மேலும் அறிய

Dowry Death | ''அவன் சரியில்லை'' : மீண்டும் கடிதம்.. கேரளாவில் மீண்டும் ஒரு வரதட்சணை தற்கொலை! விடாது தொடரும் துயரம்!

வரனை வேண்டாமென பெண் வீட்டார் மறுத்துவிட்டனர். ஆனாலும் மோபியாவை பேஸ்புக்கில் கண்டுபிடித்த சுஹைல் அவரிடம் நட்பாக பேச்சுக்கொண்டுத்துள்ளார்.

வரதட்சணை என்னும் கொடுமையால் கேரளாவில் மேலும் ஒரு இளம்பெண் தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். காவல்நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவரது தற்கொலை கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவின் ஆலுவாவைச் சேர்ந்தவர் மோபியா. 21 வயதான இவர் தொடப்புழாவில் சட்டம் பயின்றுள்ளார். இவருக்கு வீட்டில் திருமண வரம் பார்த்த நிலையில்  திருமண ப்ரோக்கர் சுஹைல் என்பவரின் வரன் குறித்து தெரிவித்துள்ளார். ஆனால் அந்த வரனை வேண்டாமென பெண் வீட்டார் மறுத்துவிட்டனர். ஆனாலும் மோபியாவை பேஸ்புக்கில் கண்டுபிடித்த சுஹைல் அவரிடம் நட்பாக பேச்சுக்கொண்டுத்துள்ளார். இதனால் இருவருக்கும் பிடித்துபோக கடந்த வருடம் ஏப்ரலில் இருவருக்கும் இடையே திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்கு முன் பெண் வீட்டாரிடம் தான் துபாயில் பணியாற்றுவதாகவும், யூடியூப் பணியில் இருப்பதாகவும் சுஹைல் தெரிவித்துள்ளார். ஆனால் திருமணத்துக்கு பின் தான் திரைப்படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அதற்கு ரூ.40 லட்சம் வேண்டுமென்றும் மோபியாவிடம் கேட்டுள்ளார். 


Dowry Death | ''அவன் சரியில்லை'' : மீண்டும் கடிதம்.. கேரளாவில் மீண்டும் ஒரு வரதட்சணை தற்கொலை! விடாது தொடரும் துயரம்!

ஆனால் வரதட்சணையில் விருப்பம் இல்லாத மோபியா பணம் தரமுடியாது என மறுத்துள்ளார். அதற்கு பின் இருவருக்கும் இடையே பிரச்னை எழுந்துள்ளது. மோபியா தந்தை கூறிய தகவலின்படி, வரதட்சணை கேட்டு மிரட்டி மோபியா உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார். சுஹைல் வேலை எதுவுமே பார்க்கவில்லை. மோபியாவின் வருமானத்திலேயே அவர் நாட்களை ஓட்டியுள்ளார். தொடர்ந்து பிரச்னை அதிகரிக்க இது தொடர்பாக ஆலுவா காவல் நிலையத்தில் நவம்பர் 22ம் தேதி புகாரளித்துள்ளார் மோபியா. காவல் நிலையத்தில் குடும்பத்தினர் கூடி இருக்கும் போதே மோபியாவிடம் கடுமையாக நடந்துகொண்டுள்ளார் சுஹைல்.

இதனால் மனம் வருந்திய மோபியா, வீட்டிற்கு வந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். அவர் எழுதியுள்ள தற்கொலைக் கடித்தத்தில், '' வரதட்சணை புகாரை கண்டுகொள்ளாத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்ட தகவலின் அடிப்பையில் சுஹைல் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வரதட்சணை புகாரை விசாரிக்காத காவல் அதிகாரி மீது துறை ரீதியிலான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மோபியா தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டப்படி போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். 

 முன்னதாக, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதே நிரம்பிய இளம் பெண் விஸ்மயா மர்மமான முறையில் தன்னுடைய கணவர் வீட்டில் இறந்திருந்தார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் வரதட்சணைக்கு எதிராக அம்மாநில அரசு பல நடவடிக்கைகளை  எடுத்தது. ஆனாலும் மீண்டும் ஒரு உயிர் வரதட்சணைக்காக காவு வாங்கப்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE: இரவு 10 மணிவரையில் 12 மாவட்டங்களில் மழை: வானிலை மையம் அறிவிப்பு
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
Embed widget