மதுகுடிப்பதையே வழக்கமாக வைத்துள்ளனர் . மேலும் தேவதாஸ் தனது மகளுக்கு சிறு வயது முதலே மது குடிக்க வைத்து அடிமையாக்கி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கொடைக்கானல் செண்பகனூர் அய்யர்கிணறு பகுதியில் 15 வயது சிறுமி குடித்து விட்டு உளறிவருவதாக அப்பகுதி மக்கள் சைல்டு லைனுக்கு புகார் அளித்தனர். சைல்டு லைன் அமைப்பினர் கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், மகளிர் காவல் துறையினர் தேவதாஸ் என்பவரின் வீட்டில் சென்று பார்த்த போது தேவதாஸ் அளவுக்கு அதிகமாக குடித்து சுயநினைவை இழந்துள்ள நிலையில் இருந்ததாகவும் சிறுமி மது மயக்கத்தில் இருந்துள்ளார்.
இதனை பார்த்த காவல் துறையினர் சிறுமியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கண்ணன்(சிறுமியின் மாமா) அடிக்கடி குச்சியால் அடித்து பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் மேலும் ராஜ்குமார், மணிகண்டன் ஆகிய இருவர் மது குடித்து விட்டு சிறுமியை மது குடிக்க வைத்து தினந்தோறும் தனி தனியாக பாலியல் தொந்தரவு அளித்ததாக சிறுமி கூறியது விசாரணையில் தெரியவந்தது, இதனையடுத்து கோக்சோ சட்டத்தின் கீழ் அவர்களை கைது செய்து கொடைக்கானல் மகளிர் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை தினமும் மது கிடைப்பதற்காக தெரிந்தே இதற்கு சம்மதித்தார் என்பதும் தெரியவந்துள்ளது. சிறுமிக்கு இருந்த மது போதை பழக்கத்தை பயன்படுத்தி தொடர்ந்து சிறுமியை நாசம் செய்து வந்தது தெரியவந்துள்ளது. சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்து, அவரை உளவியல் ரீதியாக தயார் படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அத்துடன், வேறு யாராவது சிறுமியிடம் அத்துமீறினார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்த உள்ளனர். கூட்டு பாலியல் வன்கொடுமையில் சிறுமியை சீரழித்த மூவரின் செயல் கொடைக்கானலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets