மேலும் அறிய

கழுத்தறுத்து மனைவியை கொன்ற கார்த்திக்... கையெழுத்திடும் போது கைவிலங்கோடு ‛எஸ்கேப்’!

ஓசூர் அருகே செல்போனில் பேசிய மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கார்த்திக் என்பவர், சிறைச்சாலைக்கு அழைத்து சென்றபோது கை விலங்குடன் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட் டம் தேன்கனிக்கோட்டை அடுத்த ரங்கசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் வயது (38). இவர் ஓசூரில் உள்ள ரப்பர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரூபா வயது (31). இவர்களுக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில்  ரூபா அடிக்கடி செல்போனில் பேசிவந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பின்னர் சென்ற வாரம்  வீட்டிற்கு வந்த கார்த்தி,  ரூபா செல்போனில் பேசும் போது கையும் களவுமாக பிடித்தார் .இதனால் ரூபாவிடம் ஏற்பட்ட தகராறால் ரூபா கோபித்து கொண்டு இரண்டு குழந்தைகளுடன் தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

 

அதனைத்தொடர்ந்து, சென்ற புதன்கிழமை கார்த்திக் மனைவியை அழைப்பதற்காக அவரது மாமியார் வீடான குஞ்சிகர் பாளையத்திற்கு சென்றார். அப்போது இரவு நேரம் என்பதால்  அங்கேயே தங்கி விட்டார். நேற்று முன்தினம் காலை குழந்தைகளை மாமியாருடன் வயலுக்கு அனுப்பிவிட்டு மனைவிடம் நீ என்னுடன் வந்துவிடு இதற்கு மேல் சந்தேகம் படமாட்டேன் என கூறியுள்ளார். வீட்டிற்கு வர மருத்த ரூபாவிடம் மீண்டும் தகராறில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த கார்த்திக் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி ரூபா கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அங்கு இருந்து கார்த்திக் தப்பி ஓடிவிட்டார்.

 



கழுத்தறுத்து மனைவியை கொன்ற கார்த்திக்... கையெழுத்திடும் போது கைவிலங்கோடு ‛எஸ்கேப்’!

 

 

பின்னர்  இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த துணைகாவல்கண்காணிப்பாளர் சங்கீதா மற்றும் தேன்கனிக்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் சுப்ரமணியன் தலைமையிலான காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் ரூபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தப்பியோடிய கார்த்திகை தேடிவந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் தேன்கனிக்கோட்டை காவல்நிலையத்தில் சரணடைந்தார், மேலும் கார்த்திக்கை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.


கழுத்தறுத்து மனைவியை கொன்ற கார்த்திக்... கையெழுத்திடும் போது கைவிலங்கோடு ‛எஸ்கேப்’!

பின்னர் அவரை நேற்று தேன்கனிக் கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் அவரை தர்மபுரி கிளைச்சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து காவல்துறையினர்  நேற்று மாலை தர்மபுரிக்கு அழைத்துச் சென்றனர்.

 


கழுத்தறுத்து மனைவியை கொன்ற கார்த்திக்... கையெழுத்திடும் போது கைவிலங்கோடு ‛எஸ்கேப்’!

 

அப்போது கிளைச்சிறை வாசலில் வாகனத்தை நிறத்திவிட்டு காவல்துறையினர் கார்த்திக்கை அழைத்துச்சென்று நுழை வாயிலில் உள்ள பதி வேட்டை பதிவு செய்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென கார்த்திக், காவலர்களை கீழே தள்ளிவிட்டு, அங்கிருந்து கைவிலங்குடன் தப்பியோடிவிட்டார். அதிர்ச்சியடைந்த காவலர்கள், கார்த்திக்கை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

இளங்கோவன் வீட்டு ரெய்டில் சிக்கியது என்ன? நள்ளிரவு வரை நடந்தது இது தான்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget