மேலும் அறிய

‘உதட்டில் முத்தமிடுவது இயற்கைக்கு மாறான குற்றமல்ல' - பாலியல் குற்ற வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?

14 வயது சிறுவனின் தந்தை போலீஸில் புகார் செய்ததை அடுத்து அந்த நபர் கடந்த வருடம் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் நீதிபதி அனுஜா பிரபுதேசாய் பிறப்பித்த உத்தரவில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவின் கீழ் உதட்டில் முத்தமிடுவதும், அன்புடன் அரவணைப்பதும் இயற்கைக்கு மாறான குற்றங்கள் அல்ல என்று கூறிய மும்பை நீதிமன்றம், சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கியது. 

பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் சிறுவன் மும்பையில் உள்ள புறநகர் பகுதியில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவருக்கு சொந்தமான கடைக்கு ஆன்லைன் கேமை ரீசார்ஜ் செய்வதற்காக செல்வது வழக்கம். ஒரு நாள் ரீசார்ஜ் செய்ய கடைக்குச் சென்றபோது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் தனது உதட்டில் முத்தமிட்டதாகவும், தனது அந்தரங்க உறுப்புகளைத் தொட்டதாகவும் சிறுவன் தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, சிறுவனின் தந்தையின் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் கடைக்காரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 377 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஐபிசியின் 377வது பிரிவு உடலுறவு அல்லது வேறு எந்த இயற்கைக்கு மாறான செயலையும் தண்டனைக்குரிய குற்றமாக ஆக்குகிறது. ஐபிசியின் 377வது பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை என்பது அதிகபட்ச தண்டனை, இந்த பிரிவின் கீழ் ஜாமீன் பெறுவதும் கடினம்.


‘உதட்டில் முத்தமிடுவது இயற்கைக்கு மாறான குற்றமல்ல' - பாலியல் குற்ற வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?

இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி பிரபுதேசாய், சிறுவனின் பாலியல் வன்கொடுமை அறிக்கை அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ஆதரிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக விதிக்கப்பட்ட போக்சோ பிரிவுகளின்படி அதிகபட்சமாக ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும், அது அவருக்கு ஜாமீனுக்கும் தகுதியுடையது என்றும் நீதிபதி கூறினார். மேலும், இயற்கைக்கு மாறான பாலுறவு என்பது இந்த வழக்கில் முதன்மையான பார்வைக்கு பொருந்தாது என்றும் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் அறிக்கையும், எஃப்.ஐ.ஆர் முதன்மையான பார்வையும், குற்றம் சாட்டப்பட்டவரின் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு முத்தமிட்டதைக் குறிக்கிறது என்று நீதிபதி கூறினார். இது தனது பார்வையில் ஐபிசியின் 377வது பிரிவின் கீழ் முதன்மையான குற்றமாக இருக்காது என்றும் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே ஒரு வருடம் காவலில் இருந்ததால், இந்த வழக்கின் விசாரணை விரைவில் தொடங்க வாய்ப்பில்லை என்று நீதிபதி குறிப்பிட்டார். மேற்கூறிய உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு விண்ணப்பதாரருக்கு ஜாமீன் வழங்கலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதாவது,  பாலியல் குற்றத்துக்கான தண்டனை வழங்கப்படும் என்றும், இந்த செய்கைகள் இயற்கைக்கு மாறான குற்றப் பிரிவுகளில் சேராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget